Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்து என்ற பாசிச உணர்வு எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! -அருந்ததி ராய்

Posted on November 9, 2013 by admin

இந்து என்றபாசிச உணர்வுஎப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும், சுக போகத்துக்கும் உருவாக்கப்பட்டது! –அருந்ததி ராய்

22, டிசம்பர் 2008-ல் வெளிவந்த, “அவுட் லுக்” இதழில் அருந்ததி ராய் “9 IS NOT 11 AND NOVEMBER ISN’T SEPTEMBER” என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு 45000 கிளைகள் உண்டு, அதனுடைய அறக்கட்டளைகள் மற்றும் ஏழு மில்லியன் தன்னார்வ ஊழியர்கள் மூலம் இந்தியா முழுவதும் (சிறுபான்மையினர் மீது) தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்!

பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அதாவது உழைக்கும் மக்களை தொடர்ந்து சுரண்டிவரவும், அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும் பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது!

இந்துத்துவ பாசிசத்தின் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற பாசிச சக்திகள் அரசியல் பிரிவு, வன்முறைப் பிரிவு, மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு, எழுத்துத் துறை, மதப் பிரிவு, சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.

பாசிச சக்திகளின் இத்தகைய பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை இந்து (பாசிச) நாடாக்க வேண்டும் என்ற பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!

இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்றால், அனைவரையும் இந்துக்களாக மாட்டவேண்டும்! அது இந்தியாவின் இறையாண்மைக்கு, சமய நல்லிணக்கத்துக்கு எதியானது மட்டுமல்ல, எப்போதும் நடைபெற இயலாத ஒன்று என்பதால்தான், இந்தியாவில் இந்துவாக இல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்கள், கிருத்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது! சிறுபான்மை மக்களை தொடர்ந்து ஒடுக்க முற்ப்பட்டு வருகிறது!

பாசிச இந்துத்துவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவே இந்தியாவில் மதகலவரங்கள் நடத்தப்படுகின்றன! மதக் கலவரங்களை பெரிய அளவில் நடத்தவும், சிறுபான்மையினரை ஒடுக்கி, அழிக்கவும் வேண்டியது பாசிச இந்துவத்தின் தேவை மற்றும் செயல் திட்டமாக உள்ளபடியால், பாசிச அணிகள் நாடொறும் சிறுபான்மை இன மக்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் தீவிரவாதிகள் என்றும் சாமானிய மக்களிடம் துவேசத்தை பரப்பியும்,வளர்த்தும் வருகிறது!

சிறுபான்மை இனத்தவர்களை நாட்டின் பொது பொது எதிரியாக காட்டி வருவதால் தங்களது சுரண்டலை தொடர முடியும் என்று பாசிச இந்துத்துவம் நம்பிவருவதுடன் மூலம் உழைக்கும் மக்களை கொண்டே சிறுபான்மை இனத்தவர்களை அகற்றிவிடவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது! இத்தகைய நோக்கத்துக்கு பயன்படுவதே, “நாமெல்லாம் இந்து” என்பதும், “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்பதுபோன்ற கோஷங்கள் பாசிச சக்திகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன!

ஆகவே, இந்து என்ற பாசிச உணர்வு எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும், சுக போகத்துக்கும் உருவாக்கப்பட்டது!

இந்துத்துவம் என்ற பாசிச வெறி உள்ளவரை, அதன் ஆதிக்கம் இந்தியாவில் நீடிக்கும் வரை இந்தியா கல்வி, வேலை, பொருளாதாரம், நாகரீகம், பண்பாடு உள்ளிட்ட எதிலும் தன்னிறைவு அடைய முடியாது! உண்மையான சமத்துவமும், ஜனநாயகமும் ஏற்படாது. ஏழ்மையும், அடிமைத்தனமும் நீடிக்கும் நாடாகவே அது இருந்துவரும்! எப்போதும் சமஉரிமையும், சகோதரத்துவமும் அமைதியும் இல்லாத நாடாகவே இந்தியா இருந்து வரும்!

ஹோசூர் ராஜன்

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb