Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கதவைத் தட்டும் முன் திறந்து வை!

Posted on August 2, 2013 by admin

கதவைத் தட்டும் முன் திறந்து வை!

ஆம், அந்த என்ற அழையா விருந்தாளி திடீரென நம்மிடம் வருவான். எப்போது வருவான் என்பதை அவன் சொல்லிக்கொண்டு வருவதில்லை.

வந்தால் அவன் ஒரு கணமும் காத்திருப்பதில்லை. நாம் நம் வீடுகளில் இருந்தாலும் சரி, வீதிகளில் இருந்தாலும் சரி, ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தாலும் சரி, தொழிலில் அல்லது வியாபாரத்தில் அல்லது படிப்பில் நாம் முனைப்பாக இருந்தாலும் சரி, அவன் நம்மை விடுவதில்லை.

வெடுக்கென்று நம்மை இழுத்துச் சென்று விடுகிறான்.

நாளை நமக்காக பல விஷயங்கள் காத்திருக்கின்றன….. பல கடமைகள், தீர்க்க வேண்டிய கடன், முக்கியமான ஒரு வர்த்தகப் பேச்சுவார்த்தை, ஒரு திருமண விருந்து, மாலை வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் மகனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருதல்….. எனப் பற்பல விஷயங்கள்……… இந்த விருந்தாளிக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

அவனுக்கு நமது உறவுகளும் உணர்வுகளும் உடமைகளும் எதுவுமே தென்படுவதில்லை. சட்டென்று வந்து வெட்டொன்று துண்டு இரண்டு என நம்மை இவ்வுலகிலிருந்துப் பிரித்து விடுகிறான்.

யார் அவன்?…….. அவன் வேறு யாருமல்ல……. அவன்தான் நம் உடன்பிறப்பான மரணம்!

அவன் வரும் முன் நாம் முக்கியமாகத் திறந்து வைக்கவேண்டிய ஒன்று உள்ளது….. அதுதான் நம் மனக்கதவு! முன்னோரின் பழக்கவழக்கங்கள், வறட்டு கவுரவம், மூடநம்பிக்கைகள், மனோஇச்சை போன்றவற்றால் பூட்டு போடப்பட்டு அடைந்து கிடக்கும் அந்த மனக்கதவைத் திறந்து வைத்தால்தான் சத்தியம் நமக்குள் நுழையும்.

அந்த மரணம் நம்மைச் சந்தித்த பின் நம் நிலை என்ன?

ஆம், அதைப்பற்றி தான் நாம் கவலைப் பட வேண்டியவர்களாக உள்ளோம். அவனை சந்திப்பதற்கு நாம் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் என்ன? அதை இப்போதே ஆராய வேண்டும் அதன்படி செயல்பட வேண்டும்.

இறைநம்பிக்கை கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 59:18)

source: http://quranmalar.blogspot.in/2012/09/blog-post_7717.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 72 = 81

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb