Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

”குலா” மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும் அதே கணவனை மணப்பது கூடுமா?

Posted on November 4, 2013 by admin

”குலா” மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும் அதே கணவனை மணப்பது கூடுமா?

முதலில் “குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது,

கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத்திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும் போது,

மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை

என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது.

இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும்.

அல்குர்உ, குல்உ, குலா என்று கூறப்படும் சொல்லுக்கு அகராதியில் கழற்றிவிடுதல் என்பது பொருளாகும். மனைவியிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து விடுவதற்குக் கணவன் சம்மதம் தெரிவிப்பதையே வழக்கத்தில் “”குலா” என்பர்.

கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திரும்பக் கொடுத்தோ அல்லது மஹராக கொடுக்க ஒப்புக் கொண்டதை விட்டுக் கொடுத்தோ, மேலும் புதிதாக ஒரு தொகையையோ, பொருளையோ கொடுக்க சம்மதித்து பிரிவினையைக் கோருவதே “”குலா” என்பதாகும்.

“குலா” என்பதும் தலாக் என்பதும் ஒன்றே என்று கூறுவோரும் உண்டு. தலாக்தான் என்றாலும் அது திரும்ப அழைத்துக் கொள்வதற்கேற்ற ரஜயீ தலாக் என்று கூறுவோரும் உண்டு. முதிர்ந்த (பாயின்ல்) தலாக் என்று கூறுவோரும் உண்டு.

“குலா” என்பது வெறும் பிரிவினையே தவிர பூரண மணவிலக்கு ஆகாது என்றும் எனவே குலா செய்யப்பட்டப் பெண்ணை மீண்டும் மண முடிக்க விரும்பினால், முத்தலாக் கூறி விவாக விலக்கு செய்யப்பட்ட பெண் மற்றொரு ஆணை மணந்து அவனும் மணவிலக்கு அளித்திருக்க வேண்டும் என்பது போன்ற விதி “குலா”வுக்கு பொருந்தாது என்று கூறுவோரும் உண்டு. இதுதான் சரி.

ஆட்சியாளர்கள், அல்லது நீதிபதியின் அனுமதி இல்லாமலேயே “குல்உ’ நிகழ்வதை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றும், மனைவியின் பின்னால் கட்டும் கயிற்றைத் தவிர அவளின் அனைத்துச் சொத்துக்களுக்கும் ஈடாக “குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஸாபித் பின் கைஸ்பின் இம்மாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே!” என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால் நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலை செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஸாபித் உனக்கு மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர் ஆம் தந்து விடுகிறேன்’ என்று கூறினார். ஸாபித் அவர்களிடம் தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்”! என்று கூறினார்கள். புகாரி ஹதீஸ் எண்.5273.

எனவே மேற்கண்ட ஹதீஃதில் இருந்து கணவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்னும் போது கணவனிடமிருந்து மஹராக பெற்றதைத் திரும்பக் கொடுத்து “குலா” என்னும் மண விலக்கைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும், இப்படி மண விலக்குப் பெற்ற பெண் பழைய கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அந்த முன்னால் கணவனும் விரும்பினால் மீண்டும் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது கூடும் என்றும் இதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்றும் அறிய முடிகிறதுதானே? மாற்றுக் கருத்து இருந்தால் எழுத்து மூலம் தெரிவிக்க கோருகிறோம்.

source:http://annajaath.com/?p=6434

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb