Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அறிஞரும் இளையனும் – மூன்று கடினமான கேள்விகள்

Posted on August 16, 2014 by admin

நீண்டகாலமாக ஒரு இளைஞர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் தாயகம் திரும்பிய பொழுது, அவர் பெற்றோரிடம் “ஒரு மார்க்க அறிஞரை காட்டுங்கள், அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்” என்றார்.

அவரது பெற்றோரும் அவரை ஒரு மார்க்க அறிஞரிடம் அழைத்து சென்றார்கள்..

இளைஞர் : நீங்கள் யார்? என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?

மார்க்க அறிஞர் : நான் அல்லாஹுவின் அடிமை.. இறைவன் நாடினால் உங்களுக்கு பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்..

இளைஞர் : எனக்கு மூன்று கேள்விகள் இருகின்றன.

1. இறைவன் இருக்கிறானா? அப்படி இருந்தால் அவனின் உருவத்தை காட்டுங்கள்..

2. தக்தீர் (விதி) என்றால் என்ன?

3. ஷைத்தான் தீயால் படைக்க பட்டவன் என்றால், இறுதியில் அவனை ஏன் தீயாலான நரகத்தில் அல்லாஹ் போடுகிறான்?    அது அவனுக்கு வலிக்க போவது இல்லை, ஏனென்றல் நரகமும், ஷைத்தானும் தீயால் படைக்கப்பட்டவைகள். அல்லாஹ் இதை கூட யோசிக்கவில்லையா?

உடனே மார்க்க அறிஞர் அந்த இளைஞனை அறைந்தார்..

இளைஞர் : (வலியோடு) ஏன் என்மேல் கோபம் கொள்கிறீர்கள்?

மார்க்க அறிஞர் : நான் கோபம் கொள்ளவில்லை. உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறினேன்..

இளைஞர் : (வியப்போடு) என்ன சொல்கிறீர்கள்?

மார்க்க அறிஞர் : நான் உங்களை அடித்த பிறகு எவ்வாறு உணருகிறீர்கள்?

இளைஞர் : எனக்கு வலிக்கிறது..

மார்க்க அறிஞர் : நீங்கள் வலியை நம்புகிறீர்கள?

இளைஞர் : ஆமாம்.

மார்க்க அறிஞர் : அப்படி என்றால், அதன் வடிவத்தை காட்டுங்கள்..

இளைஞர் : என்னால் முடியாது.

மார்க்க அறிஞர் : அது தான் முதல் கேள்விக்கான பதில்.. இறைவனின் உருவத்தை பார்க்காமலே அவனை உணர முடியும்.. (மேலும் தொடர்ந்தார்) நேற்று இரவு நான் உங்களை அடிப்பேன் என்று கனவு கண்டீர்களா?

இளைஞர் : இல்லை

மார்க்க அறிஞர் : இன்று என்னிடம் அடி வாங்குவேன் என்று நினைத்தீர்களா?

இளைஞர் : இல்லை..

மார்க்க அறிஞர் : இது தான் தக்தீர் (விதி). (மேலும் தொடர்ந்தார்) என் கை எதனால் செய்யப்பட்டது??

இளைஞர் : சதையால் செய்யப்பட்டது..

மார்க்க அறிஞர் : உங்கள் முகம்?

இளைஞர் : சதையால் தான்.

மார்க்க அறிஞர் : நான் அறைந்தது வலித்ததா?

இளைஞர் : ஆமாம்.

மார்க்க அறிஞர் : இது தான் உங்கள் மூன்றாவது கேள்விக்கு பதில்.. ஷைத்தானும், நரகமும் தீயால் படைக்கபட்டவையாக இருந்தாலும், இறைவன் நாடினால் அது ஷைத்தானுக்கு கடும் வேதனையை தர கூடியாதாக அமையும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 23 = 25

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb