Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீண்ட கால வறுமை ஒழிப்பு தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை!

Posted on October 5, 2012 by admin

  ஆ.மு. ரசூல் முஹ்யித்தீன் 

[ வருமானம் தேடுவதில் காட்டும் சிரத்தையை தர்மம் வழங்குவதிலும் காண்பிக்கலாம். இல்லையேல் ஹராம் ஜாதாக்களிடம் ஜக்காத் சென்று படியும். சமூக விரோத நடைமுறை வெளிப்படும்.

சமுதாயத்தில் குழப்பம், பிரிவினை, தான் தோன்றித்தனம், கட்டுப்பாடின்மை பன்மடங்கு பெருகும். ஒரு மதவாதி இன்னொரு மதவாதியின் கழுத்தை அறுப்பார்.

ஒரு மத நிறுவனம் இன்னொரு மத நிறுவனத்தை சந்திக்கு இழுக்கும். வம்பு பண்ணும். வீராவேசம் பேசும். இன்று நடைமுறையில் உள்ள முஸ்லிம் பொதுநல அமைப்புகள், தனி நபர் நிர்வாகிகளை உன்னிப்பாக பார்த்தால் புரியும். நீண்ட கால வறுமை ஒழிப்பு தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை.

ஆடம்பரவாதிகள், ஆர்ப்பாட்டவாதிகள், ஆதிக்க வாதிகள் சமூக தலைமை போர்வையில் நிதியுதவிக்கு அலைவது அன்றாட காட்சி. புரவலர்கள் பணம் தருவதை விட நேரில் சென்று திடீர் விசிட் செய்து பார்வையிட்டு தர்ம பரிபாலன நிறுவன திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்கலாம்.

மத காரியம், தர்ம பரிபாலன யோக்யதையை நேரில் சென்று ஆய்வு செய்வீர். இல்லையேல் பணம் பாழாகும். சமூகத்தை பாழாக்கும்.]

ஜக்காத், ஃபித்ரா, ஹதியா நிதியுதவி ஏழைக்கு சென்று சேரவேண்டும். இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

மதவாதிகள், மத நிறுவனங்கள் முழு மூச்சுடன் வருமான வசூல் கவனத்தில் ஒரு புனித மாதத்தை செலவிடுகின்றனர்.

நிதியுதவி வழங்குவோர் தமது தாழ்வாரத்துக்கு, வாசலுக்கு தேவையுள்ளோரை வரவழைக்கக் கூடாது.

பொது நிறுவனம், பிரச்சார வளாகம் நடத்த திட்டமிட்ட முன் தயாரிப்பு நிதி ஆலோசனை தேவை.

500 ரூபாய், 1000 ரூபாய் பிச்சை வசூலில் இன்றுள்ள விலைவாசி சூழலில் மத நிறுவனத்தை நடத்த முடியாது. போலித்தனம், பொய்மை தொடர்ந்து அரங்கேறுகிறது. ஹராம் வருமானம் ஹராம் செலவை தேடும். தஞ்சமடையும்.

நேர்மையாளர், சேவையாளர், தொண்டுள்ளம் படைத்தோர், சுயமரியாதைமிக்கோர் பிறரின் வாசலில் சென்று யாசகம் கோரமாட்டார். கண்ணியமான வாழ்வு வாழ நினைக்கும் மூஃமின் மனிதர்களிடம் கையேந்த, முன் வருவதில்லை.

துணிந்து பிச்சையெடுப்போரை உற்சாகப்படுத்த புனித ரமலான் மாதத்தை பயன்படுத்தக் கூடாது.

வருமானம் ஈட்டுவது எளிது. உபரி வருமானம் மிக இயல்பானது. ஆனால் தேவையுள்ளோரை இன்றைய நாட்களில் கூர்மையாக, சரியாக இனம் காண்பது கடினம். மகாசிரமம்.

வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் தகுதியானவர்களிடம் சென்று சேர வேண்டும். இதற்கு புரவலர்களின் தயாள சிந்தை மட்டும் போதாது. கடும் பிரயாசை, பரிசீலனை, ஆய்வு, உழைப்பு தேவை.

வருமானம் தேடுவதில் காட்டும் சிரத்தையை தர்மம் வழங்குவதிலும் காண்பிக்கலாம். இல்லையேல் ஹராம் ஜாதாக்களிடம் ஜக்காத் சென்று படியும். சமூக விரோத நடைமுறை வெளிப்படும்.

சமுதாயத்தில் குழப்பம், பிரிவினை, தான் தோன்றித்தனம், கட்டுப்பாடின்மை பன்மடங்கு பெருகும். ஒரு மதவாதி இன்னொரு மதவாதியின் கழுத்தை அறுப்பார்.

ஒரு மத நிறுவனம் இன்னொரு மத நிறுவனத்தை சந்திக்கு இழுக்கும். வம்பு பண்ணும். வீராவேசம் பேசும். இன்று நடைமுறையில் உள்ள முஸ்லிம் பொதுநல அமைப்புகள், தனி நபர் நிர்வாகிகளை உன்னிப்பாக பார்த்தால் புரியும்.

நீண்ட கால வறுமை ஒழிப்பு தொலைநோக்கு திட்டம் எதுவுமில்லை. தொலைக்காட்சி ஊதாரித்தனம், பாமரத்தனம், வெகுளித்தனம் நிரம்பி வழிவது புலனாகிறது.

ஆடம்பரவாதிகள், ஆர்ப்பாட்டவாதிகள், ஆதிக்க வாதிகள் சமூக தலைமை போர்வையில் நிதியுதவிக்கு அலைவது அன்றாட காட்சி. புரவலர்கள் பணம் தருவதை விட நேரில் சென்று திடீர் விசிட் செய்து பார்வையிட்டு தர்ம பரிபாலன நிறுவன திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்கலாம்.

தங்க நகை மோகம் ஏழை, நடுத்தரவாதி, பணக்காரன் மூவரையும் ஆட்டிப்படைக்கிறது. இன்றைய குழப்ப மிகு நாட்களில், மீண்டும் புனித நிதியளித்து நரகவாயிலை புரவலர்கள் தேட வேண்டாம்.

மத காரியம், தர்ம பரிபாலன யோக்யதையை நேரில் சென்று ஆய்வு செய்வீர். இல்லையேல் பணம் பாழாகும். சமூகத்தை பாழாக்கும்.

– ஆ.மு. ரசூல் முஹ்யித்தீன் (முஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2012)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb