Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சவுதியில் பெண்களின் உண்மையான முன்னேற்றம்!

Posted on September 4, 2013 by admin

சவுதியில் பெண்களின் உண்மையான முன்னேற்றம்!

சவுதி இளவரசி ரிமா பின்த் தலால் ‘உங்களின் அழகு’ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடசத்திர ஹோட்டல் ஒன்றில் திறந்து வைத்தார். மூன்று நாடகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் திறமை மிக்க பெண் டிசைனர்கள், ஓவியக் கலை வல்லுனர்கள், என்று பலதரப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் மேல் ஆடை தயாரிப்பு, நகைகள் டிசைன் செய்தல், வாசனை திரவியங்கள் உருவாக்குதல்போன்ற தொழில்களில் பல ஆண்டுகள் பரிச்சயம் உள்ள பெண்மணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிக் காட்டினர். சவுதி நோய் தடுப்பு கழகமும், குர்ஆன் மனனமிடுதல் சம்பந்தமான குழுமமும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.

இளவரசி ரிமா தனது உரையில் ‘மன்னர் அப்துல்லா பெண்கள் முன்னேற்றத்துக்கும் இது போன்ற பெண்களுக்கென்றே பிரத்யேகமான கண்காட்சி நடைபெறுவதற்கும் மிகுந்த ஒத்துழைப்பு தருவதாக குறிப்பிட்டார்.

இளவரசி நூரா தனது பேச்சில் ‘சவுதி பெண்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆபரணத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் இந்த துறைக்கு மிகுந்த வரவேற்பு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்காட்சி சிறப்பாக அமைய ஒத்துழைப்பு நல்கிய சவுதி பெண்கள் 15 பேரையும் நான் பாராட்டுகிறேன். ஒத்துழைப்பு நல்கி வரும் மன்னர் அப்துல்லாவுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்’ என்றார்.

 சவுதி பெண்களின் வேலை வாய்ப்பு:

சவுதி பிஆர்ஜேயின் இயக்குனர் ரோலா பாஸ்மத் தனது அறிக்கையில் ‘சவுதி பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் போன வருடத்தோடு ஒப்பிடும் போது 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். போன வருடம் 2011 ஆம் ஆண்டு பிஆர்ஜே 929 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கியது. அதே போல் மறு வருடம் 2012 ஆம் ஆண்டு 2922 வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது’ என்கிறார்.

பல கம்பெனிகள் சவுதி பெண்களை வேலைக்கு அமர்த்த ஆர்வமுடன் உள்ளனர். சவுதி பெண்கள் தங்களுக்கு தரப்படும் வேலைகளை மிகவும் திறம்பட செய்து வருவதாகவும், இவர்களின் வேலைகளில் தாங்கள் முழு திருப்தி கொள்வதாகவும் பல கம்பெனிகள் எங்களுக்கு தகவல் தந்த வண்ணம் உள்ளனர். இது ஒரு மாறுதலான மற்றும் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் பாஸ்மத்.

இந்த வேலைகள் அனைத்தும் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. ஆண் பெண் கலப்பு இங்கு தேவையில்லாமல் தவிர்க்கப்படுகிறது. அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே ஆண்களை இவர்கள் சந்திக்கின்றனர். அதுவும் கண்ணியமான புர்காவோடு. இதனால் இவர்களின் வேலைகளில் எந்த சிக்கலும் இல்லை. பாலியல் துன்புறுத்தல் இல்லை. வேலையும் ஒழுங்காக நடைபெறுகிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது இந்த வகையில் இருக்க வேண்டும். பெண் விடுதலை என்ற பெயரில் ஆபாச உடைகளை உடுத்திக் கொண்டு கண்ட பாய் பிரண்டுகளோடு சுற்றுவதும், இரவு வெகுநேரமாகியும் காதலனோடு சினிமாவுக்கு செல்வதும்தான் பெண் விடுதலை என்று நம் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி இவர்கள் சினிமாக்களைப் பார்த்து அதை வாழ்விலும் கடை பிடிக்க ஆரம்பிப்பதால் முடிவில் காமுகர்களால் வஞசிக்கப்படுகின்றனர். பிறகு அந்த பெண்ணை காதலனோ சமூகமோ திரும்பிக் கூட பார்ப்பதில்லை. தங்களுக்கு தாங்களே ஏன் இவ்வாறு சிரமங்களை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அரை குறை ஆடைகளோடு வெளியில் வந்து நீங்கள் சாதித்தது என்ன? தவறு செய்யாதவனைக் கூட உங்களின் உடைகள் அவனை தவறு செய்ய தூண்டுகின்றன.

எனவே உங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆபாச உடைகளை தவிர்த்து கண்ணியமான உடைகளில் வர முயற்சிப்பீர்களாக!..தேவையற்ற பிரச்னைகள் உருவாவதையும் தடுப்பீர்களாக!

source: http://suvanappiriyan.blogspot.in/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb