Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மூன்று காதல் மொழிகள்!

Posted on January 27, 2014 by admin

மூன்று காதல் மொழிகள்!

திருமண வாழ்வை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டால், கணவன் மனைவியரின் இல்லற வாழ்க்கைப் பயணம் சுமுகமாக சென்றிட இருவருக்குமிடையிலான “மவத்தத்” எனும் அபரிமிதமான காதல் என்பது கடல் நீர் அளவுக்கு இருந்திட வேண்டும்!

இந்தக் காதலுக்கு என்னென்ன பொருள்கள் எல்லாம் உண்டு தெரியுமா?

affection – இதயபூர்வமான அன்பு
appreciation – உயர்வாக மதித்தல்
attention – கவனம் (எந்நேரத்திலும்)
commitment – அர்ப்பணிப்பு
joy – மகிழ்ச்சி
respect – கண்ணியம்
responsibility – பொறுப்பு
sacrifice – தியாகம்,
security – பாதுகாவல்
trust – நம்பிக்கை
intimacy – நெருக்கம்

இந்தக் காதலை நாம் ஒரு அழகிய பூஞ்செடிக்கு ஒப்பிட்டால், எவ்வாறு ஒரு செடி வளர்ந்து பூத்துக் குலுங்குவதறகு தினமும் நாம் நீரூற்றி வளர்க்கிறோமோ அது போலவே, கணவன் மனைவி காதலையும் அனுதினமும் அவர்கள் புதுப்பித்துக் கொண்டே இருந்திட வேண்டும்!

நீரூற்றுவது நிறுத்தப்பட்டால், எவ்வாறு அந்தச் செடி வாடி வதங்கி விழுந்து விடுமோ, அது போலவே கணவன் மனைவி காதலுக்குப் புத்துயிர் ஊட்டுதல் நிறுத்தப்பட்டால், இல்லற வாழ்வும் வாடி வதங்கி வெறுமையானதாக ஆகி விடும்.

கணவனும் மனைவியும் தாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக உணர வேண்டும். தாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கப்படுவதாக உணர வேண்டும். இதனை எப்படி சாதிப்பது?

மூன்று வழிமுறைகளை சொல்லித் தருவோம்: இம்மூன்றும் – “மூன்று காதல் மொழிகள்” three languages of love – என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

என்னிடம் சொல்! (TELL ME!)

உங்கள் துணையிடம் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள்! நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறீர்கள் என்பதை!

காதல் என்பது உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டும் போதாது! அது உங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

உங்களில் யாராவது ஒருவர் தனது சகோதரரை நேசித்தால், அதனை அவரிடம் தெரிவித்து விடுங்கள்.” (அபூ தாவூத்)

ஆனால் நமது சமூகத்தில் இவ்வாறு கணவன் மனைவியரிடையே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை! அதிலும் குறிப்பாக கணவன்மார்கள்!

நபியவர்களின் வாழ்க்கையில் இருந்தாவது பாடம் கற்போமே!

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!

உங்கள் துணை உங்களுக்கு ஒரு உதவி செய்து விட்டாரா? “ஜஸாகல்லாஹ் க்ஹைர்” சொல்லலாம் தானே! அதுவும் உங்கள் உள்ளத்திலிருந்து! என்னது?
கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்களா, என்ன?” என்று கேட்காதீர்கள்! நன்றி சொல்லிப்பாருங்கள்! காதல் வெளிப்படுகிறதா என்றும் சோதித்துப் பாருங்கள்! அதிசயம் நடக்கும் உங்கள் இல்லற வாழ்வில்!

உங்கள் துணைவர்/ துணைவி எங்காவது பயணம் புறப்படுகிறாரா? ஃபீ அமானில்லாஹ், அல்லது ஃபீ ஹிஃப்ஸில்லாஹ் என்று முகம் மலர்ந்து சொல்லி அனுப்புங்களேன்!

திடீரென்று ஒரு SMS அனுப்புங்களேன், உங்கள் துணைவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் சொல்லுங்களேன்!

நீங்கள் வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கும்போது தொலைபேசியில் அழைத்து விசாரியுங்களேன்! அவரை நீங்கள் பிரிந்திருப்பது உங்களை எவ்வளவு வாட்டுகிறது என்று அழகிய வார்த்தைகளால் தெரிவியுங்களேன்!

எனக்குப்புரிய வை! (SHOW ME!)

ஒரு அன்பளிப்பை பரிசாக வழங்குங்கள் உங்கள் துணைக்கு! அது அப்படி ஒன்றும் பெரிதாக இருந்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை!

அவர்களுக்கு எது மகிழ்ச்சியூட்டுமோ அது போதும். ஒரு முழம் பூ, அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒரு இனிப்பு அல்லது பண்டம், அவர்களுக்குப் பிடித்த கலரில் ஒரு கைக்குட்டை, ஒரு புத்தகம்…..

“அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள், அது அன்பை வளர்க்கும்” என்பது நபிமொழி

உங்கள் துணைவரை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுங்களேன்!

“உங்கள் சகோதரரை புன்புறுவலுடன் சந்திப்பதும் ஒரு தர்மம்” என்பதும் நபிமொழி தானே!

“மிகச் சிறிய நற்செயல்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்; அது உங்கள் சகோதரரைப் புன்முறுவலுடன் பார்ப்பதாயினும் சரியே!” (ஸஹீஹ் முஸ்லிம்)

புன்புறுவல் காட்டுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வது – இவையெல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் நாம்!

வீட்டில் கலந்துரையாடல்கள் எல்லாம் பெரிய சீரியஸ் சமாச்சரமாக ஆக்கி விட்டிருக்கின்றோம்!

மனைவி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு கஷ்டப்படுகின்றாரா? நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் தானே?

பாத்திரங்களைக் கழுவுவது ஒன்று போதுமே!

உங்கள் துணைக்கு உடல் நலம் இல்லையா? உங்கள் அன்பை வெளிப்படுத்திடும் அருமையான வாய்ப்பு அது!

அருகில் அமர்ந்து கொண்டு ஆதரவாகக் கரம் பிடித்து, தலையைத் தடவிக்கொடுத்தால் உங்கள் துணை விரைவில் உடல் நலம் பெற்று விடுவார் தானே!

என்னைத் தொடு! (TOUCH ME!)

உங்கள் கணவர் வேலைக்குப் புறப்படுமுன்பு, அவரை அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்புங்களேன்!

வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டால், கை கால்களைப் பிடித்து விட்டு, கழுத்துப் பகுதியிலும், முதுகிலும் மஸாஜ் (massage) செய்து விடுங்களேன். நாள் முழுவதும் ஏற்படுத்திய களைப்பு அடியோடு பறந்து போய் விடுமே!

ஏன்? ஒரே பாத்திரத்தில் இருவரும் குளிக்கலாம் தானே! அடிக்கடி முத்தம் கொடுங்கள்! ஒரே குவளையில் வாய் வைத்து அருந்துங்கள்! இவைகளும் நபிவழிகள் தானே!

இறுதியாக இங்கே ஒரு விஷயத்தை நாம் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிட வேண்டியுள்ளது:

திருமணமான புதிதில் நாம் மேலே கோடிட்டுக்காட்டிய காதல் அனுபவங்கள் எல்லாம் கணவன் மனைவியருக்குள் நடக்கின்றன என்பது உண்மையே!

ஆனால் ஆண்டுகள் ஆக ஆக, இந்தக் காதல் அனுபவங்கள் எல்லாம் அவர்களுக்குள் வெகுவாகக் குறைந்து போய் விடுகின்றன!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவியருக்குள் இவை குறைந்து போய் விடக்கூடாது என்பதற்கே இக்கட்டுரை!

source: http://muslimkudumbam.blogspot.in/2013/05/blog-post_3598.html#more

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 − = 26

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb