Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புறத்தோற்றம் ஏமாற்றும்! உரையாடி உணர்வீர்!

Posted on November 21, 2012 by admin

    புறத்தோற்றம் ஏமாற்றும்! உரையாடி உணர்வீர்!    

நெடிய உருவம். கனத்த சரீரம். பயமுறுத்தும் உருவத்துடனான புறத்தோற்றம் கொண்டோரிடம் நெருக்கமாகப் பழகும்போது அகத்தினுள் குழந்தைத் தனமுடையோராகவிருப்பர்.

புறப்பார்வையில் தம்மை மேதாவியாகக் காட்டுவதில் கவனம் செலுத்துவோர் உள்ளனர். நிரம்ப விஷயங்கள் தெரிந்திருக்கும். அறியலாமெனக் கருதி உரையாடினால், தோற்றத்திற்கும் வெளிப்படும் சொற்கள், சிந்தனைகளுக்கும் துளியும் பொருத்தமில்லையென அறிவு அறிவிக்கும். பெருங்காயமில்லா காலிடப்பாவென உணர்வர். வாழ்வில் காணக்கூடிய நிஜம்.

பார்ந்தலுக்குப் பங்கரையாகவிருப்பர். மிடுக்கு தோற்றமிருக்காது. குள்ள உருவம். மெல்லிய தோற்றம். மதிக்கத்தக்கவராக அல்லாத நிலை. அருகில் சென்று அளவளாவினால் கருத்துக்கள் அருவி போன்று கொட்டும். அறிவுச் சுரங்கமே உள்ளத்தினுள்ளிருக்கும். வெட்டி எடுத்து வெளிவரும் ஒவ்வொன்றும் ஏற்கத்தக்கவையாக, பயனுள்ளவையாகக் கருதவும், காது கேளவும் மனம் தூண்டும். அத்தகையோர் குறித்து ஒளவையின் பழம் பாடல் ஒன்று கூறுகிறது.

”மடல் பெரிது தாழை” தாழை மரத்தின் பூ இதழ் பெரியது ஆனாலும் மனத்திற்கு இதமான மணம் வீசக்கூடிய மலர் அல்ல.

”மகிழ் இனிது கந்தம்” மகிழம் மரம் சிறிய பூ இதழ்களைக் கொண்டது. மனத்திற்கு இதமான மணம் தரக்கூடிய சிறப்புக்குரியது மகிழம் மலர். இந்த ஒப்பீடுக்கொப்ப,

”உடல் சிறியர் என்று இருக்க வேண்டா” காண்பதற்கு சிறிய உருவமாக இருப்போரைக் குறைத்து மதிப்பிடாதீர். எள்ளி நகையாடாதீர். அவர்களில் விஷய ஞானமுள்ளோரும் இருப்பர்.

”கடல் பெரிது மண்ணீரும் ஆகாது” அள்ள அள்ளக் குறையாத வற்றாத நீரைக் கொண்டது தான் கடல். குடிப்பதற்கு ஏற்ற நீர் அல்லவே அது! ஒரு பொருளைக் கழுவுவதற்குக் கூட உதவாதே!

”அதன் அருகே சிற்றூரல் உண்ணீரும் ஆகிவிடும்” கடற்கரையில் தோண்டப்படும் குழிக்குள் ஊறிவரும் நீர் சிறிதளவு தான். குடிக்கவும், மனிதர் உயிர் வாழவும் பயன்படுகிறது.

கருத்து; சிறிய உருவம், சிறிய ஒன்று எதுவானாலும் இறைவனது படைப்பை ஏளனமாகக் கருதக்கூடாது. தனது படைப்புகளுக்குள்ளாக அளவிடமுடியாத ஆற்றலை, அற்புதத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வோர் படைப்பும் வெளிப்படுத்தும் வலிமை. சக்தி ஆயிரங்கோடி வியப்பை ஏற்படுத்தக்கூடியவை. சிந்தனை ரீதியாக சுவைக்கணும். ஒளவை பாடல் வலியுறுத்தும் அறவுரையிது.

-ஜெ. ஜஹாங்கீர்

முஸ்லிம் முரசு நவம்பர் 2012

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb