Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கல்விக் கூடங்களில் 60 சதவீதம் முஸ்லிம் பெண்கள்!

Posted on January 22, 2013 by admin

கல்விக் கூடங்களில் 60 சதவீதம் முஸ்லிம் பெண்கள்! .

போபால்: மத்தியப் பிரதேசம் போபாலில் செயல்படும் மதரசாவில் 60% இடங்களை பெண்களே ஆக்கிரமித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மையப் பகுதி நகராக விளங்கும் போபாலில் நவாப்புகள், பேகம்கள், மதரஸாக்கள் ஆகியவை முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்துக்கு, அவர்களுக்குக் கல்வி அளிப்பதே சிறந்த வழி என்று செயல்படுகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் 5300 மதரசாக்கள் உள்ளன. இங்குள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 60 சதவீதம் பெண்களே! அதுபோல், பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மதரசா-இ-நிஸ்வானின் வார்டன் தய்யபா பயா, பர்தா அணிவதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார். தன்னை புகைப்படம் எடுப்பதைக் கூட அவர் அனுமதிக்கவில்லை.

இந்தப் பள்ளியில் பயிலும் இளைய தலைமுறையினரோ, தங்களுக்குள் விவாதக் கலாசாரத்தை வளர்த்துக் கொண்டு உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகின்றனர்.

இந்த மதரஸாவில் பயிலும் சம்ஷத் என்ற மாணவி தான் பொறியாளராக வரவேண்டும் என்று விரும்புவதாகக் கூறியுள்ளார். வழக்கமான ஆங்கிலப் பள்ளிக் கல்வி முறையில் வராவிட்டாலும் கூட, மதரஸாவில் இயல்பான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

“முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் கொடுமைபடுத்தப் படுவதாகவும், சிரமப்படுவதாகவும் கூறப்படுவது எந்த அளவுக்கு பொய்யானது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளே சாட்சி, இதுபோன்ற மாணவிகளின் ஆர்வம் எங்களுக்குப் பெருமை தரக்கூடிய விசயம்” என்று மதரசா போர்டின் தலைவர் ரஷித் கான் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மதரசாக்களில் பயிற்றுவிக்கப்படும் மதக் கல்வியோடு இணைந்த நவீன கல்வி மூலம் முஸ்லிம் பெண்களும் இளைய தலைமுறையும் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர்.

source:www.inneram.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb