திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்!
மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப்படத் தக்கது அல்ல, மாறாக நமக்கு உலக அரங்கிலேயே தமிழினத்திற்கு இழிவைத் தேடித் தரும் விடயம் அது!
ஆம், ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்கள் என்று தமிழினமே முத்திரை குத்தி வைத்திருந்த ஒரு கூட்டத்தை இன்று அவர்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என்று கருதி அவர்களை அனைத்து மக்களுக்கும் மேலே உயர்த்திவைத்து அழகுப்பார்க்கும் விந்தையே அது! பொறுப்பற்ற இந்த சமூகப் போக்கு கட்டுப்படுத்தப் படாததன் விளைவாக இன்று பல அபாயங்கள் நம்மை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன.
கலைச் சேவை என்ற பெயரில் திரை வழியாக ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் பணியில் நடிக நடிகையர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் என ஒரு பெரும் படையே திரண்டு இயங்கி வருகிறது.
திரைக்கும்பல் மூலம் உருவாகப்பபட்டு காட்டுத்தீயாக பரவிவரும் இத்தீமைகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்து வருகின்றது ஊடகக் கும்பல்.
பொதுமக்களின் பொருளை கொள்ளையடிப்பது ஒன்றே இவ்விரண்டு கும்பலகளுக்கும் உள்ள பொது நோக்கம்! அவர்களின் காமப் பசிக்கும் ஆர்வப் பசிக்கும் தீனி போட்டு தங்கள் வயிறை வளர்ப்பது ஒன்றே இவர்களின் இலட்சியம்! சமூகம் எக்கேடு கேட்டுப் போனால் நமக்கென்ன, ,நமக்கு வேண்டியது பணம் என்ற கண்மூடித்தனமான வெறிகொண்டு இயங்கி வருகிறது இக்கூட்டணி! அதேவேளையில் இவர்களின் பணப்பசிக்கு இரையாகும் ரசிகர் கூட்டமோ தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நாசத்தையோ, தங்கள் நாடே பறிபோய்க் கொண்டிருக்கும் அபாயத்தையோ, உலக அரங்கில் தமிழினத்திற்கு உண்டாகும் அவமானத்தையோ கண்டுகொள்ளாமல் ஒருவிதமான போதையில் ஊறிப்போயுள்ளது.
நோய் முற்றும் முன்……
இந்த இரு கும்பல்களும் சின்னத்திரை மூலமாகவும், பெரியதிரை மூலமாகவும் நம் வீடுகளுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சி வரும் நச்சுக் கிருமிகள் ஏராளம், ஏராளம்! அவற்றின் விளைவாக நம் குடும்ப உறவுகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் மானம் மரியாதை அனைத்தையும் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் அவலநிலையில் உள்ளோம்! எங்கு பார்த்தாலும் உடைந்து போன உறவுகள், பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், முதியோர் இல்லங்கள், கள்ளக்காதல் உறவுகள், விபச்சாரம், போதைப்பொருள் ஆதிக்கம், நம்பிக்கை மோசடிகள்….. என முடிவுறாத பட்டியல்! …..இனி என்னதான் இல்லை என்று நம்மைக் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன! இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா?
இந்த நோய் முழுவதுமாக முற்றி நம்மை அழித்துவிடும் முன் எவ்வாறு இதைத் தடுப்பது? தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட அனைவரின் இதயத் துடிப்பும் இவ்விடயத்தில் பலமாகவே ஒலிப்பதை நாம் கேட்கமுடிகிறது! ஒவ்வொரு குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் இவ்வளவு மோசமாகப் புரையோடிப் போயுள்ள இந்தக் கலாசாரத்தை மாற்ற முடியுமா? கலை உணர்வு, வேடிக்கையை ரசித்தல், காம உணர்வு, பொருளாசை, புகழாசை… போன்றவை எல்லா மனிதனுக்குள்ளும் குடிகொள்வது இயற்கையே. இவைதானே இன்றைய இந்த இழிநிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றன? இவற்றிற்கு வடிகால் போடமுடியுமா? என்றெல்லாம் நீங்கள் கேட்பதும் உரக்கவே கேட்கிறது.
ஆம் அன்பர்களே, சீர்கேட்டின் சிகரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழகத்தைக் காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது. அது தனிநபர் சீர்திருத்தம் மூலம் மட்டுமே சாத்தியம்! ஆம், இங்கு தீமைகளை விதைப்போரையும் அவற்றிற்குத் துணைபோவோரையும் பாதிக்கப் படுவோரையும் என அனைவரையும் ஒருசேர சீர்திருத்தியாக வேண்டும். அது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியமே! அதற்கு மனிதகுலம் அடிக்கடி மறந்துவிடும் சில அடிப்படை உண்மைகளை மீண்டும் அவர்களின் மனங்களில் விதைக்க வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இவற்றை நினைவூட்ட ஆவன செய்யவேண்டும்.
அதில் முதல் அடிப்படை நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே என்ற உண்மை. அதாவது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்ற மறுக்கமுடியாத உண்மையை நாம் மறந்து விட்டதனால்தான் ஒருவரை ஒருவர் வெல்லவேண்டும், கொல்லவேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்ற சுயநலம் நமக்குள் தலை தூக்குகிறது. மட்டுமல்ல மனித சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நாம் மறந்துவிடுகிறோம்.
இரண்டாவது அடிப்படை, நம் அனைவரையும் படைத்தவனும் பரிபாலித்து வரக்கூடியவனும் ஆகிய இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதும் அவன் ஒரே ஒருவன்தான், என்ற உண்மை. அந்தப் படைத்தவன் மட்டுமே இறைவன் அவனுக்கு மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க சக்தியுள்ளது என்ற உண்மையை மறந்துவிடுவதால்தான் நம்மில் பலரும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் கண்டவர்களையும் கடவுளாக பாவிக்கத் தலைப்படுகிறார்கள். அதனால் கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல் போகிறது. பாவங்கள் சமூகத்தில் மலிகின்றன.
மூன்றாவது அடிப்படை, அந்த இறைவனுக்கு நாம் இன்று செய்துகொண்டிருக்கக் கூடிய செயல்கள் அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பேருண்மை. அதாவது இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் அழித்துவிட்டு மீண்டும் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்வான். அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான் என்ற உணர்வு சமூகத்தில் பொறுப்புணர்வு வளர மிகமிக அவசியம்.
சமூகம் சீர்கெடும்போது இந்த அடிப்படை உண்மைகளைத்தான் தொன்றுதொட்டு பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைவனுடைய தூதர்கள் மக்களுக்கு நினைவூட்டி அவர்களை நெறிப்படுத்திச் சென்றார்கள்.
சமூக நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களும் சீர்திருத்தவாதிகளும் இன்றும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். பெருகி வரும் பேராபத்துகளில் இருந்து நம்மையும் நம் தலைமுறைகளையும் காப்பாற்றி மீண்டும் நாட்டில் தர்மத்தை நிலைநாட்ட யாருக்கெல்லாம் நாட்டம் உள்ளதோ அவர்கள் ஓரணியில் திரளவேண்டும். நமது மதம், ஜாதி, குலம், நிறம் மொழி போன்ற வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படை உணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும். மனிதனின் எதிரியான ஷைத்தான் என்ற கொடிய சக்திதான் நம் வேற்றுமைகளைப் பெரிதாகக் காட்டி நம்மைப் பிரித்தாள்கிறான். அதன்மூலம் நம்மில் இருந்து இறைவனின் மீதுள்ள பக்தியையும் பயத்தையும் மறக்கடிக்கிறான்.
மேற்கண்ட அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைப்பதோடு இறைவன் இவ்வுலகில் எதையெல்லாம் நமக்கு அனுமதித்திருக்கிறான், எதையெல்லாம் தடுத்திருக்கிறான் என்ற வரையறைகளையும் அவற்றைப் பேணுவதால் இவ்வுலகில் நமக்கு சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றிற்குப் பரிசாக மறுமையில் சொர்க்க இன்பங்களை இறைவன் வழங்க இருக்கிறான் என்ற உண்மையையும் இறைவன் தடுத்த பாவகாரியங்களைச் செய்தால் மறுமையில் நரக நெருப்பின் வேதனை காத்திருக்கிறது என்ற உண்மையையும் அறிவுபூர்வமான முறைகளில் மக்களின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கவேண்டும். அதேவேளையில் நீதிபோதனை என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் காலாவதியாகிப் போன பழம் புராணங்களையும் மூடநம்பிக்கைகளையும் போதித்தால் மீண்டும் மனிதனின் கடவுள் நம்பிக்கையும் இழந்துவிடுவான் இறையச்சமும் அவனைவிட்டுப் போய்விடும். தமிழ்நாட்டில் நாத்திகம் தலைதூக்கக் காரணம் அதுவாகத்தான் இருந்தது என்பதை நாம் அறிவோம்.
எவ்வாறு அறிவுபூர்வமான முறையில் போதிப்பது?
அதற்காக இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களைச் சீர்திருத்துவதற்காக இறைவன் அனுப்பிய வேதமாம் திருக்குர்ஆனையும் இறுதித் தூதரின் மொழிகளையும் நாம் நாடியே ஆகவேண்டும். காரணம் இவை மட்டுமே எந்தக் கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இறை உபதேசங்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பதையும் முந்தைய வேதங்கள் காலாவதியாகிவிட்ட காரணத்தால் அவற்றில் மனித வாக்குகள் கலந்து விட்டன எனபதையும் நடுநிலையோடு ஆராய்வோர் அறியலாம்.
இறையச்சத்தை எவ்வாறு விதைப்பது என்பதை அறிய இதையும் படியுங்கள் :
திரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை!
நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம் என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே. ஆனால் இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை! ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது.
இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக… இஷ்ட தெய்வங்களாக….மாறி விடுகிறார்கள். எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது. எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப் படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன, நாட்டின் ஆட்சிப் பொறுப்பும் இவர்கள் காலடியில் சமர்ப்பிக்கப்படுகின்றது!
இறுதி இறைத்த்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு இங்கு நினைவு கூரத் தக்கது:
நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன, இறைத்தூதர் அவர்களே? என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் – புஹாரி 6496
சற்றும் பொறுப்புணர்வே இல்லாத சுரணையற்ற இந்த சமூகப் போக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் ஓரளவுக்குக் காணப்பட்டாலும் மிகமிகத் தீவிரமாக காணப்படுவது நம் தமிழகத்தில்தான் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதை அறியாமையின் சிகரம் என்பதா? சமூக சீரழிவின் உச்சகட்டம் என்பதா?
திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் .பல தரப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.
இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக ‘நடிக்கும்’ இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் ஒருபுறம். இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.
இந்தத் திரைக்கூத்தாடிகள்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்! விளம்பரங்களில் இவர்கள் தலைகாட்டி சான்றிதழ் கொடுத்தால்தான் அவை விற்பனை ஆகுமாம்! இந்த இழிபிறவிகளின் நடை உடை பாவனைகள்தான் வளரும் சமூகத்தின் முன்மாதிரிகளாம்! .இவர்கள் ஆதரவு கொடுத்தால்தான் நாட்டை ஆளும் மக்களின் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்! இவர்கள்தான் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருபுறம் இலவசங்களைக் காட்டி மறுபுறம் நாட்டுவளங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்களாம்! என்ன ஒரு அவமானம்!
தமிழனின் தலைவிதி ஏன் இவ்வாறு விபரீதமாகப் போகிறது?
நம் முன்னோர்கள் அவ்வப்போது ஆன்மீக வளமூட்டி வளர்த்த பண்பாடு எங்கே தொலைந்தது?
யார் இதைப் பற்றி கவலைப் பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, நமது கண்களின் முன்னால் இந்தத் தீமை கட்டுத்தீ போல பரவுகிறது என்ற காரணத்தால் இறைவிசுவாசிகளாகிய நாம் இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறைவனின் இறுதித் தூதர் நமக்கு இடும் கட்டளை இதுவே:
உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
இந்த வளரும் தீமையைக் கையால் தடுக்க இயலாதபோது குறைந்தது நாவினாலாவது தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீமைகளை விதைப்போரும் அதற்குத் துணைபோவோரும் தங்களைத் திருத்திக் கொள்ளாமலே மரணிப்பார்களானால் இவர்கள் மறுமையில் சந்திக்க இருக்கும் தண்டனைகள் பற்றி எச்சரிப்பது நமது கடமை. எந்த தண்டனைகளை பயந்து இன்று நாம் இந்தத் தீமைகளில் இருந்து விலகி நிற்கிறோமோ அவற்றைப் பற்றிய செய்திகளை மனிதாபிமான உணர்வோடு இன்றே இவர்களோடு பகிர்ந்து கொள்வோம்:
ஆம்,
சம்பந்தப்பட்டவர்களே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!
இன்று நாம் வாழும் உலகின் அதிபதி நம்மைப் படைத்த இறைவன் ஆவான். அவனது அருட்கொடைகளை அனுபவித்துவரும் நாம் அவனுக்குக் கீழ்படிந்தே வாழவேண்டும். அதாவது அவன் எவற்றைச் செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்தாக வேண்டும் அவையே புண்ணியங்கள் என்று அறியப்படுகின்றன. எவற்றை செய்யாதே என்று தடுத்துள்ளானோ அவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவையே பாவங்கள் எனப்படுகின்றன. இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் முழுமையாக அழிப்பான். அதன்பிறகு மீண்டும் ஒருவர் விடாமல் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்து அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான். அதுதான் நம்முடைய நிரந்தர இருப்பிடம். (மேலதிக விளக்கங்களுக்கு அவனது இறுதிவேதமான திருக்குர்ஆனைப் படிக்கவும்).
சரி, இப்போது நீங்கள் செய்தும் பரப்பியும் வருகின்ற பலதும் குற்றங்களாக இருந்தாலும் விபச்சாரம் என்ற குற்றத்தைப் பற்றி மட்டும் இங்கு உதாரணமாக எடுத்துகொண்டு எச்ச்சரிப்போம்.
இவ்வுலகுக்கு அதிபதியாகிய இறைவன் விதித்த சட்டப்படி, ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். தாம்பத்தியம் அல்லது உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் அதுவும் எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்வதற்கு மட்டுமே அவன் அனுமதித்துள்ளான். அதை….
= ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் செய்வது தண்டனைக்குரிய பாவம்.
= அதைப் பிறர் பார்க்கச் செய்வது அதைவிடப் பாவம்.
= அதைப் பதிவு செய்வது அதைவிடப் பாவம்.
= அந்தப் பதிவை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதும்
= அதைக்கொண்டு சம்பாதிப்பதும் வயிறு வளர்ப்பதும்
= அவற்றை வருணிப்பதும் விமர்சிப்பதும்
= அவற்றைக் காண்பதும் ரசிப்பதும் என அனைத்துமே பாவமாகும்.
இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
78:21-30.நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
18:29 …..அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ எந்த முகத்தைக் கொண்டு சுவரொட்டிகளில் சிரித்துக்கொண்டு நின்றீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! பரிகாரம் தேடுங்கள்!
நம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்துள்ளான். திருந்தி மீள்வோரை நேசிக்கிறான்!
39:53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
விபச்சாரியும், விபச்சாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைவிசுவாசிகளில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (அல்குர்ஆன் 24:2)
source: http://quranmalar.blogspot.in