o இஸ்ரேல் கொலை செய்வதில் ஹிட்லரை விஞ்சி விட்டது –
o கத்தார் தீவிரவாதத்துக்கு உதவி செய்யும் நாடு அல்ல, உங்களைப்போன்று சிவிலியன்களை கொல்லும் அறிவற்ற செயல்களில் கத்தார் என்றைக்காவது ஈடுபட்டுள்ளதா?” –துருக்கி பிரதமர் எர்துகான்
இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்னங்கள் துளைத்த முகங்களோடு கதற வைக்கும் கோலங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு காஸா குழந்தையும் “அப்பா இன்று நானும் இறந்துவிடுவேனா” என்ற கேள்வியை கேட்பது வழக்கமாகிவிட்டது.
இஸ்ரேல் நிகழ்த்தும் யுத்தமே, காஸா குழந்தைகள் மீதுதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கடற்கரையில் விளையாடிய சிறுவர்களை பலியெடுத்துள்ளது இஸ்ரேல்.
கடந்த சில நாட்களில் மட்டும் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
உலகை உலுக்கும் வகையில் காஸாவில் பாலஸ்தீன குழந்தைகள் பேரவலத்தை எதிர்கொண்டிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் பதிவும் செய்து வருகின்றன.
போர்முனையிலும் கூட பாலஸ்தீன குழந்தைகள், எங்கள் அம்மாக்களையும் குழந்தைகளையும் தொலைத்துவிட்டோமே என்று கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில் உலகெங்கிலுமிருந்து இஸ்ரேலுக்கு கடும் கண்டனங்களை உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. சிலி நாடு இஸ்ரேலுடனான தூதரக உறவையே முறித்துக் கொண்டுள்ளது. தற்சமயம் துருக்கியும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் இஸ்ரேலை கடும் வார்த்தைகளால் கண்டித்து வருகிறார்கள்…
அரபு நாட்டின் தலைவர்கள் யாரும் இவ்வாறு பேசாத நிலையில் எர்துகான் மட்டுமே இஸ்ரேலை கடுமையாக சாடி வருகிறார்…
நேற்று எர்துகான் இஸ்ரேலை இப்படிக் குறிப்பிட்டார்;
இஸ்ரேலியர்கள் மனசாட்சியற்றவர்கள். அவர்களின் உள்ளத்தில் இரக்கமோ #மனிதப் பண்போ இல்லை. கண்ணியம் என்பதே அவர்களுக்கு தெரியாது போல. காடுகளில் வாழும் வனவிலங்குகளாக வாழும் அவர்கள் இரவிலும், பகலிலும் ஹிட்லரிசத்தை மதமாக பின்பற்றுகிறார்கள்…
இஸ்ரேல் கொலை செய்வதில் ஹிட்லரை விஞ்சி விட்டது பாலஸ்தீன மக்களை இரக்கமின்றி கொல்கிறார்கள்.
எர்துகானின் இப்பேச்சுக்கள் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் ஒரு சாட்டைஅயடி என்றே சொல்லலாம்.
கத்தார் தீவிரவாதத்துக்கு உதவி செய்யும் நாடு அல்ல – எர்துகான்..
பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் வாழும் மக்களுக்கும் காசாவில் வாழும் மக்களுக்கும் பில்லியன் கணக்கில் டாலர்களை தந்து உதவும் நாடு கத்தார்.
கத்தார் அமீர் தமீமும், அவரது தந்தை ஹம்தும் பாலஸ்தீனத்துக்கு பன்னெடுங்காலமாக உதவி வருகிறார்கள். மேலும் உலகெங்கும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிமல்லாத நாடுகளில் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கத்தார் தான் அடைக்கலம் தருகிறது.
எகிப்து ஆட்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட டாக்டர் கர்ளாவி, சவூதி அரசினால் விரட்டப்பட்ட டாக்டர் அஹ்மரி ஆகியோருக்கு கத்தார் தான் அடைக்கலம் தந்து அவர்களை வைத்து உம்மத்துக்கு கல்வி ஆராய்ச்சிகளை வழங்கி வருகிறது.
மேலும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் பிள்ளைகள் மற்றும் எகிப்து இக்வான்களுக்கு கத்தார் தான் அடைக்கலம் தந்து உதவி வருகிறது. இக்வான்களுக்கும், ஹமாசுக்கும் கத்தார் செய்து வரும் உதவிகள் சாதாரணமானவை அல்ல..
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ஜனாதிபதி #சிமன்பெரஸ் கத்தாரை கடுமையாக சாடினார். உலகில் #தீவிரவாதிகளுக்கு பெருமளவு பண உதவி செய்யும் நாடு கத்தார் என்றார்.
இதற்கு பதிலடியாக துருக்கி பிரதமர் எர்துகான் நேற்று (24.07.14) நிருபர்கள் பேட்டியில் கூறியதாவது; “கத்தார் தீவிரவாத நாடும் அல்ல. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடும் அல்ல. அது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் உதவி வருகிறது. உண்மையில் உலகில் தீவிரவாத நாடு இஸ்ரேல் தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காசாவில் பயங்கரவாதத்தை அந்நாடு தான் நிகழ்த்தி வருகிறது. கத்தாரும் – நாங்களும் (துருக்கி) ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டோம். எதனைக் கூறி களங்கப்படுத்த முயன்றாலும் சரி.”
மேலும் எர்துகான் இப்படிக் கேட்டார்; “உங்களைப்போன்று சிவிலியன்களை கொல்லும் அறிவற்ற செயல்களில் கத்தார் என்றைக்காவது ஈடுபட்டுள்ளதா?”
முகப்பில் உள்ளத் புகைப்படம்: துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான்