Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கொஞ்சம் முரட்டுத்தனம்… கொஞ்சம் மென்மை…!

Posted on December 6, 2012 by admin

    கொஞ்சம் முரட்டுத்தனம்… கொஞ்சம் மென்மை…!   

[ பெண்களைப் பொறுத்தவரை உறவின்போது அதை அனுபவிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

மற்றபடி எப்படி இயங்க வேண்டும்,

என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம்

சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அது ஆணுடைய ட்யூட்டி!

பெண்களை சரியாக புரிந்து கொண்டு செம்மையாக செயல்பட வேண்டிய கடமை ஆண்களுக்குத்தான்.].

     கொஞ்சம் முரட்டுத்தனம்… கொஞ்சம் மென்மை…!   

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள். உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள். புரிந்து கொள்வது கொண்டு செயல்படுவது ஒரு கணவனின் கடமை.

உடலுறவில் பெண்ணுக்கு இருக்கின்ற இச்சை, ஆணின் இச்சையினின்று மாறுபட்டது. பெண்ணுக்குள்ள இந்த நியாயமான இயற்கைப்பூர்வமான எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டுள்ள ஆடவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. பாரம் இறக்கவே, தவிப்பால் உந்தப்படும் நிலையயே பெரும்பாலான ஆடவரது நிலையாக இருக்கிறது.

பெண்கள் மெல்லினம்… அவர்களிடம் வல்லினமாக நடந்து கொள்வது சாலச் சிறந்ததல்ல. பூவினும் மெல்லிய அவர்களிடம் வண்டுகளை விடவும் மென்மையாக நடந்து கொண்டு இன்பத் தேன் எடுக்க வேண்டும் ஆண்கள். அதேசமயம்,

சில நேரங்களில் மென்மையோடு கூடவே வன்மையும் இருக்கலாம். அப்படி இரண்டும் சேர்ந்து இணைந்து இயங்கும்போது அந்த இயக்கத்திற்குக் கிடைக்கும் வரவேற்பே அலாதியாக இருக்கும்.

பெண்களைப் பொறுத்தவரை வரை உறவின்போது அதை அனுபவிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

மற்றபடி எப்படி இயங்க வேண்டும்,

என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம்

சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அது ஆணுடைய ட்யூட்டி.

பெண்களை சரியாகப் புரிந்து கொண்டு செம்மையாக செயல்பட வேண்டிய கடமை ஆண்களுக்குத்தான்.

சில பெண்களுக்கு மென்மை மட்டுமே பிடிக்கும். இப்படிப்பட்ட பெண்களிடம் அவர்கள் பாணியிலேயே போய் அவர்களை சரிக்கட்ட வேண்டும். அதேசமயம், சில பெண்களுக்கு முரட்டுத்தனமும், வன்மையும் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களிடம் அதே பாணியில்தான் போக வேண்டும்.

கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்பது போல சிலருக்கு இரண்டுமே சம விகத்தில் கலந்து கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில்தான் எதை முதலில் செய்வது, எப்படி அணுகுவது என்பதில் பலருக்குக் குழப்பம் வரும். இருப்பினும் அனுபவம் இந்த நேரத்தில் கை கொடுத்து உதவிக்கு வரும்.

முரட்டுத்தனம் பிடித்த பெண்களிடம் உறவில் ஈடுபடும்போது

அவர்கள் எதிர்பாராத நேரத்தில் முரட்டுத்தன்த்தைக் காட்டுங்கள்.

அதை நிச்சயம் அவர்கள ரசிப்பார்கள்.

மேலும் அதை மறக்கவும் மாட்டார்கள்.

வெரைட்டி காட்டியும் பிரமாதப்படுத்தலாம். சில பெண்களுக்கு மென்மை ரொம்பப் பிடித்ததாக இருக்கும். அவர்களிடம் வெரைட்டியாக உறவாடலாம். அதிலும் கலை நயத்துடன் கூடிய உறவுகளையும், விளையாட்டுக்களையும் காட்டி அவர்களை குஷிப்படுத்த நல்ல வாய்ப்பாக இது அமையும்.

உறவின்போது கொஞ்சம் போல நாட்டியாகவும் நடந்து கொள்ளளாம். முகம் சுளிக்காத வகையிலான, ஆபாசம் கலந்த செல்ல கொஞ்சல்கள், உறுப்புகளுக்கு செல்லப் பெயரிட்டு அழைப்பது என்று கலந்து கட்டி அடிக்கலாம். மேலும் உங்களது துணையின் உடல் அமைப்பை வர்ணித்து அவர்களை மயக்கத்திலும், கிறக்கத்திலும் ஆழ்த்தலாம்.

செக்ஸ் உறவின்போது ஆளுமைதான் முக்கியம். ஆணைப் பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ கட்டுப்படுத்தி கரை சேர முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இன்பம் ஒருசேரக் கிடைக்கும்.

அதேசமயம், ஆளுமைப்படுத்துகிறேன் என்று கூறி ரொம்ப முரட்டுத்தனமாகவும், முட்டாள்தனமான செய்கைகளாலும் உறவை கெடுத்துவிடக் கூடாது.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 25 = 34

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb