Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அரசியலுக்கு மறுபெயர் அவலம்! (1)

Posted on March 8, 2014 by admin

அரசியலுக்கு மறுபெயர் அவலம்! (1)

“அரசியலுக்கு மறுபெயர் அவலம்” இன்றைய அரசியல் கட்சிகளின் அனுகுமுறையைப் பார்க்கும்பொழுது ”அரசியல்” எனும் சொல்லுக்கு ”அவலம்” எனும் சொல்லையும் சேர்க்க அகராதிகளுக்கு பரிந்துரை செய்யலாம் போல் தோன்றுகிறது. அன்று என்ன சொன்னார்கள் இன்று என்ன சொல்கிறார்கள்…. பாருங்கள்…

மணியனுக்கு கொளத்தூர் மணியின் மடல்!

இந்தியாவில் அடுத்து அமையப்​போகும் ஆட்சி எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் அது மக்கள் பிரச்னைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது என்றோ, அது ஊழலற்ற, நேர்மையான ஆட்சி என்றோ நினைத்து மயங்கும் மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை.

ஆனால், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அவர்தான் அதற்குத் தகுதியானவர் என்று ஊடகங்களும், சமூக வலைத்தளங்​களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டி நிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், முதலாளி​​களும் இதன் பின்னணியில் இருப்பது கண்கூடு. இந்தத் ‘திருப்பணியில்’ நாம் மிகவும் மதிக்கும் தோழர் தமிழருவி மணியனும், தன்னை இணைத்துக்கொள்ள முன்​வந்திருப்பது வியப்பையும் வேதனையை​யும் தருகிறது.

சுயநல, சந்தர்ப்பவாத, பதவி வெறி அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர், மோடியை பிரதமராக்குவதற்குக் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறார். தமிழகத்தில் ‘புதிய அரசியல் பூத்துக் குலுங்குவதற்கும்’ பா.ஜ.க-வுடனான அணியே அவசியம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். யாரோடு யார் கூட்டணி சேர வேண்டும் என்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், நரேந்திர மோடியையும் பா.ஜ.க-வையும் முன்னிறுத்துவதால் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றியே நம் கவலை.

நரேந்திர மோடி பா.ஜ.க. தேர்வுசெய்த பிரதமர் வேட்பாளர் என்பதைவிட, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-சின் செல்லப்​பிள்ளையாகக் கள​மிறக்கப்​​பட்டவர் என்பதே உண்மை. காந்தியார் முன்வைத்த ‘தேசியத்தை’ ‘போலி தேசியம்’ என்று ஒதுக்கித் தள்ளிய ஆர்.எஸ்.எஸ்., மனிதர்களைப் பிளவுபடுத்தும் வகுப்புவாதத்தையே உண்மையான தேசியவாதமாக வரையறுக்கிறது. பெரும்பான்மை மக்களை சமூக, பொருளாதார அடிப்படையில் தீர்மானிக்காமல், மதத்தின் அடையாளத்தை முன்னிறுத்தி தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர். மதச்சார்பற்ற, ஜனநாயக தேசியத்துக்கு மாற்று, மதவாதத்தை முன்னிறுத்தும் வகுப்புவாத தேசியம் என்று தோழர் தமிழருவி மணியன் வாதாடத் துணிவது மிகமிக ஆபத்தானது.

தமிழகத்தில் 15 சதவிகித வாக்காளர்கள் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பதாக மணியன் வரையும் சித்திரம் அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத் தேர்தல் களத்தில், கடைசியாக நடந்த 2011 தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி 2.2 சதவிகிதத்தைத் தாண்டியதே இல்லை. அது 15 சதவிகிதமாக திடீரென ஊதிப் பெருத்து நிற்கிறது என்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

‘ராமர் கோயில் விவகாரத்தை வளர்த்தெடுக்​கக்கூடாது, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்துசெய்யக் கூடாது’ என்று பா.ஜ.க-விடம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் மணியன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் பேசிய மோடியே இதற்குப் பதில்கூறிவிட்டார். காஷ்மீருக்குத் தனிச் சலுகை வழங்கியதை மட்டுமல்ல, இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக்கூட அவர் எதிர்த்திருக்கிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத் தந்தை கோல்வாக்கரின் கருத்தும்கூட!

இந்த மூன்று விவகாரங்களையும் கையிலெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்துதான் 1998-99-ம் ஆண்டுகளில் வாஜ்பாய், கூட்டணியை அமைத்தார். அவற்றில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் பங்கேற்றன. அந்தக் காலகட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த தோழர் தமிழருவி மணியன், ‘மதவாத பா.ஜ.க-வின் உறுதிமொழிகளை ஒருபோதும் நம்பமுடியாது. இந்தியாவின் ஆட்சி காவி பயங்கரவாதிகளின் கைகளிடம் போய்விடக்கூடாது’ என்று தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று அனல் பறக்கப் பேசியது நினைவுக்கு வருகிறது. இப்போது மட்டும் எப்படி நம்புகிறார்? அயோத்தியில் பூஜை மட்டுமே செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்து அனுமதிபெற்ற பா.ஜ.க-தான், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது.

மசூதி இடிக்கப்பட்டவுடன் அதை வன்மை​யாகக் கண்டித்த அத்வானிதான், பிறகு அதை நியாயப்படுத்தினார். குஜராத் இனப் படுகொலையின்போது, ‘மோடி பதவி விலக வேண்டும், ராஜ தர்மத்தைப் பின்பற்ற மோடி தவறிவிட்டார், எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன்’ என்று கண்டித்த வாஜ்பாய்தான் பிறகு, மோடி பதவியில் தொடர்வதை அனுமதித்தார். இவர்கள் தருகிற உறுதிமொழிகளை நம்பி ஏற்க முடியுமா என்பதை மணியன் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. மீது நமக்கும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. முன்னேற்றப் பாதையில் வளர்த்தெடுக்க முனையாமல், சந்தர்ப்பவாத, தனிமனித, ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியவர்கள் அவர்கள் என்பதும் உண்மைதான். ஆனாலும், மற்ற மாநிலங்களைவிட முன்னேறி இருக்கிறது. தமிழ் மண்ணில் பெரியார் உள்ளிட்ட பல முன்னோடிகள்​தான் இதற்கான அடித்தளத்தை உருவாக்கிச் சென்றிருக்​கிறார்கள். அதன் காரண​மாகவே மக்களிடம் பகையுணர்ச்சி​யைக் கட்டி எழுப்பிடத் துடிக்கும் மதவாத சக்திகள் தமிழகத்தில் ஆழமாகக் கால்பதிக்க முடியாமல் திணறுகின்றன. இந்த நிலையில், தமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும் வைகோ போன்ற தலைவர்களையும், ஒருபோதும் மதவாத அடையாளத்​தைத் தனது கட்சிக்குள் நுழைத்திடாத விஜயகாந்த் போன்றவர்களையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அணிசேர்க்க அழைத்து தமிழகத்தில் காவிக் கூட்டத்தின் ஆதரவுக் கரத்தை அதிகரிக்கச் செய்யும் ஆபத்துக்கு தோழர் மணியன் துணை போகலாமா?

அனைவரும் சொல்வதைப் போல அப்படி​யன்றும் குஜராத்தில் மோடி வளர்ச்சியை கொண்டுவந்துவிடவும் இல்லை. குஜராத் மாநிலம் உருவான காலத்தில் இருந்தே, தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் முன்னணியில்தான் இருக்கிறது. மோடியின் காலத்திலும் அது தொடர்கிறது. மனிதவள மேம்பாடு, எழுத்தறிவு, ஆண், பெண் பிறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு, தீண்டாமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலிலேயே குஜராத் இடம் பெற்றிருக்கிறது. மோடிக்குப் பெருமை சேர்க்கவே போலி என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. 97 இஸ்லாமியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நரோடா பாட்டியா கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் மாயா கொட்னானிக்கு, இந்த கோரத்தாண்​டவத்தை அரங்கேற்றியபிறகு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்தவர்தான் மோடி.

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்றால், கர்நாடகம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களிலும் அதே கதைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் விற்பனை, 2 லட்சம் கோடி காண்ட்லா துறைமுக ஊழல், எரிவாயுத் திட்டத்தை அன்னிய நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கியதில் 20 ஆயிரம் கோடி இழப்பு என்று ஊழல் குற்றச்சாட்டுகள் மோடியின் ஆட்சியின் மீது அணிவகுத்து நிற்கின்றன. குஜராத் அரசின் செயலால் பொதுத் துறைக்கு 2013-ம் ஆண்டு ரூ.4052 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமைக் கணக்காயரின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

போட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு கதவைத் திறந்துவிடத் துடிப்பதில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்​கிரஸில் இருந்து பா.ஜ.க. வேறுபட்டு நிற்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சிங்​களப் படைகளின் துப்பாக்​கிக் குண்டுகளைத் தமிழக மீனவர்கள் எதிர்கொண்​டார்கள். இலங்கை ராணுவத்தின் சக்தி​வாய்ந்த போர்க் கப்பல் வாஜ்பாய் காலத்தில் வழங்கப்பட்டது​தான்.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு, சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற நாடாளுமன்ற குழு ராஜபக்ஷே அரசு மறுவாழ்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம்​தான் வாசித்தது. மத்தியப் பிரதேச பா.ஜ.க. ஆட்சியோ, ராஜபக்ஷேவை புத்தர் கோயிலுக்கு அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்தது. அதற்காக, சாஞ்சி வரை தொண்டர்களை அழைத்துச் சென்று போராடியவர்தான் வைகோ.

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்றத்துக்கான பன்னாட்டு விசாரணை போன்ற கோரிக்கைகளிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளின் நிலையும் ஒன்றேதான். தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு, தமிழகத்தில் இருந்து ஆதரவுக்குரல் கொடுத்த தலைவர்களையும் இயக்கங்களையும் ‘தேசவிரோதிகள்’, ‘தண்டிக்கப்பட வேண்டிய பிரிவினைவாதிகள்’ என்று பேசிய, எழுதிய சுப்பிரமணியன் சுவாமி, துக்ளக் சோ உள்ளிட்​டவர்கள்​தான் மோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று உறுதியுடன் களமிறங்கி நிற்கிறார்கள்.

இவற்றைக் கருத்தில்கொண்டு, மக்களைக் கூறுபோடும் வெறுப்பு அரசியலை தேசியமாக்க முயற்சிக்கும் சனாதன அமைப்புகளிடம் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டிய எச்சரிக்கையை முன்வைப்பதே தோழர் தமிழருவி மணியன் ஏற்றுக்கொண்ட அரசியலுக்கு அறம் செய்வதாகும். காந்திய இயக்கம் நடத்தும் மணியன், காந்தியின் உயிரைப் பலிகேட்ட ஒரு தத்துவத்தை நியாயப்படுத்தும் அரசியலுக்குத் துணைபோவது காந்தியத்துக்கு இழைக்கும் அநீதி அல்லவா?

எண்ணெய் சட்டி சுடுவது உண்மைதான். அதற்காக நெருப்பில் விழுந்துவிட முடியுமா?

கொளத்தூர் மணி,

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

-ஜூனியர் விகடன் 09 Oct, 2013

//எண்ணெய் சட்டி சுடுவது உண்மைதான். அதற்காக நெருப்பில் விழுந்துவிட முடியுமா?// தற்போது நெருப்பில் விழுந்துவிட்டார்கள் என்று நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா….?!!!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb