Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வீட்டை கட்டுமுன் அண்டை அயலார்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Posted on October 24, 2013 by admin

வீட்டை கட்டுவதற்கு முன்பு அண்டை அயலார்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இன்றைய சூழ்நிலையில், அண்டை அயலார்கள் ஒருவரது பழக்க வழக்கங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், ஏனென்றால் வீடுகள் நெருக்கமாக அமைக்கப்படுகின்றன, மக்கள் நெருங்கி வாழும் சூழ்நிலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவைகளாக இருக்கின்றன.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு விதமான சந்தோஷங்கள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று நேர்மையான அண்டை வீட்டார், இன்னும் நான்கு வகையான கேடுகள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று கெட்ட அண்டை வீட்டார். (அபூ நயீம் – அல் ஹில்யா, 8-388, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 887).

இந்த விஷயத்தின் பாரதூரமான விளைவுகளின் காரணமாகவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கெட்ட அண்டை அயலாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துள்ளார்கள். அதாவது,

”அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஜார் அல் ஸுஃ ஃபீ தார் அல்-முகாமஹ் ஃப இன்ன ஜார் அல் பாதியா யாதஹாவ்வில்” (யா அல்லாஹ், எனது நிரந்தரமான இல்லத்தின் (அருகில் உள்ள) அண்டை அயலார்களின் தீங்குகளை விட்டும், (இன்னும்) பாலைவனத்தில் (பயணத்தின் பொழுது என்னுடன்) அருகாமையில் உள்ள அண்டை அயலாரிடமிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்”.

உங்களது நிலையான இல்லங்களுக்கு மிக அருகாமையில் உள்ள கெட்ட அண்டை அயலார்கள், இவர்(களின் தீங்கு)களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுங்கள், ஏனென்றால் பாலைவன (பயணத்தில் உங்களுடன் பயணமாகக் கூடியவர்) உங்களுடனேயே (இறுதி வரை தொடர்ந்து) வரக் கூடியவராகவும் உள்ளார். (புகாரீ – அல் அதப் அல் முஃப்ரத் 117, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2967).

பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது குழந்தைகள் கெட்ட நடத்தையுள்ளவர்களாக இருப்பின் அவர்களால் விளையக் கூடிய தீங்குகள், துன்பங்கள் பற்றி நாம் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. எனவே மேற்கண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைப்படி அண்டை அயலார்களைத் தேர்வு செய்து அதன் பின் நமது இல்லங்களை அமைத்துக் கொள்வது மிகச் சிறந்த இஸ்லாமிய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

இன்னும் வாடகைக்குத் தங்களது இல்லங்களை விடக் கூடியவர்களும் நல்ல இஸ்லாமியப் பற்றுள்ள குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவது சிறந்தது. அல்லது தனக்கு அருகில் உள்ள வீட்டார்களுக்கு இஸ்லாமியச் சூழ்நிலையை அறிமுகப்படுத்துவதும், அவர்களால் எழக் கூடிய பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடிய வழிமுறையாகவும் அமையும். நல்ல அயலார்கள் விலைமதிப்பற்ற செல்வத்தைப் போன்றவர்கள்

source: இஸ்லாமிய இல்லம் – ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb