Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு!

Posted on February 19, 2013 by admin

உடல் ஆரோக்கியத்துக்கு நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு!

ஆற்றுநீர் வாதம் போக்கும்

 அருவிநீர் பித்தம் போக்கும்

  சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

 -என்பது பழமொழி.

நீர் + ஆகாரம் = நீராகாரம். மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது கருதப்படுகிறது.

நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு! கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாகும். இதில் அடங்கியிருக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் நகரத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக கிராமத்தார்களைப் பார்த்து பொறாமை ஏற்படவே செய்யும்.

முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் விட்டமின் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் “ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்” (கவனியுங்கள்- மில்லியன் அல்ல “ட்ரில்லியன்”) பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

கூடவே இரண்டு சிறு வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அதனால் எந்த காய்ச்சலும் நம்மை அணுகாது. இப்பொழுது புரிந்திருக்கும் நமது மூதாதையர்கள் எதனால் பலசாலிகளாகத் திகழ்ந்தனர் என்று!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் சில உங்களுக்காக இதோ …

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும்போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியைத் தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வந்த்தால் ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லவற்றிற்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

இதெல்லாம் சரி… பழைய சாதத்தை (நீராகாரம் அல்லது நீ(ர்)ச்சோறு) எப்படி செய்வது என்று கேட்கிறீர்களா…? இதோ அதற்கான வழிமுறைகள்:

இதற்கு மிகவும் சிறந்தது பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிரைய ஊற்றவும். (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக்கூடாது). மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து குடிக்க “ஜில்”லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் கேட்காது உங்கள் வயிறு!

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

78 + = 80

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb