Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெருநாள் தினத்தன்று..!

Posted on July 27, 2014 by admin

பெருநாள் தினத்தன்று..!


அல்ஹம்துலில்லாஹ்.

அருள் வளம் மிக்க அந்த திருநாளில் பின்வரும் காரியங்களை செய்யுங்கள்…

1) முடிந்தவரை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பகிருங்கள்.

2) உங்கள் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்ய முயலுங்கள்.

3) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் உங்கள் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி பயனுள்ள வகையில் இந்த நல்ல நாளை செலவழிக்கு திட்டமிடுங்கள்.

4) வெறும் புத்தாடை அணிதலும் மாமிச உணவு சாப்பிடுதலும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைக்க முயலுங்கள்.

5) உங்கள் பெற்றோரோடும் சில மணி நேரங்களை செலவழியுங்கள். இதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணருங்கள்.  அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் மூலம் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும்  பெறக்கூடும். 

6) உங்கள் மாற்று மத நண்பர்களை உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்யுங்கள் அதன் மூலம் உங்கள் விருந்தோம்பல் மூலமாய் அவரை மகிழ்விப்பதொடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவருக்கு விளக்க(தாவா  செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

7) நீங்கள் விருந்து சமைக்கிறீர்கள் என்றால், அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம் சுகாதாரம்  காக்கப்படுவதோடு, உங்கள் அண்டை வீட்டாருக்கு மன சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும். 

8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும் உலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்யுங்கள்.

உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், நீதிமிக்க -ஜனநாய ரீதியிலான ஆட்சி மலரவும் வேண்டி இரு கரம் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை புரியுங்கள்.

9) தேவையற்ற விவாதங்களை தவிருங்கள்.

நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் மன்றாடுங்கள்,

மேலும் இப்படிப்பட்ட பயணங்களின் மூலம் சர்வதேச அளவில் சகோதரத்துவமும் மறுமலர்ச்சியும் ஏற்படவும் இறைவனை வேண்டுங்கள்.

10) இறுதியாக முகம் அறியா என்னையும் உங்கள் துவாவில் நினைவில் வையுங்கள்.

நம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து  இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் மாற்று மத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்.

இது போன்ற பண்டிகை தினங்கள் மூலம் நம்மிடையே பரஸ்பர அன்பையும், சகோதரத்துவையும் பரிமாறிக் கொள்வோம்.

பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள  நம் இந்திய தேசம் என்றென்றும்  அமைதிப் பூங்காவாக திகழவும், நம் அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் மிளிரவும் வாழ்த்துகிறோம்.

ரமளானின் இறுதியில்  சொல்ல வேண்டிய செய்தியை இப்போதே ஏன் சொல்கிறேன் என்றால், நாம் நம்மை முன் தயாரிப்பு செய்து கொள்ள இந்த நினைவுறுத்தல் பயன் படக்கூடும்.

இந்த ரமலான் நமக்கு எல்லா வளங்களையும், இறை அருளையும் அள்ளித் தரட்டுமாக.

ஆமீன்.

இறையன்பிற்காக,

அபு முஜாஹிதா 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = 10

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb