Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பழைமையைப் பற்றிப் பிடித்திருக்கும் மதராஸ் மண்!

Posted on September 29, 2013 by admin

பழைமையைப் பற்றிப் பிடித்திருக்கும் மதராஸ் மண்!

சென்னையில் வாழும் மண்ணின் மைந்தர்கள் பேசக்கூடிய மொழியை, அம்மக்களை அற்பப்பார்வை பார்க்கும் நிலை மற்ற மக்களிடமிருக்கிறது. காரணம் அவர்கள் நாவிலிருந்து வெளிப்படும் சொற்கள் கொச்சைத்தனமானதாக இழிந்த மொழிதலாகக் கருதியதன் விளைவு.

அவர்கள் பேசுவதன் சாரம் நடை, உதடு வெளிப்படுத்தும் முறை அவ்வாறு தோன்ற வைத்திருக்கலாம். பேசும் மொழியென்னவோ தூயதொன்மைத் தமிழாகவிருக்கிறது. பழம் அகராதிகள் உறுதிப்படுத்துகின்றன. அச்சொற்களைக் காணவும்.

‘கசமாலம்’ இச்சொல் சென்னையில் வாழ்வோருக்குத் தெரியும். இதன் பொருள் புகை, தூபம், அசுசி, தூய்மையின்மை.

‘கபோதி’ – அறிவிலி, கண்ணிலி. ‘ஒத்துபா’ என்பர். ஒத்துதல் பொருள்; விலகுதல்.

‘குந்து’ – உட்கார். ‘பேமானி’ – வெட்கமற்றவன். ‘இசகுபிசகு’ – முறைகேடு. ‘தண்டல்கட்டனும்’ – வசூலிப்பவர்க்குத்தரனும்.

”போங்கு புடிச்சவன்- உள்ளத்தில் குறைவுள்ளவன். ‘பிக்காரி’ – வறுமையாளன். ‘அக்கடான்னு இருந்தேன்’ – அந்த இடத்திலிருந்தேன். ‘ஐயே’ – விளி, அழை, கூப்பிடு, சொல். ‘இன்னான்றே’ – வெறுப்பு, துன்பத்துடன் என்ன எனக் கேட்டல். ‘உதார் விடுறான்’. உதாரி – பேச்சுத் திறமையுள்ளவன். தராதரமில்லாத ஆளு – உயர்வு, தாழ்வு தெரியாதவர். ‘மெய்யாலுமா’ – உண்மையாகவா. ‘தண்டச்சோறா துண்ணுறேன்’ – பிச்சைச் சோறு, யாசித்துப் பெற்ற சோறா உண்கிறேன். அக்கில்லவை – கக்கத்தில் வை. ‘அக்கப்போர்’ – கலகம், வம்புப் பேச்சு. ‘நோவு’ – நோய். ‘இன்னா கூத்துக் காட்டுறே’ – நாடகம் ஆடுகிறாயா? என்று வெறுப்புடன் கேட்பது பொருள்.

‘பிச்சாத்து தர்றே’ – எஞ்சியிருப்பதை தருகிறாய். ‘குத்துமதிப்பு’ – சுமார். ‘இவரு பெரிய குடும்பி’ – இவர் பெரிய குடும்பத் தலைவர், சமுசாரி. ‘குடக்கூலி’ – குடி கூலி, வாடகை. ‘குமையுறே’ – மயங்குறே.

அவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய இன்னும் பல சொற்கள் தமிழ்த் தொன்மைச் சொற்களாகவிருக்கின்றன. மற்ற மக்கள் பயன்படுத்தாத மரபுச் சொற்களை வம்சா வழியாக பல தலைமுறைகளாகப் மதரஸாஸ் மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர், தொடர்கின்றனர். இதன் மூலம் தமிழினத்தின் வேர்களில், ஒரு பகுதியினர் மதரஸா மக்கள் உணர முடியும்.

-சதாம், 

முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2013

source: http://jahangeer.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

32 − 26 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb