Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

Posted on July 18, 2013 by admin

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ
 
பசியினையே பசியறியார் புரிந்திடவே
  பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே !
“பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே !
  பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே !
பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி !
  பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி !
ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி !
  ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி !

கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் !
  கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் !
கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக்
  காணிக்கை செய்திடுவான் காமத்தை !
சுட்டுவிழிப் பார்வையிலே சுருண்டுபோகும்
  சுந்தரியைச் சீண்டியுமே பார்க்கமாட்டான் !
கட்டுடலைக் கட்டிவைப்பான் இறைவனுக்கு !
  காளையவன் தேர்ந்துவிட்டான் சுவனத்திற்கு !
 
நேர்மையுடன் உழைத்தெடுத்த பொருளிருக்க
  நேர்த்தியுடன் சமைத்தெடுக்கப் பெண்ணிருக்க
ஆர்வமுடன் படைத்துவைக்கத் தாயிருக்க
  ஆவலுடன் உண்பதற்கு மனமிருக்க –
பார்படைத்த பேரிறையின் அருளைத்தேடி
  பக்தியுடன் பசியினையே தியாகம்செய்வான் !
சீர்மிகுந்த சொர்க்கமதைத் தெரிவுசெய்வான் !
  சத்தியமாய் சொர்க்கவாசி இவரே காண்பீர் !
 
பழமிருக்க பாலிருக்கப் பழச்சாறிருக்க
  பளிங்குகளின் கிண்ணங்களும் அழகாயிருக்க
பழகிவந்த நண்பர்களும் பக்கமிருக்க
  பாங்குடனே ஊற்றிவைத்தும் மனம்வெறுக்க
அழகுமிகு ரமளானைக் கருத்தேகொண்டு
  அத்தனையும் ஒதுக்கிவைத்துத் தாகித்திருப்பார் !
அழகுடனே ‘முப்பசி’யும் வென்றமுஸ்லிம்
  அருளுடனே சொர்க்கமதில் வீற்றிருப்பார் !
 
நன்றி :
நம்பிக்கை மாத இதழ், மலேசியா
ஜனவரி 1998

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb