Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தமிழக வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

Posted on March 26, 2013 by admin

தமிழக வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக ஜெ.எம். ஹாரூண், முஹம்மது ஜின்னா ஆகியோரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் ரஹீம், அமைச்சர் முஹம்மது ஜான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் 4 பேரும் சேர்ந்து தமிழ் மகன் உசேனை வக்பு வாரியத்தின் தலைவராக தேர்வு செய்திருந்தனர்.

இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ம.ம.க.வின் மூத்த உறுப்பினர் ஜவாஹிருல்லா, வழக்கறிஞர் அப்துல் ரஹ்மான் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் மட்டும் இருந்தால் அவர்களை எந்த தேர்தலும் நடத்தாமல் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமனம் செய்யலாம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் 3நாடாளுமன்ற உறுப்பினர்களும், 5 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலையில் தேர்தல் நடத்திதான் தலா 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், அந்த தேர்தலை நடத்தாமலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேரையும், சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரையும் உறுப்பினராக வக்பு வாரியத்தில் நியமித்துள்ளனர். மேலும் அமைச்சராக இருப்பவர் உறுப்பினராக முடியாது. ஏதாவது ஒரு பதவியை தான் அவர் வகிக்க வேண்டும். எனவே, வக்பு வாரிய விதிகள் மீறி நடத்தப்பட்ட உறுப்பினர் நியமனங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திர பாபு ஆகியோர் விசாரித்தனர். உறுப்பினர்கள் 4 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த 4 உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ் மகன் உசேனை தலைவராக தேர்தெடுத்தது செல்லாது என அறிவித்தனர். மேலும் அமைச்சர் முஹம்மது ஜான் அல்லது உறுப்பினர் பதவி ஏதாவது ஒன்றில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வக்பு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலை இன்னும் 2 மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb