Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!

Posted on July 20, 2013 by admin

மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!

     கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்     

இவ்வுலகில் அல்லாஹ்விற்கு மாறுதல் செய்கின்ற மனிதர்களுக்கு மறுமையென்னும் இறுதி நாளில் மிகப்பெரிய நரக வேதனை உண்டு என்பதற்கு மனிதன் உண்டு மகிழும் மீன்களே எடுத்துக்காட்டாக இருக்கிறது!

பரந்து கிடக்கும் கடலுக்கடியில் வசிக்கும் மீன்களை பிடித்து உண்ண நினைக்கும் மனிதனின் தூண்டில் முள்ளில் இருக்கும் மண் புழுவை பார்த்ததும்;

அதை சாப்பிட ஆசைப்பட்டு தூண்டிலில் வாயை வைத்து இழுக்கும் போது தூண்டில் போடுபவன் மிதப்புக்கட்டை தண்ணீருக்குள் போவதை பார்த்ததும் தூண்டிலை சுண்டி மேலே இழுக்கிறான்;மீன் அவனின் கையில் சிக்கிக்கொள்கிறது.

பிறகு இந்த மீனை மனிதன் தான் எப்படியெல்லாம் சுவைக்க வேண்டுமென நினைக்கிறானோ? அப்படியே சமைத்து உண்டு மகிழ்கிறான்.

இதே போன்று தான் ஒரு முறை கடலில் தூண்டில் முள்ளில் இருக்கும் புழுவை பார்த்ததும் ஒரு சிறிய மீன் ஆசைப்பட்டு அருகில் சென்றபோது மற்றொரு பெரிய மீன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது;

சிறிய மீனே! அதன் அருகே செல்லாதே, ஆசைப்பட்டு அதை சாப்பிட நினைத்தால், நீ ஒரு மனிதனின் கையில் அகப்பட்டுக்கொள்வாய். அந்த மனிதனுக்கு இரண்டு கை, இரண்டு கால் அதன் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்கள் இருக்கும்.

உன்னை பிடித்ததும் அவன் ஒரு கூர்மையான கத்தியை கொண்டு அறுத்து எண்ணைச்சட்டியில் போட்டு வறுத்து சாப்பிட்டு விடுவான்.

பிறகு நீ இவ்வுலகமாகிய இந்த கடலுக்குள் கடைசி வரைக்கும் வரமுடியாது! காரணம் கடலை விட்டு கரைக்கு சென்ற எந்த மீனும் திரும்பிய சரித்திரமில்லை.

ஆகையால், நீ ஜாக்கிரதையாக இருந்துகொள் எனக்கூறுகிறது.

இந்த பெரிய மீனின் வார்த்தை உண்மையென உறுதி கொண்டால் சிறியமீன் மனிதனின் வேதனையை விட்டும் தப்பித்துக்கொள்ளும்.

மாறாக பொய்யென நினைக்குமேயானால், மனிதனின் வேதனைக்குட்பட்டு சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும். இதே போன்றுதான் மனிதனின் நிலையும்.

இவ்வுலக வாழ்வின் ஆசைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நாளை மறுமையின் வாழ்க்கைக்குரிய நல்ல செயல்களின் மீது நம்பிக்கை இல்லாமல் வாழும் மனிதர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb