Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமண பதிவு செய்ய இந்தியா செல்லத் தேவையில்லை!

Posted on February 20, 2014 by admin

திருமண பதிவு செய்ய இந்தியா செல்லத் தேவையில்லை!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என்ற புதிய நடைமுறையை புதுடெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பும்போது இந்தியாவிற்கு நேரில் வர இயலவில்லை என்றால் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களின் திருமணப் பதிவு சான்றிதழைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு புதுமணத் தம்பதியருக்கான மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும்போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரவீந்தர் சட்டா என்பவரின் மகள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டக்லஸ் கல்லூரியில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். அவரது கணவரும் அங்கு பணி புரிந்து கொண்டிருக்கின்றார். இருவருக்கும் இந்தியா வருவதற்கு விடுமுறை கிடைக்காத நிலையில் அவர்களின் திருமணத்திற்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்மதம் அளிக்குமாறு அவரது தந்தை மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கான விசாரணையின் போது நீதிபதி இதனை ஏற்றுக்கொண்டார்.

தொழில்நுட்பம் நவீனமாக மாறியுள்ள இந்தக் காலகட்டத்தில் தொலைதூரத்தில் இருக்கும் இந்தத் தம்பதியரின் அதிகாரம் பெற்ற நீதிமன்ற வழக்கறிஞர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் இந்து திருமண சட்ட பதிவு உத்தரவாளர்களிடம் குறிப்பிட்டார். திருமணப் பதிவாளரும் இதே முறையில் அவர்களுடன் உரையாடி தன்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.

இதுமட்டுமின்றி, தூதரகங்களின் மூலம் பெறப்படும் அங்கீகாரங்களையும், கையெழுத்துகளுக்கான அடையாளங்களையும் உறுதி செய்ய வீடியோ கான்பரன்சிங் இணைந்த புதிய தொழில்நுட்பத்தை அரசாங்கம் கண்டறியலாம் என்றும் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சட்ட விதிமுறைகள் மாறிவரும் நவீனத் தொழில்நுட்ப முறைக்கேற்ப மாறவேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

78 + = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb