Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?

Posted on June 23, 2014 by admin

இயற்கையில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இல்லை! -ஏன்?

பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை,  விதவை இழிவு, முதுமையில் புறக்கணிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நம்மோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பிராணிகளிடமும், பறவைகளிடமும் மீன்களிடமும் இன்ன பிற ஜீவிகளிடமும் காணமுடிவதில்லை. அவைகளில் ஆண் இனங்கள் தங்கள் பெண் இனங்களிடம் ஆதிக்க வெறி காட்டுவதோ பெண் இனங்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துவதோ இல்லை.

ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதும் இனப்பெருக்கத்தின் சுமைகளை தாங்குவதும் குஞ்சுகளை பராமரிப்பதும் அங்கு பெண் இனங்களே. இரு பாலாரின் செயல்பாடுகளில் ஏற்றதாழ்வுகள் இருந்தாலும் அவை என்றும் இணக்கமாக வாழ்வதையே நாம் காண்கிறோம். இந்த இணக்கம் அவைகளிடம் எவ்வாறு சாத்தியமாகிறது?

உண்மை இதுதான்! இயற்கையில் மனிதனைத் தவிர நாம் காணும் அனைத்து ஜீவிகளும் இறைவன் வகுத்து தந்துள்ள பாதையில் அடிபிறழாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இறைவன் தங்களுக்கு கொடுத்த இயற்கையிலும் அமைப்பிலும் இன்ன பிற விடயங்களிலும் திருப்தி கண்டு வாழ்கின்றன.

எதிர் பாலாரின் மேன்மை கண்டு பொறாமைப் படுவதும் இல்லை அவர்களின் தாழ்மை கண்டு அகங்காரம் கொள்வதும் இல்லை. தங்கள் இயற்க்கைக்கு மீறிய எதையும் அடைய வேண்டும் என்று ஆசைப் படுவதும் இல்லை. அவை அவற்றைப் படைத்த இறைவனைப் பொருந்தி அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்கின்றன என்பதை நாம் காணலாம். இப்படிப்பட்ட கீழ்படிதலே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது.

ஆம், அவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்வதன் மூலம் பெறப்படும் அமைதிக்கே இஸ்லாம் என்று பெயர்.

இஸ்லாம் என்ற அரபு மொழி வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும் 

முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர். பெயர், உடை, தோற்றம் போன்ற வெளி அடையாளங்களை வைத்து யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது.

இயற்கையில் நாம் காணும் மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்…….. என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு  – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன.

எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்….. என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன.

அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது!  எப்போது அவன் மனதார இறைவனுக்கு கீழ்படிந்து வாழ உறுதிமொழி பூண்டு அவ்வாறு வாழ ஆரம்பிக்கிறானோ அப்போதுதான் முழுமையான முஸ்லிம் ஆகிறான்.

ஆம் அவ்வாறு உண்மையான முஸ்லிமாக ஆணும் பெண்ணும் வாழுபோது அவர்களால் மற்றவர்களின் உரிமைகளை மதிக்காமலோ நிறைவேற்றாமலோ வாழமுடியாது. இறைவன் தங்களுக்கு வழங்கிய இயற்கையிலோ அதற்கேற்ப விதித்த கடமைகளிலோ மாற்றாருக்கு அவன் வழங்கிய உரிமைகளிலோ உடமைகளிலோ அவர்கள் அதிருப்தியுற மாட்டார்கள். அவ்வாறு வாழும்போது ஏற்படும் இழப்புகளையும் வேதனைகளையும் இறைவனின் பொருத்தம் கருதி பொறுத்துக் கொள்வார்கள்.

source: http://quranmalar.blogspot.in/2014/06/blog-post_22.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb