தொழுகையின் ஃபர்ளுகள் மற்றும் வாஜிபுகள்
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்):
1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது
2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது
3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
4) ருகூவு செய்தல்
5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது
6) ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்தல்
7) ஸஜ்தாவிலிருந்து எழுவது
8.) இரண்டு ஸஜ்தாக்களிடையில் அமர்தல்
9) அனைத்து செயல்களையும் நிதானமாக செய்தல்
10) கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்வது
11) கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து ஓதுதல்
12) கடைசி இருப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்
13) இரண்டு ஸலாம்கள் கூறுவது
14) கடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செய்தல்
தொழுகையின் வாஜிபுகள் (இரண்டாம் நிலைக் கடமைகள்):
1) தக்பீர் தஹ்ரிமா தவிர உள்ள ஏனைய தக்பீர்கள்
2) இமாமும், தனித்து தொழுபவரும் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்” கூறுவது
3) ருகூவிலிருந்து எழுந்ததும் “ரப்பனா லகல் ஹம்து” கூறுவது.
4) ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” கூறுவது
5) சுஜுதில் “சுப்ஹான ரப்பியல் அஃலா” கூறுவது
6) இரு ஸஜ்தாக்களிடையில் “ரப்பிஃக்ஃபிர்லி” கூறுதல்
7) நடு இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்
8.) நடு இருப்பு இருத்தல்.