Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீங்கள் வாழ்வது விரும்பிய வாழ்க்கையா?

Posted on March 24, 2013 by admin

நீங்கள் வாழ்வது விரும்பிய வாழ்க்கையா?

[ மனைவியின் உணர்வுகளை கணவர் மதிக்கத் தொடங்கும்போதே குடும்பத்தில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறது. மனைவியும் கணவர்களின் உணர்வுகளறிந்து செயல்படும்போது இணைகளில் வாழ்க்கை இவ்வுலகிலும் சொர்க்கத்தையே எட்டிப்பிடிகிறது.

ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்க்கைத்துணை மட்டும் சிறப்பானதாக அமைந்துவிட்டால் அவள் பிறந்த பிறவிக்கும், வாழும் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது போலாகும்.

என் எழுத்துகளுக்கு கிடைக்கும் எதுவானாலும், என்னைவிட அதிக சந்தோஷப்படுவதும், மகிழ்வடைவதும் மச்சான்தான். 

எனக்கான எல்லாமும், என்னுலகமும் அவர்கள் அவர்கள் மட்டுமே,

அப்ப குழந்தைகள் என்கிறீகளா?

அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரைதானே நம்மிடம், அப்பால் பிறரிடம்தானே,

ஆனால்! நம்முயிர் நம்மைவிட்டு பிரியும்வரை, நம் துணை எப்போதும் நம்மிடமே! நம்மிடம் மட்டுமே! நமக்கானதாக ஆக்கிக்கொண்டு, நாமாக வாழும்போது…

நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய! உங்களை நம்பிவரும் துணையை விரும்புங்கள் தூய்மையாக! நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்கள் கண்முன் உங்களுக்காகவே! ]

  நீங்கள் வாழ்வது விரும்பிய வாழ்க்கையா?    

இல்லறம் என்பது இனிமையும். கனிவும். கசப்பும். துவர்ப்பும். நிறைந்தவை, அவற்றை எவ்விதமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது இணைகளின் உள்ளத்தைப் பொறுத்ததே!

கணவன் மனைவி உறவு என்பது எப்படி இருக்கவேண்டும்? கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாகவும், பரஸ்பரம் அன்பு கொண்டவர்களாகவும் இருக்கணும், அப்படி இருக்கையில் இருவருக்குள்ளும் இணக்கமும் பிணக்கமும் வந்து வந்து போகவேண்டும், இடையிடையே ஊடல் ஏற்பட்டு சமாதனமாகும்போது ஏற்படும் அன்பு இன்னும் வலுவாமாகும்,

இருவரிடையே விட்டுக்கொடுத்தல் இருக்கவேண்டும், அனைத்திலும் ஒருவரே விட்டுக் கொடுத்துவிட்டு தன்னையும் ஏமாற்றி, அவரையும் ஏமாற்றி, மனதுக்குள்ளேயே சிறு வெறுப்புத் தோன்றி அதுவே பின் பெரும் விரிசலுக்கே காரணமாகிவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும்.

கணவன் மனைவிக்கும் ஊடல்கள் வருவது சகஜம், அப்படி வந்தால்தான் அந்த வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமிருக்கும். எங்களுக்கு சண்டையே வராது, எதுக்காவும் கோபட்டுக்கொள்ளவேமாட்டோம், எல்லாத்துக்கும் விட்டுகொடுத்துதான் வாழ்வோம்.சிறு ஊடல் கூட வந்ததேயில்லையென எந்த ஒரு கணவன் மனைவி சொல்கிறார்களோ! அது பொய், அந்த வாழ்க்கையில் போலிகளே நிறைந்திருக்கும், உலகுக்காக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.

பொன்னும் பொருளும் கொண்டு நிரப்பிதான் வாழவேண்டுமில்லை அன்பும் அறனும் நிறைந்து, இருவருமே உணர்வுகளுக்கு மதிப்பளித்துகொண்டு, நான் என்பதை களைந்து, நாம் என்பதை அணிந்து, இருவருமே ஒன்றுக்கொன்றில் விட்டுக்கொடுக்க வேண்டியவைகளில் விட்டுக்கொடுத்து ஒருவர் சந்தோஷத்தில் இருவர் கலந்து, ஒருவர் துக்கத்தில் இருவர் கசிந்து, ஊணும் உயிருமாய் வாழும்போது நிறைவைத்தவிர அவ்வாழ்க்கையில் எதுமிருக்காது.

மனைவியின் உணர்வுகளை கணவர் மதிக்கத் தொடங்கும்போதே குடும்பத்தில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறது. மனைவியும் கணவர்களின் உணர்வுகளறிந்து செயல்படும்போது இணைகளில் வாழ்க்கை இவ்வுலகிலும் சொர்க்கத்தையே எட்டிப்பிடிகிறது. மனைவியின் மனவுணர்களை புரிந்து, அவர்களுக்குள் திறமையிருந்தால் அதனை வெளிகொண்டு வர முயன்றால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.பெண் பிறவியிலேயே மென்மையானவள் பலவீனமானவள், அவளின் பலம் அவளின் துணையாக இருந்தால் அதுவே அவளுக்கு பலமடங்கு பலத்தைக் கொடுப்பதோடு, இல்லறமும் நல்லறமாகும், இல்லமும் இன்றியமையாததாகும்.

நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? என்பது நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும், அதனை சரிவர தீர்மானப்படுத்துவதில்தான் வாழ்க்கை வளமுடன் இருப்பதும், வளமற்று முறிவதும்.

ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்க்கைத்துணை மட்டும் சிறப்பானதாக அமைந்துவிட்டால் அவள் பிறந்த பிறவிக்கும், வாழும் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது போலாகும், எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் கண்டு, இன்ப துன்பங்கள் கடந்து, ஊடல்களும் மன உளைச்சல்களும் கடந்து, இதோ இன்று இருபத்தியிராண்டாம் வருடத்திலும், எனது உணர்வுகளை என்னைவிட அதிகமாய் நேசிப்பதோடு, அதனை மதித்து, பிறரும் மதிக்கும்படி செய்துவரும் என்னவர்.

இருக்கும்போது எப்படியோ, அது சற்று குறைந்தபோதும், இருப்பதைக்கொண்டு மனநிறைவோடு குடும்பம் நடத்தலாம், குதூகலமாக வாழலாமென்ற மனநிலையை உருவாக்கிகொண்டுள்ள நானும், இன்பங்களுக்கு குறைவில்லாமல் இனிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம் வல்லோன் அருளால்,

என் எழுத்துகளுக்கு கிடைக்கும் எதுவானாலும், என்னைவிட அதிக சந்தோஷப்படுவதும், மகிழ்வடைவதும் மச்சான்தான். அவர்களின் மூலம் என்னிடம் தொறிறிக்கொள்ள இரட்டிப்பாகும் சந்தோஷமும், மகிழ்ச்சியும். 2 நாள் ஆகிவிட்டாலே, “என்னங்கிறேன்” [எங்கட பாஷையிது] இன்னும் பிட்டு போடலையா என எழுதத்தூண்டுவதே அவர்கள்தான். எனக்கான எல்லாமும், என்னுலகமும் அவர்கள் அவர்கள் மட்டுமே, அப்ப குழந்தைகள் என்கிறீகளா? அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரைதானே நம்மிடம், அப்பால் பிறரிடம்தானே, ஆனால்! நம்முயிர் நம்மைவிட்டு பிரியும்வரை, நம் துணை எப்போதும் நம்மிடமே! நம்மிடம் மட்டுமே! நமக்கானதாக ஆக்கிக்கொண்டு, நாமாக வாழும்போது…

நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய! உங்களை நம்பிவரும் துணையை விரும்புங்கள் தூய்மையாக! நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்கள் கண்முன் உங்களுக்காகவே!

ஈருலகிலும் எங்களை இணைப்பிரியாமல் இணைத்து வைக்கசொல்லியே என்றும் எனது பிரார்த்தனைகள், அந்த பிராத்தனைகள் நிறைவேற நீங்களும் எங்களுக்காக பிரார்த்தியுங்கள்.

– அன்புடன் மலிக்கா

source: http://niroodai.blogspot.com/2013/03/blog-post_17.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

78 − = 75

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb