கோழையாக வாழ்ந்திடாதே!
கோழையாக வாழ்ந்திடாதே எந்த
கொடுமைக்கும் நீ பயந்திடாதே
ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை
யாரிடமும் மறந்தும் காட்டிடாதே
பேச்சிலே பணிவாக இருந்தாலே
பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே
பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை
பெருகிடும் உனது உழைப்பாலே
நேர்மையய் என்றும் மறக்காதே
நெஞ்சிலே துணிவை இழக்காதே
வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை
விஞ்சிடும் உனது அறத்தாலே
வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு
வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே
வாய் நிறைய சிரிப்பதாலே-அவன்
வாழ்கையை பெரிதாய் நினைக்காதே
தோல்விக்கு பயந்து இருக்காதே
தொடரும் கவலைகள் மறைந்தாலே
தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே
source: http://www.kaviyazhi.blogspot.com/