Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!

Posted on February 14, 2014 by admin

  பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல!  

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56)

அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

இரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ் ஒரே போலவே கடமையை ஆக்கியிருக்கிறான். அதேபோல் நாளை மறுமையிலும் இரு பாலரையும் ஒரே போலவே அல்லாஹ் எழுப்புவான்; கேள்வி கேட்பான். அவரவர் செய்த செயல்களுக்குத் தக்க அவர்களுக்கு அல்லாஹ் கூலிகளை வழங்குவான். இதில் எந்தப் பேதத்தையும் அவன் கற்பிக்கப் போவதில்லை.

ஆண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, பெண்களுக்குத் தண்டனையைக் குறைக்கப் போவதில்லை. அதேபோல் பெண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, ஆண்களுக்குக் குறைக்கப் போவதில்லை.

திருக்குர்ஆன் முழுவதும் நாம் இந்த உண்மையைக் காணலாம். யாரெல்லாம் கீழே ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருக்கும் சுவனத்தினுள் நுழைவார்கள் என்று எங்கெல்லாம் சொல்கிறானோ அங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறான்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (சூரா அன்னிசா 4:124)

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (சூரா அந்நஹ்ல் 16:97)

ஆக, நாளை மறுமையில் அவரவர் சுமையை அவரவர் சுமந்து வருவர். அவரவருக்கான கூலிகள் அங்கே ஆண், பெண் வித்தியாசமின்றி நீதமாக வழங்கப்படும்.

ஆன்மீக ரீதியாக ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தப் பேதமும் இல்லை என்று பறை சாற்றும் இஸ்லாம்தான் இன்னபிற கடமைகளில், உரிமைகளில் வித்தியாசங்களைப் போதிக்கிறது.

முஸ்லிம் ஆண்களை வெளியிடங்களுக்கு சென்று சம்பாதிக்கச் சொல்லும் இஸ்லாம், ஏன் பெண்களை வீட்டிலேயே இல்லத்தரசிகளாக இருக்க ஊக்குவிக்கிறது என்று முஸ்லிம்களில் சிலரும் கேட்கிறார்கள். முஸ்லிம் அல்லாதாரும் கேட்கிறார்கள்.

ஏன் ஒரு பெண் பர்தா அணிய வேண்டும், ஏன் ஒரு சகோதரனுக்கு சொத்தில் தன் சகோதரியை விட அதிக பங்கு கிடைக்கிறது, ஏன் ஒரு ஆண் ஆட்சியாளராக முடியும், ஏன் ஒரு முஸ்லிம் பெண் ஆட்சியாளராக முடியாது… இப்படி பலர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, இஸ்லாம் பெண்களை தாழ்வாக மதிக்கிறது என்று அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.

சட்டங்களை முதலில் விளக்கிக் கூறாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஆணும், பெண்ணும் உடற்கூறு ரீதியாக முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ ரீதியாகவும் அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்மை விட ஆணையும், பெண்ணையும் படைத்த அல்லாஹ் இரு பாலருக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்தவன். ஆதலால்தான் ஒவ்வொரு பாலரும் அவர்கள் எவற்றை சிறப்பாக செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினான். இதனால் ஒரு பாலர் மறு பாலரை விட சிறந்தவர் என்று அர்த்தம் இல்லை.

மாறாக, ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் சமூகத்திற்கு அவர்கள் இரு பாலரின் பங்களிப்பும் இருக்கிறது. ஆக, யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்வது போல் மனிதர்களும் பல விதமாக இருக்கிறார்கள். பல குணங்களைக் கொண்ட, பல திறமைகளைக் கொண்ட, பல வல்லமைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் சகலகலாவல்லவர்களாக, சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.

எல்லோரும் அவரவர் பங்களிப்பை சமூகத்திற்கு செய்கிறார்கள். ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் வேறு வேறு பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்கின்றனர். ஆனால் இருவருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். இருவருமே தங்கள் துறைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல்தான் ஆணும், பெண்ணும் வேறு வேறு படைப்புகளாக இருந்தாலும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

பெண்கள் இஸ்லாத்தின் கண்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முறை கூறினார்கள்:

“இந்த உலகமும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை. உலகிலேயே எல்லாவற்றையும் விட அதிக முக்கியமான படைப்பு ஒரு நல்ல பெண்.” (அஹ்மத், முஸ்லிம்)

இந்த நல்ல பெண் யார் என்று இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள்:

“ஒரு மனிதன் கொண்டிருக்கும் நல்ல புதையல் எது என்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தன்னைப் பார்க்கும்பொழுது கணவனை மகிழ்விக்கிற, கணவனுக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுகிற, கணவன் இல்லாத பொழுது அவனது பொருட்களைப் பாதுகாக்கிற பெண்தான் அந்தப் புதையல்” என்று எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

தாய்மை என்ற பெருமை

தாய்மை என்னும் பெரும் பேற்றை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது. ஆண்களுக்கு அந்தப் பாக்கியம் வழங்கப்படவில்லை.

ஒரு மனிதர் உத்தம நபியிடம் வந்து வினவினார்:

“அல்லாஹ்வின் தூதரே, வேறு யாரையும் விட என் மீது அன்பும், அரவணைப்பும் (கனிவும், கவனமும்) மிகச் சிறந்த முறையில் தருகிற நபர் யார்?” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என்று அவர் கேட்டார். “உன் தந்தை” என்றார்கள்.

இந்த உலகில் ஒரு மனிதனுக்கு அன்பிலும், அரவணைப்பிலும், அனைத்து வகையிலும் நெருங்கியிருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை இஸ்லாம் பெண்ணுக்கே கொடுத்திருக்கின்றது. இந்தப் பெரும் பேறு ஆணுக்குக் கிட்டவில்லை.

தாய்மையின் பெருமையை திருக்குர்ஆனும் இப்படி சிலாகித்துக் கூறுகின்றது: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (சூரா லுக்மான் 31:14)

ஒரு காலம் இருந்தது. பெண் பிள்ளைகள் பிறந்தாலே முகம் கருத்து, அவமானப்பட்டு, கூனிக் குறுகி அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அந்த மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்கு அவமானப்பட்டவர்கள் பெருமை கொண்டார்கள் அவர்களைப் பெற்றதற்காக.

பெண் பிள்ளைகளை சீரும் சிறப்போடும் வளர்ப்பதை இபாதத்தாக மாற்றிக் காட்டினார்கள் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்கள் கூறினார்கள்: “யார் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்தும் வரை நல்ல முறையில் வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் (இரண்டு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்).” (முஸ்லிம், திர்மிதீ)

இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறப்புகளைக் கொடுத்த மார்க்கம்தான் இஸ்லாம். ஆதலால் ஒரு முஸ்லிம் பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெண்ணைப் பெற்றெடுத்தால் பேருவகை கொள்ளலாம்.

source: http://www.thoothuonline.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb