Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வெள்ளிக்கிழமை- அனைத்து துஆவும் ஏற்கப்படும் அந்த ஒரு நேரம் எது?

Posted on January 30, 2014 by admin

வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு. அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு. அவற்றில்…

முதலாவது ஹதீஸ்:

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள (துஆ ஏற்கப்படும்) அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அ(ந்த அரிய நேரமான)து, இமாம் அமர்வதற்கும் (ஜுமூஆ) தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும். (அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: முஸ்லிம் 1546)

இதில் இமாம் அமர்தல் என்பது மிம்பரில் அமர்வதைக் குறிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இமாம் மிம்பரில் சொற்பொழிவாற்ற துவங்கினால் முடியும் வரை அந்த உரையைக் கேட்க மட்டும் தான் செய்ய வேண்டும். நன்மையான விஷயங்களைக் கூட பேசக் கூடாது. அமர்தல் என்பது தொழுகையில் அமரும் இருப்பைத் தான் குறிக்கும், தொழுகையில் அமரும் நிலையில் துஆ செய்ய அனுமதி உண்டு, அதாவது, அத்தஹியாத்து, ஸலவாத்து ஓதிய பின் ஸலாம் கொடுக்கும் வரை துஆ கேட்க வேண்டும், அந்த நேரத்தில் துஆ கேட்பதை நாம் செயல்படுத்த வேண்டும். பொதுவாகவே தொழுகையின் ஸஜ்தாவில் கேட்கும் துஆ, ஏற்கப்பட அதிகம் தகுதி உள்ளது என்பதால் அதையும் தவற விடக் கூடாது, வழமை போல் அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஹதீஸ்:

“ஜுமுஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: அபூதாவூத் 886)

வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் சம்பந்தமாக ஜுமுஆ தொழுகையில் துஆ கேட்பது போல் அன்றைய தினத்தின் அஸருக்குப் பின் கடைசி நேரத்தில் (மஃரிப் பாங்கு சொல்வதற்கு முன்) துஆ கேட்பதைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரம் சம்பந்தமாக இரு அறிவிப்புகள் வந்துள்ளதால் இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் அதை அடையலாம்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

95 − = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb