Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ?

Posted on April 13, 2014 by admin

வார்த்தைக்கு அஞ்சுவதோ? ஊத்தைக் காசுக்கு கெஞ்சுவதோ?

மனித உயிர்களை மயக்கி மலிவாக்கும்
மந்தத்தன மனிதர் அவர்கள்!
சுடர்முகம் கருத்த ஊர்கள்!
போதை மருந்தால் வயிறு வளர்ப்போர்
வார்த்தைக்கு அஞ்சலாமா?
ஊத்தைக் காசுக்கு கெஞ்சலாமா?

கள்ளக்கடத்தலின் காதலர் – பணக்
காமம் கொள்ளும் கவுசியர்! கடுங்
கயமைத்தனத்தின் தோழர்கள்!
குறும்பர் இவரது நன்கொடை, விருந்துகள்
கொள்வது இங்கு கூடுமா? கொண்ட
நட்பு இறை வழியில் சேர்க்குமா?

அடுக்கு வீடுகள், அழகு விடுதிகள், செல்வம்
அனைத்தும் காக்கும் கருதுகின்றார்!
கொக்கரிப்பு எக்களிப்புடன் ஓடுகின்றார்
கொடிய பொருள் விற்று வாழுகின்றார்!
இவர்கள் முஸ்லிம் சமூகக் கண்ணியரா?
இஸ்லாம் விரும்பும் புண்ணியரா?

இஸ்லாமே வாழ்வாய் நபிவழி நாடிடும்
இனிய தீனுக்குரியவர்கள்! ஞானம் கற்றவர்கள்!
மெய்ஞ்ஞானப் பாட்டையில் சென்றவர்கள்
இமை மூடுதலிலும் ஷரி=அத்தைக் கண்டவர்கள்
இவர் செயலுக்கு கண்மூடி நிற்கலாமா?
எமக்கெதற்கு என்று எண்ணலாமா?

வேதம் தெரிந்தவர் பாதை அறிந்தவர்
வேறெங்கோ நோக்கி நின்றார் எவர்
விதியென்று நீங்கி நின்றார்!
அண்ணல் நபி வழியினைக் கண்டவர்
ஆமையாய் அடங்கலாமா? அகம்
ஊமையாய் ஒடுங்கலாமா?

உம்மத்தின் பாதுகாவலர்! ஓரணியாகி
ஒரு குரல் கொடுப்பீர்! சமூகச்
சீர்கேட்டைத் தடுப்பீர்!
நான்கு கலீபா நற்பண்பு இயல்பினை
தன் செயலால் காட்டுவீர்! முஸ்லிமிற்கு
நற்பண்பு ஊட்டுவீர்-

– சோதுகுடியான், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2014

source: http://jahangeer.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb