மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்த “ஜமாத்துல் உலமா” மாத இதழின் ஆசிரியர் முஹம்மது இபுராஹீம் ஹஜரத் காலமானார்கள்
திருநெல்வேலி: ஜமாத்துல் உலமா மாத இதழின் ஆசிரியரும், நாடறிந்த மார்க்க மேதையுமான மறைந்த மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதுலி அவர்களின் மகனுமான மார்க்க அறிஞர் அல்ஹாஜ் மௌலானா மௌலவி எம்.எ.முஹம்மது இபுராஹீம் பாக்கவி ஹஜரத் தமது ஐம்பத்து ஆறாவது வயதில் 20.11.12 இன்று காலை நான்கு மணி அளவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜிவூன்.
மௌலானா அவர்கள் நேற்றைய முன்தினத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். உணர்வு திரும்பாத நிலையில் இன்று காலை நான்கு அளவில் மறைந்தார்கள்.
அன்னாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
நெல்லையில் முன்னேற்றம் புக் டிப்போ மூலம் ஜமாஅத்துல் உலமா மாத இதழும், மார்க்க நூல்களும், இஸ்லாமிய பிரசுரங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றி பல்வேறு நூல்களும் வெளியிட்டு பணிபுரிந்தவர்.
ஜமாஅத்துல் உலமா சபையின் நெல்லை மாநகரச் செயலாளராகவும்,
தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் துனைச் செயலாலராகவும்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்க்க அணிச் செயலாலராகவும்,
முஸ்லிம் அநாதை நிலையம்,
திருநெல்வேலி ஹிலால் கமிட்டி,
சர்வ சமய கூட்டமைப்பு,
மத நல்லிணக்க நடவடிக்கை குழு
முதலான அமைப்புக்களில் மிகச்சிறந்த பணிசெய்தவர் ஆவார்.
பல்வேறு இடர்பாடான காலகட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கட்டிக்காப்பதில் முன்னணி தளகர்த்தராக அரும்பணியாற்றினார்.
மிகச்சிறந்த மார்க்க மேதையாகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அளப்பரிய பணி செய்தவர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் பிழை பொறுத்து மேலான சுவனபதி அருள பிரார்த்திப்போம்.
எல்.கே.எஸ்.மீரான் முகைதீன்,
மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்.
திருநெல்வேலி.