Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏமாற்றாதே ஏமாற்றாதே… ஏமாராதே ஏமாராதே…

Posted on April 2, 2014 by admin

குஜராத் முன்னேற்றம்? – பாஜகவிற்கு மற்றுமொரு பலத்த பின்னடைவு…

இந்தியாவின் உற்பத்தி தொழிற்சாலைகள் & அவை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் (2011-2012 காலக்கட்டத்திற்கானது) வெளிவந்துள்ளன.

இன்னும் பொதுவில் வெளியிடப்படாத இம்முடிவுகளை தி ஹிந்து ஆங்கில இதழ் சில மணி நேரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிமுக ஆளும் தமிழகம் முதல் இடத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா & ஆந்திரா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. பாஜக ஆளும் குஜராத்தோ நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.

இதில் அதிமுகவை தவிர்த்து, காங்கிரஸ் ஆந்திராவில் கடந்த பத்து ஆண்டுகளாகவும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு சவாலாக திகழும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், குஜராத்தில் பாஜக கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும் ஆட்சியில் இருப்பது குறிப்பட்டத்தக்கது. உற்பத்தி தொழிற்சாலைகள் போல பணவீக்க கட்டுப்பாட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் பின்னடைவிலேயே இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக வந்த மற்றொரு ஆய்வு கூறியிருந்தது.

 

ஆய்வு முடிவுகளை விளக்கும் படம்.

வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகளின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டிருக்கும் பாஜக, தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முகமூடி அணிந்து இம்முறை பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றது.

ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் தான் இந்த பிரச்சனைகள் அதிகமிருக்கின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் பிம்பம் ஏற்கனவே பலரால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முகமூடியும் அந்தோ பரிதாபம் என்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது.

ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது…. மோடியை முன்னேற்ற நாயகராக விலைபோன ஊடகங்கள் தான் பொய்யான செய்திகளை பரப்பி ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒவ்வொருநாளும் புது புது விதமாக ஏமாற்றி வருகின்றன.

”ஏமாற்றாதே ஏமாற்றாதே…. ஏமாராதே ஏமாராதே…” பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 − = 27

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb