Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

….வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்!

Posted on February 17, 2014 by admin

….வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்!

யோகப் பெருவாழ்வில்
யுகம் யுகமாய்த் தேன் உண்டார்
இமை மூடுதலும் ‘ஷரிஅத்’ தாய்க்
கண்ட சாதனையாளரே வாருங்கள்!

வாக்கில் ஒளி! வல்லமையில் துணிவு
எண்ணங்களில் ‘ஸாலிஹீன்’
சமய வாழ்வில் சாதித்து முடித்து
சோபித்த மனிதரே வாருங்கள்!

வேராக வேண்டிய ‘புர்ஹான்’
வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினார்
மணக்க வந்த மாமறையைத்
திறக்க மறுத்தோரே வாருங்கள்!

காலத்தின் வேட்கை கருத்தில் ஏற்று
கரு முளைக்கச் செய்த ‘முத்தகீன்’
விண் அளந்த பெருமைக்குள் பெருவாழ்வை
விரயம் செய்தோரே வாருங்கள்!

பள்ளிக்குள் குந்துதலும்
பாய் போட்டுத் தூங்குதலும்
பைத்துல்மால் சுரண்டலும்
‘தக்வா’ & ‘தஸ்பீஹ்’ என்போரே வாருங்கள்!

சித்தாந்தம் தனைத் துறந்து
ஜீவனத்துக்கு தம்மை விற்று
கூடு விட்டு கூடு மாறியும்
கூசாது வாழ்வோரே வாருங்கள்!

ஊமையர் உரையாற்றுகின்றார்!
உறக்கத்திலிருப்போர் உயிர்த்தெழுகின்றார்!
ஆமைகள் உலகளக்கின்றன!
ஆம்! என்போரே வாருங்கள்!

அடைபட்ட ஊற்றுக்கண் கிணறாக
அகங்களுக்குள் மதம், வேதம்!
தருமம் வேண்டாம்! நீதி வழி
கிடைத்தலே வேண்டும் என்போரே வாருங்கள்!

பணம் இங்கு பலருக்கும் ‘கிப்லா’!
பகட்டும் குதூகலமும் ‘வழிபாடு’!
பள்ளத்துள் வீழ்ந்தார், பயனற்ற சர்ச்சைப்
பேருண்மை கட்டவிழ்க்க வாருங்கள்!

தாயிப்பில் நபியுல்லாஹ் வடித்த குருதி
வேரோடி நாளும் வளர்ந்த உம்மத்து
திருக் கடாட்சம் இழந்த
திறன் விவாதிக்க வாருங்கள்!

அறிவை அச்சாணியாய்க் கொண்டு
‘அகமு’ம் ‘தோளு’ம் தருவோர்
நொடித்தவர், நோயுற்றவர்,
இடிந்தவர், இரத்தங் கொதிப்புற்றோரே வாருங்கள்!

தூண்டுகோல் மறைந்து
தூசு அடைந்த ஆற்றல்
ஏகமாய் நிவிர்த்தியாக்கி
எழுச்சி காண வாருங்கள்!

அரபுச் சொற்களுக்கான விளக்கம் : ஷரிஃ அதுன் – இஸ்லாமிய மார்க்கச் சட்டம். ஸாலிஹீன் – நல்லோர். புர்ஹான் – நன்மை தீமையை பிரித்தறிவிக்கும் குர்ஆன். முத்தகீன்- இயல்பான நம்பிக்கையாளர். பைத்துல்மால் – முறைப்படுத்தப்பட்ட நடுநிலையான பொருளகம். தக்வா -உள்ளத்தின் அச்சம். தஸ்பீஹ் – இறை துதித்தல். கிப்லா & முன் நோக்கும் திசை. தாயிப் -ஒரு நகரத்தின் பெயர். உம்மத்து – சமுதாயம். ‘பைத்துல்’ என்பதன் பொருள் ; தூய்மை, கண்ணியம், நிர்மாணிக்கப்பட்டது. ‘மாலூ’ என்பது பணத்தை குறிக்கும். ‘மாலூன்’ – பணம், உடைமை, பொருள் மூன்றையும் குறிக்கும்.

– சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஜனவரி 2014

source: http://jahangeer.in/?paged=3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

37 + = 44

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb