இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்! (1)
CNM சலீம்
[ மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.
“இஸ்லாம் என்பது உலக விடுதலை மார்க்கம். அதில் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது. இஸ்லாம் வழிகாட்டாத துறைகள் இந்த பூமியில் வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது” என்று ஜும்ஆ மேடைகளிலும் இன்னபிற சபைகளிலும் நீட்டி முழங்கும் முஸ்லிம் அறிஞர்கள், அதைச் செயல்வடிவமாக நிரூபித்துக் காட்டும் வண்ணம் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது.
அல்லாஹ்வுடைய மார்க்கம் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வில் இஸ்லாத்தை “கருத்தியல்” பாடமாக போதித்ததைக் காட்டிலும் நடைமுறை வாழ்வின் வழிகாட்டியாகவே போதித்து, அதன்படியே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டும் சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மார்க்கத்தை “தத்துவங்களின் தொகுப்பாக” சில பிரிவினரும், ‘சடங்கு சம்பிரதாயங்களின்’ தொகுப்பாக சில பிரிவினரும் கருதுகின்றனர்.
இஸ்லாத்தை சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளின் விடி வெள்ளியாக, சிக்கலில் தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகப் பொருத்த வேண்டியது ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் கடமையாகும்.]
இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்! (1)
மக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீர், காற்று, கடல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் ஏறக்குறைய மாசடைந்து விட்டன. விவசாயம் இரசாயன மயமாகி, உணவுப் பொருட்கள் பூச்சி மருந்துகளுடன் இரண்டறக் கலந்து நஞ்சாகி – நாசத்தை உள்ளடக்கிக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன. வேறுவழியில்லாமல் அவற்றை உண்ணும் மக்கள் புதுப் புது விதமான உயிர்க் கொல்லி நோய்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர்.
எச்சரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் எத்தனைப் பேரின் கவனத்திற்குச் சென்றுள்ளது? எவ்வளவு பேர் இதை கவனத்தோடு எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மைகளை உள்ளடக்கியது என்பதை அன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் நிதர்சணமாக உணர்த்துகின்றன.
சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறையும் (கீபிளி) என்ற) உலக சுகாதார அமைப்பும் சேர்ந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, இந்திய மக்களின் உடல் நலம் மிக மோசமான வகையில் சீர்குலைந்து வருவதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத துறைகளில் அந்நிய சக்திகள் மற்றும் தனியார் துறைகளின் ஆதிக்கம் எந்த அளவிற்குப் பரவியுள்ளது என்பதையும், இந்திய அரசுத் துறைகளிலும் கொள்கை முடிவுகளிலும் அந்த சக்திகள் எந்தளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் விளக்குகிறது.
அந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த, சுகாதாரத்திற்கான பிரதமரின் ஆலோசகரான மருத்துவர் சிவக்குமார் என்பவர் கூறுகிறார்:
இந்தியாவில் ஆண்டுதோறும் 4 கோடிப் பேர் நோயின் காரணமாக வறுமையின் கோரத்திற்குத் தள்ளப்படுகின்றனர். பணம் இல்லாததால் 30 சதவிகித மக்கள் மருத்துவமே பார்ப்பதில்லை. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 47 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக தங்களின் பூர்வீகச் சொத்துக்களை விற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். 48 சதவிகித மக்கள் மருத்துவத்திற்காக கடனாளியாகின்றனர். “சுகாதாரத் துறையின் கொள்கை முடிவுகளும் திட்டங்களும் சாதாரண மனிதனின் கழுத்தை இறுக்குபவனாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
1960 களில் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். அந்தப் பஞ்சத்திலிருந்து மீள வேண்டுமானால் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானியான ‘நார்மன் போர்லாகின்’ என்பவர் மூலம் அமெரிக்கா ‘தூண்டில்’ போட்டது. அந்தத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட இந்தியாவில் ‘பசுமைப் புரட்சி’ கொண்டு வரப்பட்டது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் உயிரோட்டம் நிறைந்த இந்திய மண்ணில் இரசாயனத்தையும் பூச்சி மருந்துகளையும் கொட்டி, மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி, அதை உண்ணும் மக்களை அந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட 40 – 50 ஆண்டுகளுக்குள்ளாகவே பெரும்பெரும் நோய்களின் பிடியில் தள்ளிஸ. இப்போது மருத்துவமனையே கதி என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் :
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 7 1/2 கோடி தமிழர்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இன்று நோயாளிகளாக மாறிவிட்டனர். ஒரு வியாதிக்கு மருந்து உட்கொண்டால் பல வியாதிகளை உற்பத்தி செய்யும் இயற்பண்பு கொண்ட ஆங்கில (அலோபதி) மருந்துகளை வாங்கிக் குவித்து, அதை மருந்து என்ற நிலையில் உட்கொள்வதாக இல்லாமல் அதை உணவாகவே உட்கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தைலங்கள் இல்லையென்றால் தாய்மார்களுக்கு தூக்கம் போச்சு என்ற நிலை அதி வேகமாகப் பரவலாகிக் கொண்டிருக்கிறது.
தங்கமும், வெள்ளியும் தமிழ்ப் பெண்களின் சொத்துக்களாக இருந்த நிலைமாறி, மாத்திரைகளும் மருந்து பாட்டில்களுமே சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு இன்று அவை வீடுகளில் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த அவலநிலை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கப் போகிறது என்று மிரட்டுகிறது மேற்கூறிய ஆய்வறிக்கை. பஞ்சமும் நோயும் எதிர்கால சந்ததிக்கு நாம் வழங்கப் போகும் பரிசாகப் போகிறது என்பதை மேற்படி ஆய்வறிக்கையின் மூலம் நாம் அறியும் போது நெஞ்சமே அதிர்கிறது.
நகரங்களில் வாழும் சில கொடுமதியாளர்களின் கோணல்புத்தி காரணமாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கிராமங்களில் நாசகாரத் திட்டங்கள் அமுல்படுத்தப் படுகின்றன. கிராமங்களில் வாழும் அப்பாவி மக்கள், இந்த நாசங்களெல்லாம் ஏன் ஏற்படுகின்றன என்பதை அறியாமலேயே அவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசின் கிராமப்புற சுகாதாரத் துறையோ ஊட்டச்சத்து இல்லாமல் படு நோஞ்சானாகக் கிடக்கிறது.
அரசு வெளியிட்டுள்ள கிராமப்புற சுகாதாரம் குறித்த புள்ளி விவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். ஒருலட்சத்து பத்தாயிரம் மருத்துவர்கள் தேவைப்படுகின்ற நிலையில் வெறும் 26 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். சிறப்பு நிபுணர்கள் 59 ஆயிரம் பேர் தேவை. ஆனால் இருப்பதோ 7 ஆயிரம் பேர். ஏழை எளிய மக்களின் நோய் நிவாரணத்திற்கு இருக்கும் ஒரே அமைப்பான ஆரம்ப சுகாதார நிலையங்களின் பற்றாக்குறை 34 சதவிகிதம்.
மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.
மாற்றுச் சிந்தனை தேவை :
மாற்றுச் சிந்தனை என்பது விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுச் சூழல், சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த, நெருங்கிய தொடர்புள்ள துறைகளாகும். இவை அனைத்திலும் ஆக்கப் பூர்வமான மாற்றம் ஏற்படுவதற்கான மாற்றுச் சிந்தனை தோன்ற வேண்டும். அது ஏற்பட்டால் தான் மக்கள் இந்த கோரமான நோய்களின் பிடியிலிருந்து மீள முடியும். ஆனால் இது அவ்வளவு எளிதாக நடக்கின்ற காரியமாகத் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் இது குறித்துத் சிந்தித்தாலே சிந்திப்பவருக்கு சிக்கல் உருவாகும் வகையில் இதன் உற்பத்தி, வர்த்தக வலைப் பின்னல் அமைந்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இங்கே உள்ள சில மக்கள் விரோத சக்திகளுக்கு காலம் முழுவதும் பல மில்லியன், பில்லியன் கோடிகளைக் கொட்டித் தரும் ‘கற்பக விருட்சமாக’ உள்ள இந்தத் துறைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயன்றால் அல்லது அதற்கான மாற்றுச் சிந்தனையை முன்வைத்தால் – வைப்பவரின் – முயற்சிப்பவரின் “கதையை” முடித்து விடுவார்கள். இதற்கு மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் நடந்துள்ள பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன.
இந்தத் துறைகளில் உலகளாவிய வலைப் பின்னலை அமைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொள்ளைக்கார “குஃப்ர்” கும்பலின் கொட்டத்தை அடக்கும் ஆற்றலும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கும் அவன் வழங்கிய இஸ்லாம் எனும் உலக விடுதலை மார்க்கத்திற்கும் மட்டுமே இருக்கிறது.
“இஸ்லாம் என்பது உலக விடுதலை மார்க்கம். அதில் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது. இஸ்லாம் வழிகாட்டாத துறைகள் இந்த பூமியில் வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது” என்று ஜும்ஆ மேடைகளிலும் இன்னபிற சபைகளிலும் நீட்டி முழங்கும் முஸ்லிம் அறிஞர்கள், அதைச் செயல்வடிவமாக நிரூபித்துக் காட்டும் வண்ணம் இஸ்லாமியத் தீர்வை முன்வைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது.
குறிப்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலோர், இன்றைய இந்தியச் சமூகம் சந்தித்து வருகின்ற மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட எந்தச் சிக்கலுக்கும் இஸ்லாமியத் தீர்வை சரியாக முன்வைத்ததாகத் தெரியவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகக் கூடத் தெரியவில்லை.
அல்லாஹ்வுடைய மார்க்கம் மனித வாழ்விற்கு வழிகாட்டியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வில் இஸ்லாத்தை “கருத்தியல்” பாடமாக போதித்ததைக் காட்டிலும் நடைமுறை வாழ்வின் வழிகாட்டியாகவே போதித்து, அதன்படியே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டும் சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மார்க்கத்தை “தத்துவங்களின் தொகுப்பாக” சில பிரிவினரும், ‘சடங்கு சம்பிரதாயங்களின்’ தொகுப்பாக சில பிரிவினரும் கருதுகின்றனர்.
இஸ்லாத்தை சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளின் விடி வெள்ளியாக, சிக்கலில் தத்தளிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகப் பொருத்த வேண்டியது ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் கடமையாகும்.
நோயின் பிடியில் சிக்கிச் சீரழிந்து வரும் இந்திய, தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட அனைத்துச் சமூக மக்களையும் பாதுகாப்பதற்கான இஸ்லாமியத் தீர்வு என்ன?
இந்தப் பிரச்சினைகள் உருவாவதற்கு என்ன காரணமோ அந்தக் காரணத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதாகும். அது தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
விவசாயம் :
விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டாத மக்களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றோம். முதலில் விளை நிலங்களை வீட்டுமனை என்ற நோக்கமில்லாமல் விளைச்சலுக்காகவே அதிகம் வாங்கிக் குவிக்கும் சமூகமாக முஸ்லிம்கள் மாற வேண்டும். அல்குர்ஆன் மற்றும் பெருமானாரின் வழிகாட்டுதல்களை விவசாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலாப நோக்கம் பாராமல் இஸ்லாம் அங்கீகரித்த “இயற்கை” வழியிலான விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்தி விளைச்சலைப் பெருக்க வேண்டும். மனித இனத்திற்கு தீங்கு இழைக்கின்ற எந்தப் பொருளையும் விளைவிக்கக்கூடாது.
மேற்கத்திய நாசகார விவசாயக் கொள்கைகள் குறித்து மக்களிடமும் விவசாயிகளிடமும் எச்சரிக்கை செய்யவும், இஸ்லாம் அங்கீகரிக்கும் “இயற்கை விவசாயம்” குறித்து கிராமங்கள் தோறும் வழிகாட்டவும் பள்ளிவாசல் உலமாக்களை தயார் செய்ய வேண்டும். அதற்கேற்ப மதரஸா பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக விவசாயத்தைச் சேர்த்து உலமாக்களுக்கு கற்றுத்தர வேண்டும். இந்தியாவிலும் இஸ்லாமிய உலகிலும் வரலாறு முழுக்க மதரஸா பாடத்தில் விவசாயம் கற்றுத் தரப்பட்டுள்ளதை மூத்த உலமாக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.
.