Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நடுத்தர வர்க்க நகரவாசிகள் ஆபத்தானவர்களா?

Posted on April 6, 2014 by admin

நடுத்தர வர்க்க நகரவாசிகள் ஆபத்தானவர்களா?

நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பணக்காரர்களையும் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களை பார்த்து ஒருவித மோகம்.

பணக்காரர்கள் பயன்படுத்தும் கார், பங்களாக்கள் அவர்கள் உடுத்தும் உடைகள் வரை எப்படியாவது நாமும் இந்த மேட்டுக்குடி வாழ்க்கைக்கு மாறிவிட வேண்டும் என்கிற தீராத வெறி.

இதனால் தவணைக்கு வீட்டு உபயோக பொருட்கள், கார்கள் வாங்குவது முதல் நுனிநாக்கில் ஆங்கிலத்தை வரவழைப்பது வரை என்று அயராது பாடுபடுகிறார்கள். மேலும் குழந்தைகளை இங்கிலீஷ் கான்வென்ட்களில் சேர்க்க வட்டிகடை சேட்டு வீட்டுக்கு நடையாய் நடக்கிறார்கள்.

சென்னையில் வாழ்வதால் “தங்கள் மேட்டுகுடிகள்” என்கிற மனோபாவத்தை இவர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்கிறார்கள். இதன் விளைவு இவர்களை கடன் வாங்கியாவது கார், பைக்குகள் வாங்குகிறார்கள். வாரத்தில் ஒரு முறை ஸ்பென்செர், சிட்டி பிளாசாக்களில் பொருள்கள் வாங்கவில்லை என்றால் தங்கள் கவுரவம் சரிந்து விடும் என்கிற மனோநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த மனோபாவத்தால், வரவுக்கு மீறிய செலவு என்கிற நிலைக்கு ஆளாகி பெரும் கடன் சுமைக்குள் சிக்கித்தவிக்கிறது சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கம். இதனால் நகரங்களில் வாழும் பல இலட்சம் குடும்பங்கள் வட்டிகடனில் மூழ்கி தவிக்கிறது. இந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு ஆசைபடுவதால் கலாச்சார மற்றும் ஒழுக்க கேடுகளும், தற்கொலைகள் மற்றும் குற்றங்களும் பெருகிய இடமாக நகரங்கள் மாறிவருகின்றன.

சென்னை போன்ற பெரும் நகரங்களில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் தாங்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இவர்கள் அந்த கிராமங்களில், டவுன் பஞ்சாயத்களில் வசிக்கும்போது எப்படி இருந்தார்கள் என்பதை மறந்து நகரங்களில் உள்ள மேட்டு குடிகளை பார்த்து அதைபோல் தாங்களும் ஆகவேண்டும் என்கிற ஒருவித வெறி அவர்களை தங்களுக்கு கீழே உள்ள அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் உயர்வை பற்றி எண்ணுவோ அல்லது அவர்களுடைய பிரச்சனனைகளை பற்றி பேசவோ தடையாக அமைகிறது.

இந்த நடுத்தரவர்க்க பணக்கார நோய் பிடித்த சமூகம் பல்வேறு தருணங்களில் ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுகின்றது கூடங்குளம் அணு உலையால் அடையப் போகும் பாதிப்புகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடினால் இந்த நோய் பிடித்த சமூகம் அதை எதிர்த்து நையாண்டி செய்கிறது அல்லது எதிர்த்து களம் ஆடுகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் நமதூர் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று போராடினால் இவர்கள் வால்மார்ட் வரவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

வால்மார்ட் வந்தால் இந்தியா அமெரிக்காவாக மாறிவிடும் என்று நம்புகின்றனர். கழிப்பறை வசதி இல்லாத ஒரு நாட்டில், குடிசைகளில், தெரு ஓரங்களில் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் முதல் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் நடத்தரவர்கத்தில் பெரும்பான்மையினர் மவுனமே காக்கின்றனர். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி, பிள்ளைகளை இங்கிலீஷ் கான்வென்ட்யில் படிக்க வைத்து சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக்குவது எப்படி என்பதே இவர்களது முக்கிய கவலை.

நடுத்தர வர்க்கம் மேட்டுக்குடி பணக்கார மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எங்களின் ஆவல்.

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

source: http://www.sinthikkavum.net/search/label/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 31

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb