இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம்– மார்கண்டே கட்ஜு
இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் குண்டுவெடிப்பிற்கு காரணம் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் என்று உளவுத்துறையும், ஊடகத்துறையும் கூறிவந்தது.
ஒவ்வொரு முறையும் நாமும், நம்முடைய தளத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் என்பது கற்பனையாக உருவாக்கப்பட்டது என்று பலமுறை கூறியுள்ளோம்.
இந்நிலையில் ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டே கட்ஜு அவர்களிடம் கேட்கப்பட்ட போது இந்தியன் முஜாஹிதீன் என்பது ஊடகத்துறையால் கற்பனையாக உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் 99 சதவீதம் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார்.
அரசுப் பயங்கரவாதத்தை விட, மீடியா பயங்கரவாதம்தான் முஸ்லிம்களை இன்று கடுமையாக அச்சுறுத்துகிறது!
நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்கள் மீது ஆதாரமில்லாமல் வீண் பழி சுமத்தும் வேலையை மீடியா பயங்கரவாதிகள் தற்போது கையில் எடுத்திருக்கிறார்கள் ….
இந்தியன் முஜாஹிதீன் அலுவலகம் எங்கே இருக்கிறது..?! -அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் கேள்வி……!
இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் அலுவலகம் எங்கே இருக்கிறது ? அதன் நிர்வாகிகள் யார் யார் ? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர் எம்.பி.க்கள்.
அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் – கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் – பல ஆண்டுகள் சிறையில் கழித்த பின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் – பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது,
ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்,
ராம்விலாஸ் பாஸ்வான் :
2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது ?
ஒரு நேரத்தை கெடுவாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் :
இம்முறை இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல் நானே – நேரடியாக கவனிக்கிறேன், மேலும் எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் – கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு – நிரபராதிகளின் மறுவாழ்வு – தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான மெக்கானிசம் தயாரிக்கப்படும் என்றார் பிரதமர்.
ராம்கோபால் யாதவ் :
உத்தரபிரதேச அரசு அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால் இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள் நாளை இவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுப்பீர்கள் என நீதிபதிகள் கமென்ட் அடித்து அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்,
முஹம்மத் அதீப் :
முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது என்றார்,
மணிசங்கர் அய்யர் :
அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்,
பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது குறிப்பிடத்தக்கது.
பி.ஜே.பி. மட்டுமல்ல காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவை தான்! –உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார்
முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது
லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.
சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.
பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.
புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார்.
சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.
நன்றி: உணர்வு வார இதழ் – சுவனப்பிரியன் இணையம் & இந்நேரம்.காம்