Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“ஜமாத்துல் உலமா” மாத இதழின் ஆசிரியர் முஹம்மது இபுராஹீம் ஹஜரத் காலமானார்கள்

Posted on November 20, 2012 by admin

மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்த “ஜமாத்துல் உலமா” மாத இதழின் ஆசிரியர் முஹம்மது இபுராஹீம் ஹஜரத் காலமானார்கள்

திருநெல்வேலி: ஜமாத்துல் உலமா மாத இதழின் ஆசிரியரும், நாடறிந்த மார்க்க மேதையுமான மறைந்த மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களின் மகனுமான மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலானா மௌலவி எம்.எ.முஹம்மது இபுராஹீம் பாக்கவி ஹஜரத் தமது ஐம்பத்து ஆறாவது வயதில் 20.11.12 இன்று காலை நான்கு மணி அளவில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜிவூன்.

மௌலானா அவர்கள் நேற்றைய முன்தினத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். உணர்வு திரும்பாத நிலையில் இன்று காலை நான்கு அளவில் மறைந்தார்கள்.

அன்னாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

நெல்லையில் முன்னேற்றம் புக் டிப்போ மூலம் ஜமாஅத்துல் உலமா மாத இதழும், மார்க்க நூல்களும், இஸ்லாமிய பிரசுரங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றி பல்வேறு நூல்களும் வெளியிட்டு பணிபுரிந்தவர்.

ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாநகரச் செயலாளராகவும்,

தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் துனைச் செயலாலராகவும்.

திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்க்க அணிச் செயலாலராகவும்,

முஸ்லிம் அநாதை நிலையம்,

திருநெல்வேலி ஹிலால் கமிட்டி,

சர்வ சமய கூட்டமைப்பு,

மத நல்லிணக்க நடவடிக்கை குழு

முதலான அமைப்புக்களில் மிகச்சிறந்த பணிசெய்தவர் ஆவார்.

பல்வேறு இடர்பாடான காலகட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கட்டிக்காப்பதில் முன்னணி தளகர்த்தராக அரும்பணியாற்றினார்.

மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்தவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் பிழை பொறுத்து மேலான சுவனபதி அருள பிரார்த்திப்போம்.

எல்.கே.எஸ்.மீரான் முகைதீன்,

மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்.

திருநெல்வேலி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb