ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அத்தனையும் அப்பட்டமான மோசடியே!
ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அத்தனையும் அப்பட்டமான மோசடியே! கற்பனை செய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த கற்பனைகளையெல்லாம் கருத்துக்கணிப்பு எனும் தூண்டிலை வீசி, மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான செயலை மீண்டும் மீண்டும் ஊடகங்கள் செய்து வருவதை மக்கள் அறியாமல் இல்லை.
இருந்த போதும் ”அடிக்க அடிக்க அம்மியும் நகரும்” எனும் பழமொழியை அழுத்தமாக நம்பும் இந்த பொய்யர்களின் புளுகு மூட்டை விரைவில் ஒட்டுமொத்தமாக வெளிவரும்போது, ஆம் ஆத்மியின் ஒருங்கினைப்பாளர் கேஜ்ரிவால் சொல்வது போல் இந்த பொய்யான ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவை அதாள பள்ளத்துக்குள் தள்ளூம் ஆபத்தான முயற்சிகள் இவர்களாலேயே அறங்கேற்றப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன .
இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமும், அதிகமான எம்.பி. தொகுதிகளையும் கொண்ட, இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காத பி.ஜே.பி. அங்கு பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்று ஊடகங்கள் அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளதே இந்த ஊடகங்களின் முகமூடியை கிழிக்க போதுமானதாக இருக்கிறது.
கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைக்கூலியாகவே இன்றைய ஊடகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும் கல்ந்தாய்வு எனும் பெயரில் மக்களின் நேரத்தை வீணாக விழுங்கிக்கொண்டு சோம்பேரிகளை உருவாக்குவதில் முதலிடத்தில் இன்றைய ஊடகங்கள் திகழ்கின்றன என்பதும் உண்மை.
மோடியை எப்பாடு பட்டாவது வெற்றிபெறச்செய்து அவரை பிரதமராக்கினால் தான் இன்னும் அதிகமாக கொள்ளையடிக்க முடியும் எனும் சுயநல வெறி பிடித்து அலையும் பணமுதலைகளுக்கு உதவுவதன் மூலம் 100 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதில் இந்த ஊடகங்களுக்கிடையே கடும்போட்டியே நிலவுகிறது.
ஒரு ஊடகம் சொல்கிறது அ.தி.மு.க.வுக்கு 25 இடமும், தி.மு.க.வுக்கு 10 இடமும் கிடைக்கும் என்று. மற்றோர் ஊடகம் சொல்கிறது அ.தி.மு.க. வுக்கு 19 இடம் தான் என்று ஆக இவை அத்தனையும் பொய் என்பதற்கு இதிலுள்ள வேறுபாடுகளே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
‘இந்தியா டுடே’ … : எந்த கருத்து கணிப்பும் பாஜக’வுக்கு சாதமாக இல்லை!
கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தும் பயனில்லை!!
கூட்டணி கட்சிகள் கணக்கெடுப்பிலும் குழப்ப நிலை!!!
பாஜக தரப்பில், 4,000 கோடி ரூபாய்களை மீடியாக்களுக்கு கொட்டிக் கொடுத்தாலும், இதுவரை வெளிவந்துள்ள எந்த கருத்து கணிப்பிலும், பாஜக ஆட்சியமைக்கும் என்று சொல்ல முடியவில்லை.
“CNN-IBN” வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி 234 தொகுதிகளைப் பிடிக்கும் எனக்கூறுகிறது.
அதாவது, மொத்தமுள்ள 543 ல் 234 தொகுதிகள் போக, 329 எம்.பி.க்கள், பாஜக அல்லாத (காங்கிரஸ் தலைமையிலான) அரசு அமையவே ஆதரவு வழங்குவார்கள், என இதன் மூலம் தெளிவாகிறது.
கருத்துக் கணிப்பில் உள்ள குழப்பங்கள்
1) தனித்து போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியை பாஜக கூட்டணிக் கட்சியாக கணக்கில் எடுக்கப்படுகிறது.
2) தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 15 இடங்கள் கிடைக்கும் என சொல்கின்றன, காசுக்கு மாரடிக்கும் மீடியாக்கள்.
3) உத்தரப் பிரதேசத்தில், தற்போது 10 எம்பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு 53 இடங்களை பாஜக பிடிக்குமாம்,
3.A) உ.பி.யில் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிவதால் தான், பாஜக இந்த இலக்கை அடைய வாய்ப்புள்ளது, என்கின்றன, ஊடகங்கள்.
இதுபோன்ற மேலோட்டமான சில விஷயங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தாலே (தெலுங்கு தேசம் 15 + தமிழகம் 15 + உ.பி.யில் அதிகப்படியான 40 தொகுதிகள்) 70 இடங்களை பாஜக இழக்கிறது, என்பதை எளிதில் புரிந்துக் கொள்ள முடியும்.
வாங்கிய காசுக்காக வாதாடும் மீடியாக்களின் கணிப்பில் சொல்லப்படும் 230 ல், 70 ஐ கழித்தால் அதிக பட்சமாக பாஜக கூட்டணியால் 160 இடங்களைத்தான் பெற முடியும்.
(ஒவ்வொரு மாநிலத்தைப்பற்றி இவர்கள் எடுத்துள்ள கருத்துக்கணிப்புகளின் முரண்பாடுகளை தொகுக்க இந்த பக்கம் போதாது…)
இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் ஆரம்பமாகப்போகும் இந்த நேரத்திலும் கூட தனது கட்சியின் திட்டங்களைப்பற்றி வெளியிட வக்கில்லாத ஒரு கட்சிதான் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது என்று சொல்வதற்க்குக்கூட கொஞ்சமும் தயங்காத ஊடகங்கள் உலகிலேயே நமது நாட்டு ஊடகங்களாக மட்டுமே இருக்க முடியும்.
மோடி பிரதரானால் முஸ்லிம்கள் என்றில்லை ஒட்டுமொத்த இந்திய குடிமக்களுக்கும் ஆபத்து என்பதை மக்கள் உணராமல் இல்லை. பணமுதலைகள் இன்னும் கொழுத்துப்போகத்தான் அவரது ஆட்சி உதவும் என்பதை புரியாத கற்கால மக்களல்ல இன்றைய இந்திய மக்கள். அப்படியிருந்தும் ஊடகங்கள் தொடர்ந்தார்ப்போல் பொய்ப்பிரச்சாரம் செய்வதில் சலிப்படையவே இல்லை.
நாட்டைக்காக்க போர்முனையில் உயிரை துச்சமாக எண்ணி போரிடும் நமது வீரமிக்க ஜவான்கள் ஒருபுறம் என்றால் பணமுதலைகள் மென்மேலும் கொழிப்பதற்காக நாட்டுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைப்பதில் போட்டிபோடும் ஊடகங்கள் மற்றொருபுறம். இதில் இவர்களுக்குப் பெயர் ”ஃபோர்த் எஸ்டேட்”…. கொடுமையாக இல்லையா…?!
உத்தர பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் கருத்தை இன்றைய தமிழ் ஹிந்துவில் வெளியாகியுள்ள செய்தியை இங்கு இடம்பெறச்செய்துள்ளோம். அதை படித்துப்பார்த்தாலே எவரும் புரிந்துகொள்ள முடியும் முஸ்லிம்களின் உதவியின்றி எவரும் வெற்றிபெற முடியாது என்பதை!
முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை!
– ரஷீதா பகத்
அனைவருக்குமான வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம், வகுப்பு ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம் என்றெல்லாம் கூறும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய கர்மபூமியான உத்தரப் பிரதேசத்தில், ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரண்டை மட்டும் ‘அப்னா தள்’ கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள 78 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிவைக்காமல் மேல்சாதியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியோ எல்லா தரப்பாருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருக்கிறது. முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், மேல்சாதியினரில் தாக்கூர்கள், பிராமணர்கள் என்று அனைத்துச் சமூகத் தவருக்கும் பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறது. அதே சமயம், “பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியைத் துண்டுதுண்டாக வெட்டுவேன்” என்று விஷம் கக்கும் பேச்சைப் பேசிய இம்ரான் மசூத் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை.
காங்கிரஸ் கட்சி 12 பெண்களையும் பா.ஜ.க. 10 பெண்களையும் உத்தரப் பிரதேசத்தில் நிறுத்தியிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு அவமதிப்பு!
உத்தரப் பிரதேச மக்கள்தொகையில் 17% ஆக இருக்கும் முஸ்லிம்கள், இந்த அவமதிப்பால் மிகவும் கொதித்துப்போயிருக்கின்றனர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கும் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லியும் சமீபத்தில் முஸ்லிம்களைச் சந்தித்து உரையாடி, ஆதரவைக் கோரினார்கள். நடந்த தவறுகளுக்காக மன்னிக்குமாறும் ராஜ்நாத் கோரிக்கை விடுத்தார். ஒரேயொருமுறை எங்களை ஆதரித்துப் பாருங்கள் என்று கூறிவிட்டு, தங்கள் சமூகத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம்கூட இல்லாவிட்டால் எப்படி என்று உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் பொருமுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் உங்கள் கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லையே ஏன் என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, வெற்றிபெறுவார் என்று நிச்சயம் தெரிந்தவர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிக்கிறோம் என்று பதில் அளித்திருக்கிறார் ராஜ்நாத் சிங். பிற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுத் திருக்கிறோம், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும், நாங்கள் வெறுப்பு வளர்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் 3 முஸ்லிம்களை நிறுத்தியிருக்கிறார்கள்!
15-வது மக்களவையில்…
15-வது மக்களவையில் ‘தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயம்’ என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டு, 7 முஸ்லிம்கள் இடம்பெற்றனர். அவர்களில் 3 பேர் காங்கிரஸ்காரர்கள். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். எஞ்சிய 4 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள, வகுப்புக் கலவரம் நடந்த முசாபர்நகர் பகுதியில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முஸ்லிம்கள் தங்களுடைய ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சிக்கு அளிக்கத் தொடங்கியிருப்பதில் வியப்பேதும் இல்லை.
தொடரும் புறக்கணிப்பு
2004-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து 10 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு ஒரு இடத்தைக்கூடத் தராமல், தங்கள்மீது கொண்டிருக்கும் அலட்சியத்தை பா.ஜ.க. வெளிப்படுத்துகிறது என்று படித்த முஸ்லிம்கள் பேசிக்கொள்கின்றனர். அப்படியொன்றும் தாங்கள் போட்டியிடுகிற 78 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்கு இல்லை. அந்தக் கட்சியே 40 முதல் 45 தொகுதிகள்வரைதான் தங்களால் வெற்றிபெற முடியும் என்று கருதுகிறது. அந்த நிலையிலும் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல அந்தக் கட்சி தயாராக இல்லை.
“ஒரேயொரு தொகுதியை அடையாளமாக முஸ்லிம் களுக்கு ஒதுக்கியிருந்தால்கூட அவர்களை ஆதரிக்கலாம் என்று நினைக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும், அதற்குக்கூட பா.ஜ.க. தலைமை தயாராக இல்லை” என்று லக்னௌவைச் சேர்ந்த துணி வியாபாரி முகம்மது அஃப்சர் விரக்தியுடன் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி 1998-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்துதான் வெற்றி பெற்றார். 1999-ல் அவரே தோற்றுவிட்டார். பா.ஜ.க-வில் இருக்கும் இன்னொரு முஸ்லிம் தலைவரான ஷாநவாஸ் உசைன் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டுகளாக மறுப்பு
உத்தரப் பிரதேசமே இப்படியென்றால், குஜராத்தில் எப்படி என்று ஊகிப்பதற்குச் சிரமப்படத் தேவையில்லை. அங்கும் பா.ஜ.க. சார்பில் ஒரு வேட்பாளர்கூட முஸ்லிம் கிடையாது. பா.ஜ.க-வை விடுங்கள், 1989-க்குப் பிறகு குஜராத்திலிருந்து மக்களவைக்குக் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு முஸ்லிம்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை!
குஜராத் மாநிலம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிறகு 1962 பொதுத்தேர்தலில் இரண்டு முஸ்லிம்கள் மட்டுமே பெரிய கட்சி சார்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் ஜோராபென் சாவடா என்பவர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் எந்தக் கட்சி சார்பாகவும் முஸ்லிம்கள் நிறுத்தப்படவில்லை. 1971-ல் புரோச் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரும் தோற்றுவிட்டார். இத்தனைக்கும் புரோச் தொகுதியில் 17% பேர் முஸ்லிம்கள்.
1977 தேர்தலில் இரண்டு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அகமதாபாதிலிருந்து இஷான் ஜாஃப்ரியும் புரோச்சிலிருந்து அகமத்பாய் முகமத்பாயும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இஷான் ஜாஃப்ரிதான் 2002 வகுப்புக் கலவரத்தின் போது கொல்லப்பட்டார். அகமத்பாய் முகமத்பாய் அடுத்த 2 பொதுத்தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றார். 1989 தேர்தலில் அவரும் தோற்றார். அதன் பிறகு, குஜராத்திலிருந்து முஸ்லிம்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவேயில்லை.
ஒடிசாவிலும்…
2004 பொதுத்தேர்தலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் பிரிந்து சென்றார். பா.ஜ.க-வின் மதச்சார்பற்ற தன்மை சந்தேகத்துக்குரியது என்று சாடினார். ஆனால், 15-வது மக்களவைக்கு ஒடிசாவிலிருந்தும் ஒரு முஸ்லிம்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
13 சதவீதமும் 5 சதவீதமும்
2009 தேர்தலுக்குப் பிறகு, மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 30 ஆகக் குறைந்துவிட்டது. அதற்கு முந்தைய அவையில் 35 பேர் இருந்தனர். மக்கள்தொகையில் 13% ஆக இருந்தும் மக்களவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் வெறும் 5% ஆக இருக் கிறது. இந்த 30 பேரில் 4 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்!
ரஷீத் ஆல்வியின் சவால்
வாரணாசியில் தன்னை வேட்பாளராக நிறுத்தினால் மோடியைத் தோற்கடித்து நகரின் மதச்சார்பற்ற தன்மையை நிரூபிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மோடியை எதிர்த்து திக்விஜய் சிங் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு வந்தபோது, நிற்பதற்குத் தயார் என்று அவரும் அறிவித்தார். அத்துடன் தொலைக்காட்சியில் என்னுடன் நேரடி விவாதத்துக்குத் தயாரா என்றும் மோடிக்கு அவர் சவால் விட்டார். நாட்டின் வரலாறு குறித்தும் புள்ளிவிவரங்கள் குறித்தும் அதிகம் தெரிந்திராத மோடியை வாதத்தில் வென்றுவிடலாம் என்று திக்விஜய் சிங் நம்புகிறார்
ரஷீத் ஆல்வி போட்டியிட விருப்பம் தெரிவித்ததை மோடியின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். காரணம் இல்லாமல் இல்லை. வாரணாசியின் மொத்த வாக்காளர்கள் 16 லட்சம் பேரில் முஸ்லிம்கள் சுமார் 3 லட்சம். அந்த வாக்குகளை ரஷீத் ஆல்வி பிரிப்பார் அல்லவா? இதுவரை வாரணாசி முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
“உங்களுக்குத் துணிவிருந்தால் காட்டில் சிங்கத்தைச் சந்தியுங்கள் அல்லது தேர்தலில் மோடியைச் சந்தியுங்கள்” என்று ட்விட்டரில் ஒருவர் சவால் விடுத்திருக்கிறார்.
“மோடி எதிர்ப்பு என்ற கங்கை ஆற்றில் திக்விஜய் சிங் வெறுமனே கையைக் கழுவிக்கொண்டு விடைபெற்றுவிட்டார், ரஷீத் ஆல்வி குதிக்கத் தலைப்பட்டுவிட்டார்” என்று இன்னொருவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிசினஸ்லைன், தமிழில்: சாரி, -தி இந்து