Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்!

Posted on January 19, 2013 by admin

எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்! 

  M. ரிஸ்னி முஹம்மத்   

பிரிட்டன் அரசும் அமெரிக்க அரசும் இணைந்து பல முஸ்லிம் தேசங்களில் தமது பயங்கரவாத படைகளை ஏவிவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிவருகின்றது.

முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்கிறது சிறுவர் சிறுமியர் என்ற எந்த வேருபாடுகளும் பார்க்காமல் கொன்று குவிக்கின்றது.

பெண்களை சிறைகளில் அடைத்து நிர்வாணபடுத்தி வதை செய்கின்றது.

இத்தனையும் செய்யும் இந்த மேற்கு பயங்கரவாத இராணுவம் தமது மாமிச வேட்டை, காம வேட்டை போன்றவற்றை முடித்துவிட்டு நாடு திரும்பும்போது பிரிட்டனிலும், அமெரிக்கா மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு மேலாதிக்க நாடுகளிலும் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் வெறியாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் சிப்பாய்கள் கூட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இது தவிர்க்க முடியாத இயல்பான உணர்வின் வெளிப்பாடு ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலும், ஈராகிலும் கொல்லப்பட்ட பிரிட்டன் ஆக்கிரமிப்பு படை சிப்பாய்களை அவர்களில் சாமாதிக்கு சென்று வணக்கம் செலுத்தும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரைகுறை ஆலிம் ஒன்றையும்

BBC தனது செய்தி சேவையில் ஒளிபரப்பியது இத்தகைய பாவங்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் தேசம், தேசியம் ,நாடு என்ற குறுந் தேசிய எல்லைகளை காரணம் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படமுடியாது எந்த காரணங்களையும் முன்வைத்து தனது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அரசையோ, அரசின் இயந்திரமான இராணுவத்தையோ ஆதரிக்க முடியாது என்ற வலுவான குரல் இதற்கு எதிராக ஓங்கி ஒலித்து கொண்டிருகின்றது

இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது-

‘நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்’ -அல்ஹுஜுராத் 49:10.

இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவே முனைந்தது. முனைகிறது இந்த உலகளாவிய சகோதரத்துவதுக்கு தடையாக அமையும், தேசம், தேசியம், மொழி, இனம், பிராந்தியம், இயக்கம் என்ற வேறுபாடுகளை அனைத்தையும் இஸ்லாம் புறம் தள்ளி முஸ்லிம் என்ற பிரதான அடையாளத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. அந்த பிரதான அடையாளத்துக்கு எதிரான எந்த கோட்பாடுகளையும் முஸ்லிம் என்ற அடையாளம் புறம் தள்ளி விடுகின்றது இன்று நாட்டின் எல்லைகளுக்குள் அடையாளத்தை தொலைக்கும் தொலைக்க தூண்டும் நிகழ்வுகளை காண கூடியதாகவுள்ளது. இதில் முஸ்லிம் சமுகத்தில் சிறிய ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் மேற்க்கு ஊடகங்கள் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் செயலாக இவற்றை காட்ட முனைந்து வருகின்றது.

இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியை பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடும் போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” -முஸ்லிம்.

‘(நபியே!) எந்த மனிதர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள், தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சகோதரர்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோருடைய இதயங்களில் தான் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைப் உறுதிப் படுத்தி வைத்திருக்கின்றான்’ -அல்முஜாதலா- 22

source: ourummah.org

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 23 = 30

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb