Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கேவலம்….. கேவலம்… ச்… சீதனம்!

Posted on December 6, 2012 by admin

பணத்திற்காக சீதனச் சந்தையில்

உனது வாழ்க்கையை விற்கும்

ஆண் ஜாதியே ….

நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம்

பேரம் பேசி வாழ்க்கையை விற்கும்

நிலையில் இந்த ஆண் மகனா???

அவமானம்…அவமானம்….

கேவலம்….. கேவலம்…

உன் நிலை கேவலம்

 

பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி

பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும்

நீ மட்டும் எந்த வர்க்கம்…..

வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம்

செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம்…

எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம்

இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம்….

எதுவும் வேண்டாமாம்

அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம்…

அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான்

சீதனப் பிச்சை…

 

படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள்…

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று …

பெண் மனம் புரியாது

தன் மகனுக்காய் வரதட்சனை…

தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம்

ஆணைப்பெற்ற அம்மாக்களின்

அகங்காரம்-இது

 

நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட

நாங்கள் பொம்மைகள் அல்ல

மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள்

பணம் செலுத்தி பல் இளித்து

பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை…

 

கை நீட்டி பிச்சை வாங்கும்

மானமற்ற ஆண்களே !!!!!!

சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும்

ஒவ்வொரு கண்ணீர் துளிகளும்

உம் வாழ்வை அழிக்கும்

சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள்

என்பதை மறவாதீர்கள்….

 

நான் சந்தித்த சீதனக் கொடுமையில்

வாழ்விழந்து இளமையைத் தொலைத்து

முதிர் கன்னியாய் மூலையில் முடங்கிக் கிடக்கும்

ஓர் அன்புச் சகோதரியின்

இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனை

நிறைந்த கண்ணீர் துளிகளின் உண்மை

வெளிப்பாடாக எழுதப்பட்டது ….

 

(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது)

-பிரியமுடன் யாஸ்மின் யஹ்யா

source: www.saynotodowry.blogspot

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb