Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சேர்ந்து குளிக்கும் பழக்கமுடைய தம்பதியரைக் கண்டு “தலாக்” தலை தெறிக்க ஓடும்!

Posted on December 20, 2013 by admin

சேர்ந்து குளிக்கும் பழக்கமுடைய தம்பதியரைக் கண்டு “தலாக்”தலை தெறிக்க ஓடும்

கணவன் மனைவியர் சேர்ந்து குளிப்பது அவர்கள் ஒற்றுமையுடன் வாழ உதவும் என்று தெரிய வந்துள்ளது. 

இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திச் சென்று விட்டனர்.

வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.

மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 

குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.

முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார்.

“கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்’ என்கிறார், முகமது ரம்லி. (தினமலர், நவம்பர் 15/2009)

இஸ்லாம் கூறுவது :

(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:

நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் போட்டியிட்டுச் செல்லும். (நூல் புகாரி 261)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீர் அள்ளுவோம். (நூல் புகாரி 273)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது :

பெருந்துடக்குடனிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம். (நூல் புகாரி 299)

நீங்கள் சேர்ந்து குளிப்பதுண்டா? 

“நீங்க வேற ஒன்னு! அதெல்லாம் கல்யாணமான புதுசுல தான்…” – என்கிறீர்களா? 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – தனது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சேர்ந்து குளித்த போது நபியவர்களின் வயது என்னவென்று தெரியுமா ? ஐம்பதுக்கும் மேல் !!

சேர்ந்து குளிக்கும் பழக்கமுடைய தம்பதியரை விட்டு “தலாக்” தலை தெறிக்க ஓடாதா என்ன…?!

எனவே கணவனும் மனைவியும் சேர்ந்து குளியுங்கள், இல்லறம் நல்லறமாக அமையும்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 31

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb