Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மறுமைக்காக இன்பவாழ்கையை தியாகம் செய்த ஆஸியா அலைஹிஸ்ஸலாம்

Posted on December 1, 2012 by admin

மறுமைக்காக இன்பவாழ்கையை தியாகம் செய்த ஆஸியா அலைஹிஸ்ஸலாம்

ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொடியவனான ஃபிர்அவ்னுடைய மனைவியாக இருந்தார்கள். அரசனுடைய மனைவி அரசியாவார்.

ஆடை அணிகலன்கள் மாட மாளிகைகள் சுவையான உணவுகள் பஞ்சு மெத்தைகள் பணியாட்கள் இப்படி பலவிதமான வசதிகள் அரசிக்கு செய்து தரப்படும்.

ஃபிர்அவ்ன் யாரை கொலை செய்ய துடிக்கிறானோ அந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈமான் கொள்கிறார்கள். இதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இன்பங்களை ஃபிர்அவன் பரித்தான். அத்துடன் இஸ்லாத்தை ஏற்றதற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தான்

இந்நிலையில் ஃபிர்அவ்னுடைய கொடுமைகளுக்கு பயந்து இஸ்லாத்தை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விட்டுவிடவில்லை. அரண்மனை இன்பங்களுக்கு மயங்கி சத்தியத்தை மறந்துவிடவில்லை. மாறாக இறைநம்பிக்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத்துணிந்தார்கள்.

இந்த உலக வாழ்வு சிரமத்திற்குரியதாக ஆகிவிட்டாலும் மறுமையின் வாழ்வை சிறப்பிற்குரியதாக ஆக்கித்தருமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்து பாதுகாப்பைத் தருமாறு பிரார்த்தித்தார்கள்.

”என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக!

ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக!

அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!”

என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால்

அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66 : 11)

இந்தப் பெண்ணிடத்தில் இருந்த உறுதி நமது சமுதாயத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது. உலகின் அற்பு சுகங்களுக்காக மார்க்கத்தை ஒதுக்குபவர்கள் பலரை காண்கிறோம். இவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு ஆஸியா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று மன உறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் குறித்து ஒரு வசனத்தை நமக்கு அருளியுள்ளான். உலக மக்களுக்கு அவர்களை அழகிய முன்மாதிரியாக ஆக்கியுள்ளான்.

எனவே ஒரு முஸ்லிம் துன்பங்கள் வரும்போது மனம் தளராமல் நேரான வழியை நோக்கி செல்ல வேண்டும். அற்ப சுகங்களுக்காக மறுமைவாழ்வை அவன் இழந்து விடக்கூடாது இறைவனுடைய கட்டளையை செயல்படுத்துவதற்கு எத்துணை தியாகதையும் செய்யத்தயாராக இருக்க வேண்டும்.

-சங்கை ரிதுவான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb