Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏன் புறக்கணிக்கப் படுகிறாய்?

Posted on June 28, 2013 by admin

ஏன் புறக்கணிக்கப் படுகிறாய்?

அன்புள்ள இஸ்லாத்துக்கு…
உன்னை பின்பற்றும்
அல்லாஹ்வின் அடியான்
எழுதிக் கொள்வது…

நீ எங்கிருந்து எப்போது
எதன் வழியாய் வந்தாய்
என்னுடைய மண்ணுக்கு?
 
புத்தகம் புரட்டினேன்…
சிரிக்கத் தோன்றும்
திரிந்த சரித்திரங்களில்
உனது முகவரிகள்
எங்குமே காணப்படவில்லை

உலகச் சீர்திருத்தத்தில்
உன் சேவை – மகத்தானது
நாகரீகப் புத்தகத்தில்
புரட்டும் பக்கமெல்லாம் – உன்
பாதச் சுவடுகள் தான்

உலகம் உன்னை
உற்றுநோக்கத் தொடங்கி விட்டது…
மேற்கத்திய அறிஞர்களின்
ஆய்வு நுண்ணோக்கிகளிலெல்லாம்
உன் பிம்பங்கள்தான்

அலட்சியம் சூழ்ந்த
முஸ்லீம்களால் ஏனோ நீ
தொடர்ந்து…
புறக்கணிக்கப் படுகிறாய்…

என்றாலும்…
அழிந்து விடாது உன்
சாதனைச் சான்றுகள்

யுத்தங்களின்றி…
சத்தங்களின்றி… உன்
வாட்கள் வீழ்த்தியதெல்லாம்
அஞ்ஞானத்தின்
தலைகளைத்தான்

அரபுச் சந்தைகளில்
அடிமைத்தலைகளை
“அழித்து”…
“ஒலித்த”தெல்லாம் – உன்
“அஹத்” எனும் மந்திரம்தான்

குற்றங்கள் குறைந்திட
மறுமையை நினைவூட்டி
மானுடம் காத்து
மகுடமும் சூட்டிக்கொண்டாய்

அனாச்சாரத்தின்
அகன்ற சாலையெங்கும் – உன்
“எச்சரிக்கை”ப் பலகைகள்
இல்லாமலில்லை

அழிவுப் படுகுழியின்
விளிம்பில் நின்றிருந்தும்
உலகம் ஏனோ
பாராமுகம் காட்டுகின்றது…

ஒன்று மட்டும் உறுதி…
சுவனங்களின்
வரவேற்பறைகளில்
நுழையும் மார்புகளெல்லாம்
சுமக்கப் போவது – உன்
அடையாள அட்டைகளைத்தான்
 
தொடரட்டும் உன்
ஆக்கங்கள்…

source: http://www.thamilkhilafa.com/2011/10/blog-post.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

85 − = 76

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb