இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்
முந்தைய வேதங்கள் கூறும் ஆதாரங்கள்
இறுதி வேதத்தில் சொல்லப்பட்டவாறே முந்தைய வேதங்களிலும் இறைவனுக்கு இணைவைத்தல் வன்மையாகக் கண்டிக்கப்படுவவதை நாம் காணலாம்.
இதற்கான ஆதாரங்கள் :
o யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை ௭:௨௦)
o அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே – (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களை – காற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) – யஜுர்வேதம் Yajurveda, Chapter 40, Verse 9–
o “யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவை) வணங்குகிரார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர்” என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம்.
பைபிளின் கூற்று:
இன்னும் பழைய ஏற்பாட்டிலே , யாஸ்ராகாமத்திலே 1 முதல் 5 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன:
எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது.
“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (தீமோத்தேயு 6:16)
”பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை.” (புதிய ஏற்பாடு – மத்தேயு 7:21)
ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகும். ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ,
”அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லைஸ அக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.” (மத்தேயு 7:21)
இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?….
தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும், அவனை விடுத்து மற்றவற்றை வணங்குவது மாபெரும் பாவம் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதைத்தானே?
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ”நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ (இறை வெளிப்பாடு) அறிவிக்காமலில்லை. (திருக்குர்ஆன் 21:25)
எனவே இறைவனுக்கு இணைவைத்தல் என்பது இறைவன் வன்மையாகத் தடுக்கும் காரியமும், மன்னிக்கப்படாத பாவமும் ஆகும். மேலும் இப்பாவத்துக்கான தண்டனை மறுமையில் நிரந்தர நரகமாகும் என்பதைத் தெளிவாக அறிகிறோம்.
‘
நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும்; எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள’;. (திருக்குர்ஆன் 98:6)
ஆக, இந்த இணைவைக்கும் பாவத்தை யார் எந்த வடிவில் செய்தாலும் அது பாவமே!
source: http://quranmalar.blogspot.in/2012/09/blog-post_6800.html