Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ்விடத்தில உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்…

Posted on July 16, 2014 by admin

அல்லாஹ்விடத்தில உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்…

  மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து 

இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ”துஆ”க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.

1) நீங்கள் அல்லாஹ் தான் உங்கள் இறைவன் என அறிந்து வைத்து இருக்கிறிர்கள் ஆனால் அதற்கான எந்த உரிமையும் அவனிடத்தில் நீங்கள் கொடுக்கவில்லை.

2) அவனுடைய வேதம் திருக்குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் நீங்கள் அதன் படி அமல்கள் செய்யவில்லை.

3) அல்லாஹ் கொடுத்த உணவை உண்டீர்கள் ஆனால் அதற்காக அவனிடத்தில் எந்த நன்றியையும் நீங்கள் செலுத்தவில்லை.

4) அல்லாஹ்வின் தூதர், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என ஏற்று கொண்டிர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவில்லை.

5) ஷைத்தான் உங்கள் எதிரி என ஒப்புகொண்டிர்கள். ஆனால் உங்களின் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கிறீர்கள்.

6) மரணம் உறுதியானது என நம்புகிறீர்கள் ஆனால் அதற்கான எந்த முன் எர்ப்பாட்டையும் நீங்கள் செய்யவில்லை.

7) சொர்க்கம் உள்ளது உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் உள்ளே நுழைவதற்கு எந்த நல்ல அமலையும் நீங்கள் செய்யவில்லை.

8) நரகம் உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் இருந்து பாதுக்காப்பு பெற எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை.

9) பிறரின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள் ஆனால் உங்கள் குறைகளை மறைத்து கைவிட்டு விடுகிறீர்கள்.

10) மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் அதில் இருந்து எந்த படிப்பினையும் விழிப்புணர்வும் நீங்கள் பெறவில்லை.

இந்த 10 காரணங்களுக்காக அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.

-மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களின் பயானில் இருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb