Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறுதியும் – உறுதியும்

Posted on April 8, 2014 by admin

இறுதியும் – உறுதியும் 

 

எததனை காலம் வாழப்போகிறாய் மனிதா?

நீ எத்தனை காலம் வாழப்போகிறாய்?

நீ வந்த பாதையை விட போகும் பாதையே வெகு அருகே

ஆனாலும் அது பற்றி நீ கவலை கொள்ளவில்லை.

 

எப்படியோ வாழ்கிறாய். அது ஒரு குறுகிய காலமே.

ஆனால் நீ செல்லவிருக்கும் ஊரோ புது யுகமே.

சென்றவர் அதுபற்றி உனக்கு எச்சரிக்கவில்லை.

வந்தவருக்கோ அது பற்றி தெரிய நியாயமில்லை.

உதித்ததை உதிர்த்தால்? உறைக்கவில்லை,

 

உனக்குள்ள சொத்துக்கள் ஏழு தலைமுறைக்கு உள்ளதாம் !!!

ஆனால் நீயோ? உன் தலைமுறையில் குறுகிய கால வயதுக்காரன் !!!

முடிவு எப்படியிருந்தாலும், முடிவு, முடிவுக்கு வரும்போது, எல்லாம் முடிந்துவிடுகின்றது.

ஊண், உறக்கம், ஓய்வு, தனிமை, இனிமை, என வாழ்வின் எல்லா பரிமாணங்களை,

யாருக்காக இழக்கிறாய்? உனக்கென்றால் அது ஒட்டாது,ஊருக்கென்றால் அது நிலைக்காது,

பிள்ளைகளுக்கென்றால் அது போதாது,

 

சில்லறையாய் சேர்த்த பணம்.சீர்கேடு விளிம்பில்.

அனுபவிக்கவோ நீயில்லை.உறவினர் சோக விளிம்பில்.

எதிர்பாராதது நடக்கும்போதுதானே திகில். ஆம் நீ நினைக்காததே நடந்தது.

மதம் மீறி நம்பும் ஒன்று மரணம்,அதில் எல்லாமே சரணம்.

 

சேர்த்தவைகளை அனுபவிக்காத நிலை ஒரு கொடுமை,

போகும் இடத்துக்கு சேர்க்காததோ அதைவிட கொடுமை.

சேர்க்கும்போதே தெரியாதா அனுபவிக்கமாட்டோம் என்று.

இறக்கும்போது தெரியாதா கொண்டுபோகமாட்டோம் என்று.

 

பலரின் உரிமைகளை, உடமைகளை, உணர்வுகளை, வளங்களை,

வாழ்வுகளை, வசதிகளை, வாழும்காலத்தில் உனதாக்கிக்கொண்டாய்.

ஆனால் நீ?? கல்லறையின் மண்ணாகிப்போனாய்.

 

வாழும்போது மனித உருவின் மிருகமாய்,

இறக்கும்போது மனித எண்ணங்களின் இறுக்கமாய்.

 

வங்கியில் உன் கணக்கில் ஏராளம்,

மறுமையில் உன் கணக்கில் பாதாளம்.

 

அரசர்கள் முதற்கொண்டு ஆண்டிகள் வரையும்,

மன்னர்கள் முதற்கொண்டு மண்ணாங்கட்டி வரையும், மரணம் யாரை விட்டதப்பா?

 

உலகின் மூவர் மட்டுமே இறப்பை கண்டு அஞ்சுவதில்லை.

லட்சிய போர்வீரன்,

உலகம் சேர்க்காதவன்,

மறுமைக்காக சேர்த்தவன்

இந்த பட்டியலில் ஒன்றில் கூட நீ இல்லை.

 

பதவியில் உள்ளவர் இருந்தால் ராணுவ அணிவகுப்பு.

வசதியில் உள்ளவர் இறந்தால் ஊரார் அணிவகுக்ப்பு,

வறுமையில் உள்ளவர் இறந்தால் சிலரால் அணிவகுப்பு,

உன்னை விட்டு செல்வதில் அனைவரும் அணிவகுப்பு.

 

வாழ்ந்தோம் இறந்தோம் என்பது மிருகமப்பா,

வாழ்வோர் மனத்தில் இருத்தலென்பது மனிதனப்பா.

அறுபது எழுபது ஆண்டுக்கால வாழ்வு நிலையல்லவே,

ஆயுள்முடிவுவில் ஈமான் இல்லையேல் நிறைவில்லையே.

 

சாணில் சாணக்கியனாய், முழத்தில் முட்டாளாய், முயற்சிக்கு முற்றுவை.

படித்தது அறிவாயினும் பட்டதே மேன்மையானது.

பட்டதை பகர்வதும், படிப்பினை பெறுவதும் மனித இயல்பு.

எண்ணத்தை அழகாக்கு,எண்ணியதை எழுத்தாக்கு.
 

எண்ணமும் எழுத்தும்:- தூது ஆன்லைன் வலைப்பூ ஆசிரியர்.

source: http://tamilhome.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 49 = 55

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb