Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போனவருக்கு கிடைத்த பட்டமோ பயங்கர தீவிரவாதி!

Posted on February 12, 2013 by admin

மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போனவருக்கு கிடைத்த பட்டமோ பயங்கர தீவிரவாதி!

  உண்மை கதை   

அமெரிக்காவின் புதிய அடிமை கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில். ஏற்கனவே அமெரிக்க அரச தீவிர கண்கானிப்பில் இருக்கும் முஸ்லிகளை தன்னுடைய ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்கிற வெறிக்காக இன்னும் ஆழமாக அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற செய்தியை கூறியிருக்கிறார் ஆனால் உண்மை என்ன?

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.

முஹம்மது சல்மான் ஹம்தானி அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.

அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயுதமா?

சரி விஷயத்துக்கு வருகின்றேன்

அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.

அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.

(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31)

source:http://www.valaiyugam.com/2013/02/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

78 − 73 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb