Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முதுமை சுமையல்ல

Posted on April 29, 2014 by admin

முதுமை சுமையல்ல

வயதான அம்மாள் ஒருவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைத் துடைத்து, சுத்தப்படுத்தி, உணவூட்டி மிகவும் அன்புடன் கவனித்து வந்தனர். ஒருநாள் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘ஏனம்மா கவலைப்படுகிறீர்கள். இது எங்கள் கடமைதான்’’ என்றனர் மகனும் மருமகளும்.

அதற்கு அந்த அம்மையார் சொன்னார், ‘‘நான் அதற்குக் கவலைப்படவில்லை. நீயும் உன் மனைவியும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்கள் வயதான காலத்தில் உன் மகனும் மருமகளும் உன்னை இப்படிப் பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கவலைப்பட்டு அழுகிறேன்’’ என்றாராம்.

முதுமை என்பதை தானும் மற்றவரும் சுமக்கும் ஒரு பெருஞ்சுமையாக சிலர் நினைக்கின்றனர். உண்மையில் முதுமை என்பது தனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி.. ஒரு சுமையல்ல. அது பல ஆண்டுகள் உழைத்த பிறகு நமக்குப் பிடித்த விஷயங்களை, நமக்குப் பிடித்த நேரத்தில் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு வசந்தகாலம்.

முதுமை என்றால் பழசாவது என்றும் பொருள் அல்ல. முதுமை என்றால் முதிர்ச்சி அடைதல் என்று பொருள். 1900-ம் ஆண்டு மனிதனின் சராசரி வயது 35தான். இப்போது அது கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம். இது 2050-ம் ஆண்டு 50 சதவீதமாக உயரும் என்பது முதியோருக்கான மகிழ்ச்சியான செய்தி.

நினைத்துப் பாருங்கள்.. ஒரு நாட்டின் 50 சதவீத மக்கள் தங்களைச் சுமையாகவும், எஞ்சியுள்ள வாழ்நாளைக் கசப்பானதாகவும் நினைத்தால் என்ன ஆவது?

புகழ்பெற்ற வயலின் மேதை யெஹுதி மெனுஹினை (Yehudi Menuhin) ஒருமுறை கேட்டார்கள், ‘‘ஒரு பரபரப்பான வயலின் கச்சேரிக்குப் பின் என்ன செய்து ரிலாக்ஸ் செய்வீர்கள்?’’ என்று. அதற்கு அவர் சொன்னார், ‘‘சூடா ஒரு கப் டீ சாப்பிடுவேன். அப்புறம் எனக்கே எனக்காக வயலின் வாசிக்கத் தொடங்குவேன்’’ என்று.

முதுமைக் காலமும் அப்படியே. உங்களுக்கே உங்களுக்கான இசையை இசைக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு ஊரிலும் பூங்காக்கள் அல்லது அமைதியான பொது இடங்கள் உண்டு.

அங்கு சென்று பாருங்கள். உங்களைப் போலவே முதியோர் ஆங்காங்கே பேச யாருமற்று தனியாக இருப்பார்கள். அவர்களுடன் சென்று உரையாடுங்கள். ஒரு குழுவை ஒருங்கிணையுங்கள். இத்தனை காலம் நீங்கள் கற்ற கல்வியை, அனுபவத்தை, கலையை, திறமைகளை அங்கு வரும் இளைய தலைமுறையினருக்கு கற்பியுங்கள்.

நூறு பேர் வராவிட்டாலும் ஐந்து பேர் வந்தால் போதும். யோகா தெரிந்தால் யோகா வகுப்புகள் எடுக்கலாம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியா? குடும்ப அட்டை பெறுதல், ஓட்டு போடும் முறை, வருமானச் சான்று, இடச் சான்று பெறுதல் ஆகியவற்றில் உள்ள நேர்மையான நடைமுறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். அப்புறம் பாருங்கள்.. உலகமே புதியதாகிவிடும்!

– மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

source: http://tamil.thehindu.com/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 78 = 83

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb