Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புற்றுநோயை விரட்டும் தேன்

Posted on June 11, 2013 by admin

புற்றுநோயை விரட்டும் தேன்

புற்று நோயாளிகளுக்கு இது தேனான செய்தி. ஆமாம், தேனும் தேன் பொருட் களும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் எனக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. தேன் கூட்டைக் கட்டுவதற்கு தேனீக்கள் ஒரு விதமான பிசினைப் பயன்படுத்து கின்றன. இதைத் தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள்.

வேலைக்காரத் தேனீக்களின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இருந்து வரும் ஒரு விதத் திரவம் ‘லார்வா’ தேனீக்களுக்கு உணவாகும். தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது. ஆனால், தேனீ கொட்டினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும். அப்படிப்பட்ட தேனீயின் விஷம், தேன் மெழுகு, தேனீயின் உமிழ் நீர் திரவம், தேன் ஆகியவற்றை எலிக்குச் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் எலிக்கு தேனும் புகட்டப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதன்பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன்மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க் கட்டி வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப் பட்டிருப்பது உறுதியானது. மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது. தேனீயின் விஷம் காரணமாக எலியின் புற்றுநோய்க் கிருமிகளும் பெருமளவு அழிக்கப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேனீயின் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்றுநோய் கிருமிகள் பரவுவது கணிசமாகக் குறைந்திருந்தது தெரிந்தது.

”தேன் பொருட்கள் புற்று நோய்க் கிருமிகள் மடியக் காரண மாகின்றன. அல்லது புற்றுநோய்க் கிருமிகளுக்கு தேன் பொருட்கள் விஷமாகின்றன. புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை தேன் பொருட்கள் அளிப்பது தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம் புற்று நோய்க் கட்டியின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாகப் பயன்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப் படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை. மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி, தேன் பொருட்கள் புற்று நோய்க் கிருமிகளை அழிப்பது உறுதியானால், உலகில் தேனுக்கு கிராக்கி ஏற்படும் என்பதில் ஐயமில்லை!

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல் குர்ஆன் : 16:69)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 61

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb