Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரு தாயின் கருணையால் தூக்குக்கயிறில் இருந்து காப்பாற்றப்பட்ட குற்றவாளி!

Posted on May 3, 2014 by admin

ஸமீரா அலி நஜாத்: கருணையின் நிறைகுடமான அன்னை!

ஈரான் நாட்டில் கடைசி நேரத்தில் தூக்கு கயிறில் இருந்து குற்றவாளியைக் காப்பாற்றிய கொல்லப்பட்ட நபரின் தாய்! என்ற செய்தி கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யார் அந்த தாய்? தனது மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்க அந்த அன்னைக்கு எவ்வாறு முடிந்தது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

2007-ஆம் ஆண்டு தெருச் சண்டை ஒன்றில் அப்துல்லாஹ் ஹுஸைன் ஸாதிக் என்ற தனது நேசத்திற்குரிய மகனை பறிகொடுத்து தீராத துக்கத்தை சுமந்துகொண்டு வாழ்ந்த ஸமீரா அலி நஜாத் என்ற அந்த அன்னைக்கு மீண்டும் ஒரு பேரிடி.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் விபத்து ஒன்றில் தனது இளைய மகனையும் பறிகொடுத்தார்.இது என்ன சோதனை? துயரத்தின் தீரா நினைவுகளை சுமந்துகொண்டு இரவு,பகல்களை கழித்து வந்தபோதுதான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகன் அப்துல்லாஹ்வை கொலைச் செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்த செய்தி அவருக்கு கிடைத்தது.

10 மாதம் சுமந்து பெற்ற 19 வயதான தனது ஆருயிர் மகனை கொலைச்செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் விதித்த மரணத்தண்டனையை நேரில் காண வந்திருந்தார் அன்னை ஸமீரா அலி.குற்றவாளிக்கு மரணத்தண்டனயை நிறைவேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கினர்.கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டன.முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டது.தூக்கு மேடையில் குற்றவாளி ஏற்றப்பட்டார்.

கழுத்தில் கயிறு சுற்றப்பட்டது.இனி லீவரை அழுத்தவேண்டியது மட்டுமே பாக்கி.அவ்வளவு நேரமும் தனது மகனை கொன்றவரின் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை ஒரு பார்வையாளராக நின்று கண்டுகொண்டிருந்த அந்த தாயின் இதயம் பிசைந்தது.அவரை நோக்கி ஓடிச் சென்றார்.குற்றவாளியின் கழுத்தில் சுற்றப்பட்ட கயிறையும், முகத்தில் அணிவித்திருந்த துணியையும் அவரே விலக்கினார்.

தனது செல்ல மகனை கொலைச் செய்தவனுக்கு மன்னிப்பு அளித்துவிட்டு கண்ணீர் மல்க அவ்விடத்தை விட்டு அகன்றார் அந்த தாய்.கண்ணீர் வற்றிய கண்களில் கருணையின் ஒளி பிரகாசிக்கும் அந்த தாயை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, தன்னை கடைசி வேளையில் தூக்கில் இருந்து தப்பிக்க வைத்த அந்த தாய்க்கு நன்றி கூட தெரிவிக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றுக்கொண்டிருந்தார் குற்றவாளியான அந்த நபர்.

தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த வேதனையை அனுபவித்திருந்த அந்த தாய், ஒரு வேளை தனது மகனை கொலை ச்செய்தவனின் தாயைக்குறித்து சிந்தித்திருக்கலாம்.தான் அனுபவித்த வேதனையை இன்னொரு தாய் அனுபவிக்க கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம்.பத்து மாதம் சுமந்து உடல் உபாதைகளையும், வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு இரு ஆண் மகன்களை பெற்றெடுத்த அந்த தாய், அவ்விருவரையும் இழந்தபோது உள்ளத்தால் துடித்துப்போயிருப்பார்.அந்த வேதனையை வெகு விரைவில் மறக்கத்தான் முடியுமா?ஆனாலும், தனது மகனை கொன்றவனை தனது கருணையால் விடுவித்தார்.இங்கேதான் அன்னை என்ற வார்த்தையின் பூரணமான பொருளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

மனித உள்ளங்களில் அகிலங்களை படைத்த இறைவனாகிய அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் கருணைதான் அந்த மன்னிப்பின் பொருளாகும்.இந்த அன்னையின் கருணை, நம்மைப் படைத்த இறைவனின் கருணையில் நூறில் ஒரு பகுதியாகும்.அவ்வாறெனில் அந்த மாபெரும் படைப்பாளனான அல்லாஹ்வின் கருணை எவ்வளவு அபாரமானது!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:”அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.”(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம் , திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)
அ.செய்யது அலீ

source: http://puduvalasainews.blogspot.in/2014/04/blog-post_3720.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 17

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb