Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”

Posted on December 3, 2012 by admin

[ ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” – “துப்பாக்கி” படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். “மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை” என்பது உண்மைதான்!

இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

இதுபோன்ற சமூகத்தை பிளவுபடுத்தி வயிறு நிரப்பும் இந்த சுயநலக் கும்பல் அப்பட்டமான சமூக விரோதிகளே! 

படம் எடுத்த இந்த மிருகங்களை முஸ்லிம்கள் துன்புறுத்தாமல் விட்டது அவர்களின் மனிதத்தன்மையின் உயர்வு. மிருகங்களுக்கு தெரியாதுதான்; ‘தான் ஒரு மிருகம் என்பது’!!! அதனால் தான் என்னவோ பல மிருகங்களும் சேர்ந்து ஒரு மிருகப்படத்தை எடுத்துள்ளன!!!

முஸ்லிம்கள் மீது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியை கொட்டியிருக்கும் இந்த சமூக விரோத படக்குழுவினர்மீது வசதி படைத்த எவராவது அல்லது எந்த இயக்கமாவது நீதிமன்றத்தை நாடி இவர்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இதை எவருமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே!] 

 {jcomments on}

   ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” 

…நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம் 

“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.

படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வ…ரூபமெடுக்கத் தொடங்கியது.

இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.

சரி ஒரு வாதத்துக்காக ஆக்‌ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.

ஆக்‌ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன் அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.

இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.

அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.

எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல

இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.

நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.

தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்‌ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான். அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?

படத்தில் டைட்டிலுக்கு முன் “எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!

சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும். (நன்றி M.M. Abdulla)

”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” – “துப்பாக்கி” படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை என்பது உண்மைதான் – இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

இதுபோன்ற சமூகத்தை பிளவுபடுத்தி வயிறு நிரப்பும் இந்த சுயநலக் கும்பல் அப்பட்டமான சமூக விரோதிகளே! 

படம் எடுத்த இந்த மிருகங்களை முஸ்லிம்கள் துன்புறுத்தாமல் விட்டது அவர்களின் மனிதத்தன்மையின் உயர்வு. மிருகங்களுக்கு தெரியாதுதான் தான் ஒரு மிருகம் என்பது!!! அதனால் தான் என்னவோ பல மிருகங்களும் சேர்ந்து ஒரு மிருகப்படத்தை எடுத்துள்ளது!!!

முஸ்லிம்கள் மீது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியை கொட்டியிருக்கும் இந்த சமூக விரோத படக்குழுவினர்மீது வசதி படைத்த எவராவது அல்லது எந்த இயக்கமாவது நீதிமன்றத்தை நாடி இவர்களுக்கு கடுமையான தண்டனையை வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதை எவருமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே!]] 

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb