Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பிளஸ் 2 முடித்தவுடன் மாஸ்டர் டிகிரி படிக்கலாம்

Posted on January 11, 2014 by admin

பொறியியலுக்கு இணையான எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்புகள்

பிளஸ் 2 முடித்தவுடன் மாஸ்டர் டிகிரி படிக்கலாம்

பிளஸ் 2 முடித்தவுடன் பட்டப்படிப்பு மட்டுமல்ல பட்டமேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்டகிரேட் எம்.எஸ்சி. புரோகிராம் மற்றும் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் சேர கடும் போட்டி நிலவுவதால், இதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு அளிக்க அரசுத் துறையும், தனியார் துறையும் தயாராக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதன் மூலம் வெற்றி நிச்சயம். ஆங்கில வழியில் இதற்கான தேர்வை நடத்துகின்றனர்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை எடுத்தவர்கள், இன்டகிரேட் எம்.எஸ்சி, புரோகிராம் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பை படிக்கலாம்.

நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்திய அரசின், டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி மேற்பார்வையில், இந்த நுழைவுத் தேர்வை புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச், மும்பையில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் பேசிக் இன் சைன்ஸ், மேற்கு வங்காளத்தில் உள்ள இன்டகிரேட் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் சென்டர் ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த மூன்று கல்வி நிறுவனங்களில் மொத்தம் 156 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். வரும் மே 31ம் தேதி நெஸ்ட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மதுரை, சென்னை ஆகிய இரு தேர்வு மையங்கள் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் (www.nestonline.in) வரும் பிப்ரவரி. 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளை கொண்டது. கட்டாயமான முதல் பிரிவு பொது அறிவு திறன் தேர்வுக்கு மட்டும் நெகடிவ் மார்க் கிடையாது. இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பிரிவில், ஏதாவது மூன்று பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக 5000 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு முறை மே மாத சம்மர் புராஜெக்ட்டிற்கு 20,000 ரூபாய் அரசு அளிக்கிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டமேற்படிப்பு என்பதால், சகலவித அரசு, தனியார் துறைகளிலும் வேலை அளிக்க காத்திருக்கின்றனர்.

பிளஸ் 2 முடித்ததும், மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் – இண்டூர் மூலம் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதற்கு மே மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் ஏப்., இரண்டாவது வாரத்திற்குள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அப்ஜெக்டிவ் வகை கேள்வியை கொண்டுள்ளது. இண்டூர், பெங்களூரு, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களில் மட்டுமே இதற்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இந்தாண்டு சென்னையில் இதற்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொறியியல் பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்து படிக்க ஆசைப்படுவதைப் போன்று, எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களின் கனவாக, ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயில ஆசைப்படுகின்றனர். மொத்தம் 120 இடங்களுக்கு கடும் போட்டி உள்ளதால், தேர்வுக்கு நன்றாக தயாராவது அவசியம். இவ்விரு நுழைவுத் தேர்விலும் வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கையில் மேன்மை அடைவது நிச்சயம்.

 

பொறியியலுக்கு இணையான எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசைக் கனவு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. பிளஸ் 2 வகுப்பில் மதிப்பெண் சற்றே குறைவாக எடுத்தவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக, பொறியியலுக்கு இணையான எம்.எஸ்சி. இன்டகிரேட்டட் புரோகிராம் பட்டமேற்படிப்புகள் உள்ளன. இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் கலந்தாய்வு இதற்குப் பொருந்தாது. எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி, எம்.எஸ்சி. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவு எடுத்து படித்தவர்கள் இதில் சேர முடியும்.

இந்த ஐந்தாண்டு பட்டமேற்படிப்பை படித்து முடித்தவர்கள், பொறியியல் மாணவர்களுக்கு நிகராக தொழில்நுட்பத் துறைகளில் 90 சதவீத பணி வாய்ப்பு பெறுகின்றனர். சுயநிதிப் பிரிவில் படிக்கவேண்டி உள்ளதால், இம்மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். இப்படிப்புக்கான சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியில் சேர்ந்துகொள்வது நல்லது. எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முடித்தவர்கள் ஆசிரியர் பணியிடத்துக்கு செல்வது கடினம் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

பி.இ., எம்.டெக். முடித்தவர்களுக்கே ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று AICTE (ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன்) விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. எனவே,எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதான விஷயம். 

இதேபோன்று, ஐந்தாண்டு படிக்கக்கூடிய எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்பை வி.ஐ.டி., எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. சில பொறியியல் கல்லூரிகள் எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பை வழங்கிவந்தன. கடந்த ஆண்டிலிருந்து AICTE கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக, இப்படிப்பு வழங்குவதை கல்லூரிகள் நிறுத்திக்கொண்டுள்ளன.

AICTE வழிகாட்டுதல் மட்டுமே வழங்க வேண்டும். நிபந்தனைகள் விதிக்கக் கூடாது’ என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரபலமான பல கல்லூரிகள் எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பை மீண்டும் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எம்.எஸ்சி. முடித்த பிறகு, எம்.பி.ஏ. படிப்பதன்மூலமும் நல்ல பணிகளில் சேர முடியும்.

ஐ.டி. துறையின் அசுர வளர்ச்சி காரணமாக ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பணியில் சேர்கின்றனர். பொறியியல் மாணவர்களுக்கு இணையாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் முடித்தவர்களுக்கும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன 

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர பொறியியல் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 என்றும் எம்.எஸ்சி.க்கு கட்-ஆஃப் மதிப்பெண் 184 என்றும் பி.சி. மாணவர்களுக்கு இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு எம்.எஸ்சி. படிப்புகள் நல்ல மாற்றாக இருக்கும். நல்ல வேலைவாய்ப்புகளையும் தரும்.

– கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

source: http://tamil.thehindu.com/general/education/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb