”இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது.
எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.” – அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று அறிவிப்பதற்கு, அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.
ஆனால் கமல், நேற்று வரை இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச தயாராக இருப்பதாக அறிவித்தாரே தவிர, அரசை அணுகப் போவதாகக் கூறவே இல்லை. அதே போல அரசும் கூட அவருடன் பேச விரும்பாத சூழலே உள்ளது. ஆனால் இன்று அவர் அரசை அணுகி, விஸ்வரூபத்தை சுமூகமாக வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன.
இதுகுறித்து கமல் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “காட்சிகளை வெட்டிவிட்டு இந்தப் படத்தை வெளியிடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. (ஆமாம் வெட்டாமல் இருந்தால்தானே சமூகங்களுக்கிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்ட முடியும்…. வெட்டிவிட்டால் என்ன பிரயோஜனம் என்று கேட்பதிலிருந்தே இவர்களது நோக்கமே சமூக சீர்கேட்டை ஏற்படுத்த வேண்டும் என்பது தானே…!) மேலும் அரசை அணுகும் திட்டம் எதுவும் கமலிடம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்,” என்றனர்.
இதற்கிடையில் அரசும் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிடவோ, முடிவிலிருந்து பின்வாங்கவோ தயாராக இல்லை என்று தெரிகிறது. துப்பாக்கியில் காட்சிகளை வெட்டியது போல இந்தப் படத்திலும் வெட்டிவிட்டுப் போவதுதானே… ஏன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறார் கமல்? என்றுதான் திருப்பிக் கேட்டுள்ளார்கள் அரசுத் தரப்பில் பேசியவர்கள்.
இதற்கிடையில் இன்றைய நீதிமன்ற விசாரணையில் கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படம் வெளி வருவதற்காக ஏக முறைகேடுகளைச் செய்துள்ளார் கமல் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளதால், கமலுக்கு உச்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.
நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார். அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருமளவில் போலீஸ் குவிப்பு இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது.
இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.
விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல.
அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது. நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது.
அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார்.
மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார்.
அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.
அரசுத் தரப்பு வைத்துள்ள ஒரு வாதம் மிக முக்கியாமானது.
“விஸ்வரூபம் என்ற product-ஐ கமல்ஹாஸன் வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார்.
அதன் எந்த உரிமையும் இப்போது அவரிடம் இல்லை.
எனவே இந்தப் படத்தின் தடைக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை கமல்ஹாஸனுக்கு இல்லை.
மேலும் இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது.
எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2.30 மணிக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிபதி அறிவித்தார். பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். (-பச்சைப் பொய்) எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருமளவில் போலீஸ் குவிப்பு இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.
இதற்கிடையே, தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எழிலரசு. இவர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர். இதற்கிடையே முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி இந்த படத்திற்கு தமிழகத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது. இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது.
எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் தலீபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்,” என்று கோரியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.